ஞாயிறு, 4 மே, 2014

MH370 காணாமல் போன விடயத்தில் பல ஊகங்கள் வெளிவந்தாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சில விடயங்களை ஊகிக்க வேண்டி இருக்கிறது.

( மார்ச். 17. 2014 சமூகவலைதளத்தில் எழுதிய எனது பதிவு…)

MH370 காணாமல் போன விடயத்தில் பல ஊகங்கள் வெளிவந்தாலும் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக சில விடயங்களை ஊகிக்க வேண்டி இருக்கிறது. 

கடத்தப்பட்டால் கடத்தலின் பின்னணியில் ஏன் இஸ்ரேல் அரசின் ஆபத்தான மொசாட் அமைப்பு இருக்கக்கூடாது? உலகத்தில் நடக்கும் வில்லங்கமான விடயங்களுக்கு மொசாட் என்ற அமைப்பை புறம் தள்ளிவிட்டு சிந்திக்க முடியாது. கதை, திரைக்கதை, வசனம் இயக்கி இயக்குநரின் பெயரில் இருந்து விநியோகஸ்தர்களின் பெயர் வரை இவர்களுக்கு சம்பந்தம் இல்லாமல் 100வருட நாடகத்தொடரை எழுதிவைப்பதில் இந்த அமைப்புக்கு சலைத்ததாக எதுவும் இல்லை… தன்நாட்டு எல்லை அச்சுறுத்தல் கொண்ட ஈராக், எகிப்து, சிரியா, பலஸ்தீனம், லெபனான், ஜோர்தான் என்று இந்த நாடுகளுக்குள் அரசியல் தளம்பலை உண்டுபண்ணி நிரந்தர இருப்பை தீர்க்கதரிசனத்தோடு தீர்மானிப்பவர்கள் யூதர்கள்.

( வடக்கு கூட்டணிபடை + அமெரிக்கபடை = ஆப்கானிஸ்தான் - தலிபான்)
( குர்தீஸ்படை + அமெரிக்கபடை = ஈராக் - சதாம் அரசு )
( சுன்னிப்போராளிகள் + அமெரிக்கபடை= சிரியா - ஷியா அரசு )
அரசஇராணுவம் + மேற்குலக நிகழ்ச்சிநிரல் = எகிப்து - மோர்சி அரசு )
தன்கையை கொண்டு தன்னை குத்தவைப்பதில் அமெரிக்கவுடன் இணைந்த மிகச்சிறந்த கூட்டாளி இஸ்ரேல்.
ஆனால் ஷியா பிரிவினர் அதிகம் வாழும் ஈரானில் இந்த அரசியல் சமநிலையை குழப்புவதற்கு ஏதுவான காரணங்கள் தான் இப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிரிய போராளிகளை கொண்டு ஈரான் மீது எதிர்காலபோரை நிறைவேற்றுவதற்கு அசாட்டுக்கு ஈரான் அளித்துவந்த ஆதரவே போதுமானது. இதைவிட நாசிச கொள்கை கொண்ட உக்ரைனை ரஷ்யா முட்டுவதன் மூலம் யூத அரசு ஒரு கல்லில் 5 மாங்காய்களை அடிக்கமுடியும். ரஸ்ய ஆதரவு ஈரானுக்கு இல்லாமல் போவதற்கும் ரஸ்ய சீன நட்பு அடியோடு தூண்டிக்கப்படுவதற்கும் ரஸ்யாவின் பெயரால் நாமம் போட இந்த அமைப்பால் மிகச்சிறப்பாக செய்ய முடியும். அதற்கான தொழிநுட்பம், இராணுவபலம், பலநாட்டுகுடியுரிமையுடன் பிறப்பிலே மொசாட் அமைப்புக்கு தத்துக்கொடுத்தவர்களின் பல கதைகளை சரித்திரங்களில் பதியப்பட்டிருக்கின்றது.

உதாரணங்களுக்கு நிறைய விடயங்கள் உண்டு. ஆனால் டைப்பண்ணநேரம் இல்லை.... சில விடயங்களை நேரமும் காலமும் தீர்மானிக்கும் வரை காத்திருப்போம். இதை என்தனிப்பட்ட சந்தேகமாக பதிகிறேன். ஏதும் விமர்சனம் இருப்பின் முன்வையுங்கள். 
© அ. எல்றோய் ( மார்ச். 17. 2014 சமூகவலைதளத்தில் எழுதிய எனது பதிவு…)

வியாழன், 1 மே, 2014

தொழிலாளர் தினவாழ்த்துக்கள் 2014 - MAY DAY



உழைப்பவர்களை போற்றும் தினம் இது 
உலகத்தவர்கள் போற்றும் மேதினமிது
வியர்வை சிந்தும் மனிதர்களை 
வியந்து பார்க்கும் நேரமிது

அக்கிரமங்களை கண்டெழுந்து
அழிக்கத்துணிந்தோர் ஆயிரமானோர்
சர்வதேச புரட்சியும் தடைகள் கடந்து
சரித்திரமானது உரிமை வென்று

உழைப்புக்காக குரல்கொடுத்தோரை நினைத்திடுவோம்
உணர்வுக்காக உயிர்கொடுத்தோரை உயர்திடுவோம்
பிழைப்புக்காக ஊர்பிரிந்து உலகை செதுக்கும் - எம்
பிள்ளைகளையும் ஒருதரம் வாழ்த்திடுவோம்

வாழ்வதற்கான பணத்தை பெற்றிடுவோம் - பணத்திற்காக
வாழ்வதை வெறுத்திடுவோம்
விழிதிறந்து உழைத்திடும் விதைகளெல்லாம்
விடியலின்போது விருட்சமாய் விளைந்திருக்கும்

அடிமை அச்சத்தை தவிர்த்திடுவோம்
அஞ்சாத உழைப்புக்கு வழிசமைப்போம்
விடுமுறை நாளுக்கான கொண்டாட்டத்தை தவிர்த்து
வியர்வைக்கான நாளாய் கொண்டாடுவோம். 
------ அன்புடன் அ. எல்றோய் --------

புதன், 23 ஏப்ரல், 2014

பச்சைக்காதலியே


அன்பான பச்சைக்காதலியே...
என்னை அழைத்திடவா! உன்னை அணைத்திடவா! 
பாசமழையில் உன் அன்பில் நான் நனைந்திட,
உன் பசும்போர்வையால் எனை துவட்டிட வா…:)

© அ. எல்றோய்

புலம்பெயர்வு '95'


பிறந்தது ஒர் இடம்
தவழ்ந்தது ஒர் இடம் 
வளர்ந்தது ஒர் இடம் 
பிரிந்தது ஒர் இடம் 
படித்தது பல இடம் 
பாதுகாத்தது ஒர் இடம் 
பகுத்தறிவு தந்தது ஒர் இடம் 
தொழில் செய்தது ஒர் இடம் 
செய்த தொழிலோ பல இடம் 
பூவூரை விட்ட புலம்பெயர்வு '95'
இன்னும் என்னை விரட்டுகிறது.
பொருளாதார யுத்தமாக… 


( கிறுக்கல் - அ.எல்றோய் )

நரிக்கூட்டங்கள்….

யுத்தம் தின்ற பூமியில் எச்சம் தேடும் நரிக்கூட்டங்கள்...
சட்டம் போட்ட கருவறைக்குள் பதுக்கித்தாவும் பரதேசிகள்...
கொட்டம் அடக்க குரல்வளையில்லா குழையோன் - நீங்கள் 
எட்டும் நிழலில் ஏட்டுடன் நிழலாடுவது ஏனோ… 

ஆக்கம் - அ. எல்றோய்

கொமன்வெல்த் - அடிமைகளின் கூட்டமைப்பு

கொமன்வெல்த் அமைப்பு பிரித்தானியாவின் முன்னாள் முடிக்குரிய நாடுகளின் கூட்டமைப்பு. 'வளங்களை சூறையாடியவர்கள், பிரித்தாளும் தந்திரங்களை மேற்கொண்டவர்கள், மரணவியாபாரிகள், மக்களை அடிமைப்படுத்தியவர்களை' உலகமயமாக்கல் என்ற நாகரீக போர்வை போர்த்திக்கொண்டு துதி பாடுகிறோம். "நாங்கள் உங்கள் அடிமையங்க..! இதுவும் ஒரு நவீன காலனியத்துவம்தான்… - அ. எல்றோய்

புதன், 26 பிப்ரவரி, 2014

மீள்குடியேற்றத்துக்காக…. - கவிதைத்தொகுப்பு

மீண்டும் கடிகாரம் பின்னோக்கி ஓட வேண்டும்.
விட்டுச்சென்ற என் காதலை மீளபிடிக்க வேண்டும்.
கற்பனையின் உச்சத்தை எட்டும் போது 
கவிதைகள் மட்டுமே வருகிறது. 
அக்கவிகளில் உன் முகஓவியம் மட்டும் தெரிகிறது.
கண்சிமிட்டும் நேரத்தில் தடுமாறிய தூரிகை கிறுக்கல், 
என்நெஞ்சினில் கரிய நிறபக்கங்களை மட்டுமே விட்டுச்சென்றன. 
வலிசுமக்கும் மனதின் விழி சிரிப்பை மட்டும் அறிவார் பலர்.
கலைந்து செல்லும் கார்மேகம் கூட
கண்ணீர் கொடுப்பதை புரிவார்கள் சிலர். 
உச்சத்தில் இருந்தாலும் உள்ளத்தில் வித்தியாசமான 
கவியை மட்டும் குடியேற்றினேன். மீள்குடியேற்றத்துக்காக....!


© அ. எல்றோய்

கடவுளே வலியாய் கொடுத்துவிட்டார்

சுற்றும் பூமியில்
சுழன்று அடிக்கும் பித்தன் நான்.
விழித்தெழுத்து பார்க்கையில்
வியப்போடு வெளி பார்க்கிறேன்

கலை தாவும் ஆவலை
கடவுளே வலியாய் கொடுத்துவிட்டார்
மலை தாவும் வலிமை பெற
மனதை உடைத்து பெயர்த்துவிட்டார்



உறவுகள் உண்டு இவைக்கு
உள்உணர்வுகள் இல்லை
ஓடித்திரியும் கனவுகளை எனக்குள்
ஒளித்து வைக்க துணிவுமில்லை

அறிமுகமில்லா யார்யாரோ
அன்பாய் அணைக்கிறார்கள் ஒருபுறம்
ஆழமான சொந்தங்கள்
ஆப்பாகின பலபுறம்

தேடலில் உள்ள ருசிதனை
தேக்கி வைக்க இயலவில்லை
காட்டினிலே உள்ள கனிவினைபோல்
கார்பட்டிலே காணமுடிவதில்லை

புழுதியில் கிளப்பிய பயணம்
புலம்பெயர்வாக கற்றுக்கொடுத்தது
எழுதிய விதியை மாற்ற
என் பெருமானுக்கும் பொறுப்புமில்லை

தவிப்போடு யான் வேண்ட
தலை தடவி எனை கூர்ந்து
அடிபடு மகனே என்று
அன்பாய் சொல்லிவிட்டார்



பகலையும் இரவையும்
பண்பாய் அரவணைத்தேன்
பாசத்தையும் நேசத்தையும்
பாயுக்குள் சுருட்டி வைத்தேன்


இடைவிடா தேடலில்
இசை எனக்கோர் இளைப்பாற்றி
புணர்ந்து விட்ட உறவுபோல்
புகைப்படம் எனது பொண்டாட்டி


மூச்சிறைக்க ஓடுகிறேன்
மூடுபனி விலகவில்லை
பேச்செடுக்க மறுக்கிறது
பேசும் பொருள் அருகிலில்லை



சிறகடிக்கும் சிந்தனைகளுக்கு
சிறகே வரமாக வேண்டுகிறேன்
முப்பொழுதும் கற்பனை தொடர
முடிவற்ற பயணத்தை தேடுகிறேன்…


© அ. எல்றோய்