ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

மதவேறுபாடுகளில் வேட்டையாடும் மனிதவர்த்துக்கு "மதருசி" என்பது அலாதி சுவையானது…!

மனித உணர்வுகளை ஜக்கியப்படுத்துவதற்கும் உணர்வுபூர்வமாக கிளர்த்தெழுவதற்கும், பல்வேறுபட்ட முட்டாள் காரணங்களும் மாயைகளும் இந்த உலகில் மனித வாழிடங்களை சூழ்ந்துள்ளன. இந்த விடயம் உலகின் எந்த மக்களாளும் சரி! அரசாளும் சரி! பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ளும் சமூகத்தவன் ஆனாளும் சரி! தவிர்க்க முடியாத ஓமோன்களை சூடேற்றி கிளர்ந்தெழவைக்கும் சமூக அடையாளங்கள், ஜாதிவேறுபாடுகள், வர்க்கவேறுபாடுகள், மதவேறுபாடுகள், நிறவேறுபாடுகள், அந்தஸ்துவேறுபாடுகள் பணவேறுபாடுகள், நிலவேறுபாடுகள், பிரதேசவாதங்கள், அடிப்படைவாதங்கள், நகரகிராமிய ஒதுக்குமுறை என்று தேடி தேடி சங்கங்களையும் சமூகங்களையும் ஆட்சிகளையும் தக்கவைக்க, கிளர்ந்தெழவைக்க இப்படிப்பட்ட அறிவிலியான விடயங்களை மனிதன் தனக்குத்தானே உருவாக்கிக் கொள்கிறான். இதன் விளைவுகள் ஆதிமனிதன் உணவுக்காக வேட்டையாடியதில் கண்ட சுகத்தையும் பெருமைகளையும் தற்கால மனித வேட்டையில் நிவர்த்தி செய்து கொள்கின்றான். இந்த சாதனைகளையும் அடக்குமுறைகளையும் இருபக்க நியாயங்களை பதப்படுத்தி தங்களுக்கான விளம்பரங்களையும் தத்தமது லாப நட்டக்கணக்குகளோடு ஊடகங்களும் துணை போய் கொண்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட வேறுபாடுகளில் வேட்டையாடும் மனிதவர்த்துக்கு "மத ருசி" என்பது அலாதி சுவையானது. இந்த வகையில் பல்வேறுபட்ட வேட்டையுகங்களை கடந்து வந்த மனித சமூகம் தற்காலத்தில் எதிர்நோக்கி இருக்கும் யுத்தங்கள் நலன்சார் பெருவல்லரசுக்கள் அல்லது புலனாய்வு அரசுக்களின் நீண்ட கால காய்நகர்தல்களின் தெளிவாக திட்டமிட்டு ஊடக உழைப்பை வெளிச்சமாக்கி ஆயுத வியாபாரத்தை சூடேற்றி புலனாய்வு காய்நகர்தல்களின் தெளிவாக திட்டமிட்டு ஊடக உழைப்பை வெளிச்சமாக்கி ஆயுத வியாபாரத்தை சூடேற்றி புலனாய்வு காய்நகர்தலை நிழலுட்டமாக நகர்த்தி, பலவருட இடைவெளியில் நகர்த்தப்பட்ட இராஜதந்திர தந்திரோபாய பிளவின் ஊடாக திறமையாக அரசியல் இருப்புக்களை இந்த கட்டுரை வழியாக அலசி ஆராய இருக்கின்றோம்…

1. நல்லிணக்கத்துக்குமான ஆத்ம திருப்திக்குமான சமூக ஒற்றுமைக்காக முன்மொழியப்பட்ட மதம் என்னும் பூதங்களுக்கு நடந்தது என்ன?

2. வன்முறையை தவிர்க்க வேண்டிய மனித மனிதபிமான மதம் எவ்வாறு சீர்குழைக்கிறது?

3. தன் மதம் சார்ந்தவன்தான் மனிதன் என்றால் பிறமதத்தவன் மிருகங்களா? இல்லை வேட்டையாடபடுபவனா? மதம் அபின் போன்றது என்ற வாதம் உண்மைக்குமானதா?

4. உலகமயமாக்கலில் மதம் செய்யும் விளம்பரம் என்ன?

5. அரசியல் இருப்புக்களையும் வியாபார உத்திகளையும் கடைப்பிடிப்பதற்காக மதகுருக்கள் மற்றும் உயர்மட்டத்தோர் எவ்வாறு மதத்தை கையாளுகின்றார்கள்?

6. ஊடகங்களும் மத விளம்பரங்களும். காலனியாதிக்க மதங்களில் பின்னணி. பாரம்பரிய மதவரலாற்றை மாற்றியமைக்கும் முட்டாள் வரலாற்று ஆசிரியர்கள் யார்?

7. நாகரீக உச்சித்தில் இருந்த இயற்கை வழிபாட்டுடன் தொடர்புடைய மனிதர்களை ஊடறுத்து சிதைத்தழித்து மதச்செருகலை கொண்டு வந்தவர்கள் யார்?

8. மதத்தை பயன்படுத்தி மனிதர்களை பிரித்தாண்டு தன்னை உலகபொலீஸ்காரனாக காட்டுபவன் யார்?

9. அன்பை புறக்கணிக்கும் மதம் எது? வன்முறையை போதிக்கும் மதம் எது? பிறந்து இறக்கும் வரை உணவுக்கு பதில் மதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட மதக்குழந்தையின் சாதனை என்ன? அக்குழந்தையின் தலைவன் யார்?

10. உண்ண வழியில்லாத மனித கூட்டங்கள் இருக்கும் போது மூடநம்பிக்கையில் உணவை விரயமாக்கும் மதக்கோமாளிகள் யார்?

11.  நவீன உலகத்தின் இயங்குநிலையை தீர்க்கதரீசனத்தோடு தீர்மானிக்கும் சக்தி எது?

சர்ச்சைக்குரிய கட்டுரைகளோடு விரைவில்…

"மனம் கொண்ட மனிதனை அணைப்போம் மதம் கொண்ட மனிதனை வெறுப்போம்" - அ. எல்றோய்