திங்கள், 1 நவம்பர், 2010

தீபாவளி வாழ்த்துக்கள்.


தீபங்களின் ஒளியில்
இருள் ஒழியும்;
தீபாவளித் திருநாள்
தீமை வெல்லப்பட்டதின்
ஒரு அடையாளம்;
ஒருவருக்கு ஒருவர்
வாழ்த்துக்கள் சொல்லி,
இன்பங்களை பகிர்ந்து,
நன்மையின் வெற்றியை
கொண்டாடி மகிழ்வோம்;
பட்டாடை உடுத்தி,
பட்டாசுகள் கொளுத்தாமல்
அப்பணத்தை துன்புற்றவர்களுக்கு
கொடுத்து பலகாரங்கள் உண்டு,
எங்கும் மகிழ்ச்சியாய்
நன்மையை வரவேற்போம்.
எல்லோரும் எல்லா
வளமும் பெற்று
ஏழைகளின் இல்லங்களில்
ஏற்றம் மிகுந்து,
என்றும் இனிமை மிகுந்து
எங்கும் ஒளிமயமாய் வாழ,
தீபாவளி நன்னாள்
வழி காணட்டும்;
கதிரவன் உதயத்தில்
வெளிச்சம் பெருகுவது போல்
தீபாவளித் திருநாளில்
நன்மைகளும் சந்தோசங்களும்
வெள்ளமென பெருகி
எங்கும் பரவட்டும்.