வியாழன், 29 மார்ச், 2018

செவ்வாய் கிரகத்தில் ’விலங்குகளின் மந்தை’ அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம்

Life on Mars BOMBSHELL: Shock claim 'herd of animals' spotted on Red Planet

செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது.

 இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு, ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.

 செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக, அந்த விண்கலத்தில், ‘மாஸ்ட்கேம்’ என்ற கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ரோவர்’ விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த படங்களை ஆராயும் நிபுணர்கள் அடிக்கடி  பல்வேறு விதமான யூகங்களையும்  வெளியிட்டு வருகின்றனர்.

ஒரு படத்தில், விலங்குகளின் தொடை எலும்புகள் கீழே கிடப்பது போன்று தோன்றுகிறது. படத்தைப் பார்த்த நிபுணர்கள் டைனோசர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்து விட்டன. டைனோசருக்கும் முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் வாழ்ந்து இருக்கலாம் என்று வேற்றுகிரகவாசிகள் பற்றி ஆராயும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

‘செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கு இதுவே சாட்சி’ என்று ஆன்லைன் பத்திரிகை ஒன்றில் ஒருவர் கட்டுரை எழுதி உள்ளார்.

 சமீபத்தில் அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே  எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்து உள்ளது.

இது குறித்து வேற்றுகிரக உயிரினங்கள் குறித்து  ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறும் போது பண்டைய நாகரிகத்தினர்  கட்டிட பிரமிடைப்போல அது மிகவும் நேர்த்தியாக கட்டபட்டு உள்ளது. அது ஒளியின் தந்திரமாக தெரியவில்லை ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது. இந்த பிரமிடு கார் அளவில் உள்ளது. ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம். இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். என்ற தகவலை வெளியிட்டனர்.

 தற்போது சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தை ஆராய்ந்த நிபுணர்கள் செவ்வாய்கிரக பாறைகளில் மனித எலும்பு வடிவங்கள் படிந்து இருக்கிறது. அது சிறிய வடிவிலான தலை மற்றும் சிறிய அளவிலான உடல் பகுதி மற்றும்  இரண்டு குழந்தைகளின் கைகள் போல் எலும்புகள் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். அதே போன்ற அமைப்புடன் மற்றொரு  வடிவமும் காண்படுகிறது. இது பல மீட்டர் நீளம் உள்ளதாக உள்ளது. என கூறி இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி உள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிரகணக்கான உயிரினங்கள்  மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது

இது குறித்து சதி கோட்பாட்டாளர் நீல் எவன்ஸ் கூறும் போது,  இது செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதராமாகும். இது செவ்வாய் கிரகத்தில் சுற்றுச்சூழல் ஆற்றலை வளர்க்கும் ஒரு நம்பிக்கையாகும் என்று நான் நம்புகிறேன். என கூறினார்.

இந்த படத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆராய்ந்தேன், பூமியில் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளை அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது.

இந்த படங்கள் அனைத்தும் குறைந்த ரிசுலேசன் கொண்டதாகும். இருந்தாலும் இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகள் பார்க்க முடியும்,   ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள் நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்.

 நீல் அவரது YouTube சேனலில் டிஸ்க்லோக் ஸ்கிரீன் என்ற பெயரில் அசல் காட்சிகள் வெளியிட்டார். 

தமிழர் வரலாறு - மறைக்கப்பட்ட உண்மைகள்


1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.



ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ்நாட்டு அரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.

17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
( இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல் 2010)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 2012ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள்
தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது.

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இது நிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.

புதன், 28 மார்ச், 2018

யாழ்ப்பாணத்தில் பேய்கள் - எச்சரிக்கை

கண்டிப்பா எல்லாம் இருக்கு. எங்க ஊர் கம்மாய்க்கரைக்கு மேல இருக்கிற புளியமரத்தில் பேய் இருக்கு. சுடுகாட்டுப் பக்கம் ராத்திரி நேரம் போகவே மாட்டாங்க. அங்கே கொள்ளிவாய்ப் பிசாசு அலையுமாம். ஊருக்கு தெக்காம இருக்கிற ஒத்தைப் பனை மரத்து வழியா ஒத்தையில யாரும் போக மாட்டாங்க. அதில் முனி இருக்குதாம். பஞ்சாயத்து ஆபீசுக்கு வடக்கே இருக்கிற கிணத்துப்பக்கம் நடுச்சாமத்திலே மோகினி நடமாட்டம் இருக்குதாம்.. சல்..சல்..சல்..னு சலங்கை சத்தம் கேட்குதாம். அம்மாடி நெனச்சாலே உடம்பெல்லாம் புல்லரிக்குது. பயம்மா இருக்குது. வேற ஏதாச்சும் கேளுங்க.

* யாழ்ப்பாணத்தில் பேய்கள் பூதங்கள் தொடர்பான பீதி!!மக்கள் அதிர்ச்சி!!
* இந்த சிறு வர்த்தக நிலையங்களில் ஆரம்பமான பேய் பீதி தற்போது யாழ்ப்பாணத்தின் வேறும் பிரதேசங்களுக்கும் பரவியுள்ளதனால் மக்கள் பெரும் பீதி கொண்டுள்ளனர்.
* அண்மைய அமனுஸ்ய சம்பவங்கள் கிறிஸ் பேய் பற்றிய பீதியை மீளவும் நினைவூட்டுகின்றது.
* இந்த பேய்கள் மற்றும் பூதங்கள் தொடர்பான பீதி நிலைமை குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இப்படி சில ஊடகங்களும் பேய் கதைகளை செய்திகளாக பல இடங்களில்...
* >>அதை விட அதிர்ச்சியூட்டும் கதைகளை சொல்லி என் இரவு நடமாட்டங்களை கட்டுப்படுத்தும் யாழ் தோழமைகள்..! - நேற்றைய பொழுதில்<<

பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, ரத்தக்காட்டேரி, முனி, மோகினி, சாத்தான், இவை எல்லாம் இருக்கிறதா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? இதென்ன கேள்வி? (மீண்டும் தலைப்பை படிக்கவும்)

இப்படித்தான் சொல்வீர்கள்

அநேகமாக எல்லாக்குழந்தைகளுமே இப்படி நம்புகிறவர்கள் தான். இப்படி குழந்தைகளாக இருந்து பெரியவர்களானவர்களும் இப்படி நம்புகிறவர்கள் தான். நாம் பார்க்கும் சினிமா, தொலைக்காட்சித் தொடர், படிக்கிற பேய்க்கதைப் புத்தகங்கள் பெரியவர்கள் மற்றும் நண்பர்களிடம் கேட்கிற திகில் கதைகளிலும் இப்படிப்பட்ட பேய் பிசாசுகள், சர்வசாதாரணமாய் வந்து போகின்றன. பழிக்குப் பழி வாங்குகின்றன. இல்லையா?

ஏன் இந்தக் கதைகளில் வரும் பேய்கள் நம்மை பயமுறுத்துகின்றன? முதலில் அவை நம்மைப் போன்ற உருவத்தில் இல்லை. அடுத்தது சாதாரணமாக மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களைச் செய்கின்றன. பறந்து செல்வது, நினைத்தவுடன் நினைத்த உருவத்துக்கு மாறுவது, காற்றில் மறைந்து விடுவது, வித விதமான பொருட்களை, உதாரணத்துக்கு லட்டு, பணியாரம், வடை, முறுக்கு, போன்ற அதிருசியான பண்டங்களை வரவழைப்பது, இப்படி சாதாரணமாய் நடக்க முடியாத வேலைகளையெல்லாம், திரைப்படங்களில், புத்தகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், இந்தப் பேய்கள் செய்கின்றன இல்லையா?

இவை நம் மனதில் ஒரு பயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.

உங்கள் ஊரிலுள்ள எல்லாப் பேய்களுக்கும் ஒரு கதை இருக்கும். கேட்டிருக்கிறீர்களா? இதுவரை கேட்டதில்லை என்றால் இனிமேல் கேட்டுப் பாருங்கள். பேய்களைப் போலவே, பிசாசு, முனி, மோகினி, ரத்தக்காட்டேரிகளுக்கும் தனித்தனியே கதை இருக்கும்.

இந்தக் கதைகளில் பொதுவாக பின்வரும் காரணங்கள் இருக்கும்.

1. கொஞ்ச வயதில் திடீரென இறந்து போனவர்கள்

2. உற்றார் உறவினர்களின் கொடுமைகளினால் தற்கொலை செய்து கொண்டவர்கள்

3. ஏதாவது ஒரு காரணத்துக்காக கொலை செய்யப் பட்டவர்கள்

4. பழிக்குப் பழி வாங்க இறந்த பிறகும் அலைபவர்கள்

5. நிறைவேறாத ஆசைகளோடு இறந்து போனவர்கள்

இன்னும் பல காரணங்களும் இருக்கலாம். சரி இருக்கட்டுமே.

இப்போது சிலகேள்விகள் நமக்குத் தோன்றுகின்றன.

பெரும்பாலும் இந்த உருப்படிகள் எல்லாம் ஏன் ராத்திரியிலேயே சுற்றுகின்றன? அதுவும் ஏன் ஊருக்கு ஒதுக்குப்புறமான, இருட்டான இடங்களிலேயே வசிக்கின்றன? ஏன் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே அலைகின்றன? சர்வ வல்லமை படைத்த இந்தச் சங்கதிகள் இரும்பு, செம்பு, விளக்குமாறு, நெருப்பு, இவற்றை கண்டு மட்டும் பயந்து சாவதேன்? பேய்களே இல்லாத ஊர் இருக்கிறதா? மனிதர்களுக்கு மட்டும் தான் பேயா? விலங்குகள் பறவைகள், பூச்சிகள், எல்லா உசுப்பிராணிகளுக்கும் பேய் உண்டா?

மனிதர்களை விட வளர்ச்சியடைந்த மிருக இனம் இந்த உலகில் இல்லை. அந்த மனிதனே ஆதிகாலத்திலிருந்து இருட்டைக் கண்டு பயந்தான். கண் தெரியாத இருட்டில் பல ஆபத்துகளை எதிர்கொண்டான். அதனால் இருட்டு அவனை பயமுறுத்தியது. எனவே தாங்கள் வாழ்வதற்கு பேய்களும் இருட்டைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை, தெருக்களில் பேய்கள் இருப்பதில்லை. அதிக ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் குடியிருப்பதாகச் சொல்வதும் நம்புவதும் எளிது.

என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள் இல்லையா?

மனிதன் தான் பேய், பிசாசு, மோகினி, முனி, எல்லோரையும் உருவாக்குகிறான். மனிதர்கள் இருந்தால் தான் பேய்களும் இருக்கும். மனிதர்கள் இல்லாத ஊர்களில் பேய்களும் இருப்பதில்லை. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், ஆகியவற்றுக்கு பேய்களோ, பிசாசுகளோ இல்லை. ஏனெனில் மனிதனுடைய மூளையில் தான் மற்ற அனைத்து யிரினங்களையும் விட கற்பனாசக்தியும், ஞாபகசக்தியும் அதிகம். மனிதன் மட்டும்தான் திரும்ப யோசித்துச் சொல்லும்படியான கனவுகளைச் காண்கிறான். நாம் இரவில் தூங்கும்போது காணும் பல கனவுகள் மறுநாள் காலையில் ஞாபகத்துக்கு வருகிறதல்லவா? அதை நாம் நம்முடைய நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதில்லையா?

மனித இனத்தின் வளர்ச்சியில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த பழங்கால மனிதர்கள் உணவுப்பற்றாக்குறை காரணமாக ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடப்பெயர்ச்சி செய்தனர். அப்படி போகும்போது ஏற்கனவே அங்கே இருந்த மனிதர்களுடன் சண்டை போட நேர்ந்தது. அந்தச் சண்டைகளில் நிறையப் பேர் செத்துப் போனார்கள். எஞ்சி உயிர் பிழைத்தவர்களுக்கு தங்களுடனே இருந்து இறந்து போனவர்களைப் பற்றிய ஞாபகங்கள் இருக்குமல்லவா? அவர்களுடைய நடையுடை பாவனைகள், குரல், முகம், அவர்களது விருப்பு வெறுப்புகள் எல்லாம் தெரிந்திருக்குமல்லவா? மனிதமூளையின் ஞாபக செல் அடுக்குகளில் பதிவான இந்த விவரங்கள் கனவுகளில் திடீர் திடீரென காட்சிகளாக வந்தன. கனவுகளைப் பற்றியும், மூளையின் செயல்பாடுகளைப் பற்றியும் அறியாத பழங்கால மனிதர்கள் அவற்றை இறந்து போன மனிதர்கள் ஆவி ரூபத்தில் வந்து பேசுவதாக நினைத்தனர். ஒருவேளை, வேறு உலகத்தில் அவர்கள் உயிருடன் இருப்பதாகக் கற்பனை செய்தனர். அறிவியல் பார்வையும், அறிவியலறிவும், சரியாக வளராத காலம் அது. எனவே இறந்து போனவர்கள் பேய்களாகச் சுற்றுவதாகச் சொன்னார்கள். சில பேருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் ( ஹிஸ்டீரியா ) ஏற்பட்டு இறந்தவர்களைப் போலப் பேசவும், நடக்கவும் செய்தனர்.

அறிவியல் முன்னேற்றம் இல்லாத பழைய காலகட்டத்தில் உருவான பல மூடநம்பிக்கைகளைப் போல இந்தப் பேய், பிசாசுகள், பற்றிய மூட நம்பிக்கையும் உருவாகி விட்டது. இவை கதைகள் மூலமாக பரம்பரை பரம்பரையாகக் குழந்தைகளுக்குச் சொல்லப் பட்டு வருகின்றது. குழந்தைகளைப் பயமுறுத்த அவர்களைச் சொன்னபடி கேட்க வைப்பதற்காக பெரியவர்கள் சொல்கிற இந்தக் கதைகள் பசுமரத்தாணி போல மனசில் பதிந்து விடுகிறன. பெரியவர்களான பிறகும் இருட்டிலும், ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளிலும் போகும் போது இந்தக் கதைகள் சிறு வயதில் ஏற்படுத்திய பய உனர்வுகளைத் தூண்டி விடுகின்றன. அந்த மாதிரியான நேரங்களில் இலை உதிர்ந்து விழும் சத்தம், பூச்சிகளின் கீச்சொலி, ஏன் நம்முடைய காலடிச் சத்தமே கூட பயமுறுத்துகிறது. சுற்றிலும் கேட்கிற சிறு ஒலிகளும், இருட்டும், சேர்ந்து அடிவயிற்றைப் பிசைகின்றன. பய உணர்வு தாக்குகிற முதல் உறுப்பு வயிறு என்பதால் வயிறு கலங்கி ‘ வெளிக்கி” வருவது போலவோ, ’ ஒண்ணுக்கு’ வருவது போலவோ உணர்வு தோன்றுகிறது. சிலருக்கு இந்தப் பய உணர்ச்சி காய்ச்சலை ஏற்படுத்தி விடுகிறது.

மற்றவர்களுக்கு இது போதும். அவனை பேய் அடித்து விட்டது என்று சொல்லி விடுவார்கள். அப்புறம் இது கதை கதையாகக் கண்,மூக்கு,காது, வைத்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கும். இப்படியே இந்தக் கதைகளில் பேய், பிசாசுகள், வாழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

மற்றபடி இவை இருப்பதற்கு எந்த விதமான அறிவியல் அடிப்படையும் கிடையாது. அப்படியா?

ஆமாம். பூமி தோன்றியதிலிருந்து கோடிக்கணக்கான உயிரினங்கள் பிறந்து இறந்து விட்டன. அவையெல்லாம் பேய்களாக மாறினால் என்ன ஆகும்? அனைத்து உயிரினங்களுக்கும் மரணம் என்பது இயற்கையானது. ஒவ்வொரு உயிரினமும் தங்களுடைய பரிணாம வளர்ச்சியின் வழியாக தங்களது வாழ்நாளை அதாவது ஆயுளை உருவாக்கியுள்ளன. கொசுக்களுக்கு ஒரு வாரம், ஈக்களுக்கு ஒரு மாதம், பூனைக்கு பனிரெண்டு வருடம், யானைக்கு எழுபது வருடங்கள், மனிதனுக்கு நூறு வருடங்கள், ஆமைக்கு இருநூறு வருடங்கள் இப்படி…இப்படி… இது இயற்கையான ஆயுட்காலம்.

ஆனால் விபத்திலோ, நோயிலோ, இயற்கைச் சீற்றங்களினாலோ, எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இறந்து போகலாம். ஏன் தினசரி நம் காலடியில் நூற்றுக்கணக்கான எறும்புகள் இறந்து போகின்றன. அவையெல்லாம் பேய்களாக மாறி கடிக்க ஆரம்பித்தால்………

அப்படியெல்லாம் நடக்காது. மற்ற உயிரினங்களை விட்டு விடுவோம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகு கோடிக்கணக்கான மனிதர்கள் இந்த பூமியில் பிறந்து வளர்ந்து இயற்கையாகவோ, அகாலமாகவோ, இறந்து போயிருக்கிறார்கள். அவர்கள் பேய்களாக மாறியிருந்தால் மக்கள் தொகை பெருக்கம் மாதிரி பேய்த்தொகைப் பெருக்கம் அதிகமாகி நாம் இருப்பதற்கே இடமிருக்காதே. நாம் இப்போது நின்று கொண்டிருக்கும் பூமிக்குக் கீழ், வசித்துக் கொண்டிருக்கும் வீடுகளுக்குக் கீழே பூமியில் நூற்றுக்கணக்கான வருடங்களாக இறந்து போன உயிரினங்களும், மனிதர்களும், மக்கி மண்ணாகிக் கிடக்கின்றனர். இது ஒரு தொடர் சங்கிலி. பிறப்பதும் இறப்பதும்.இப்போது புரிகிறதா? பேய்கள் எங்கேயிருக்கின்றன? நம்முடைய கற்பனையில் தான்.

மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியில் தான் உணர்ச்சி செல்கள் இருக்கின்றன. பயம், மகிழ்ச்சி, ஏமாற்றம், பாசம், சுகம், இப்படி உணர்ச்சிகளின் பிறப்பிடமாக ஹைபோதாலமஸ் இருக்கிறது. இந்த செல்களில் தூண்டுதல் ஏற்பட்டதும், நினைவிலிருந்து கற்பனைச் சித்திரங்கள், சினிமா, தொலைக்காட்சித் தொடர்களிலிருந்து உருவான பிம்பங்கள் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றன. உடனே நாளமில்லாச் சுரப்பிகளின் தலைவனான பிட்யூட்டரி சுரப்பியின் ஆணையின் பேரில் அட்ரீனலின் சுரப்பி திபுதிபுவென சுரக்கிறது. உடனே உடலெங்கும் புல்லரிக்கிறது. வயிறு கலங்குகிறது. மற்றவை தொடர்கின்றன.

மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்தும் பூசாரிகள், சாமியார்கள், உருவாகி எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். இந்தப் பேய்களையும் பேயோட்டும் சாமியார்களையும் எளிதாக விரட்டி விடலாம். எப்படி? பேய்களுக்கு வெளிச்சம் என்றால் பயம். அதுவும் அறிவியல் வெளிச்சம் என்றால் அவ்வளவு தான்.

தலை தெறிக்க ஓடி விடும்.

டைம் டிரவல் - கால பயணம் சாத்தியமா?

டைம் டிரவல் ( கால பயணம் ) எனும் விடயம் எல்லோரும் தலையை பித்துக்கொள்ளும்  விடயம் பலருக்கும் இன்னும் தெளிவில்லை. பலருக்கு இன்னும் இப்படி ஒரு விடயம் இருப்பதே தெரியாது . இறைவன் காலத்தை கடந்தவன் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம். எம்மாலும்  கடக்க முடியும்.

இறந்த காலத்துக்கு செல்ல முடிந்தால் நாம் இழந்தவற்றை செய்யலாம். பிரபலமானவர்களை பார்க்கலாம் .நாம் தவறவிட்ட யாருடன் வேண்டுமானாலும் கதைக்கலாம் . உதாரணத்திற்க்கு நியூட்டனை சந்திக்கலாம், ராஜ ராஜ சோழனை சந்திக்கலாம். எதிர் காலத்துக்கு சென்று நம் உலகை கவனிக்கலாம்.



காலத்துக்கு விளக்கம் கேட்டால் ஒருவராலும் விளக்கம் கொடுக்க முடியாது. காலம் என்பது மிக மிக விளங்குவதற்கு கடினமான விடயம் . முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன். நேரத்தை பார்க்கவும் முடியாது தொடவும் முடியாது. ஆனால் அதன் விளைவுகளை நாம் உணர முடியும். எமக்கு வயதாகிறது , மரங்கள் வளருகின்றன போன்றவற்றின் மூலம் காலம் என்ற ஒன்று எம்முடன் நகருவதை நாம் உணரலாம். நீங்கள் இப்போது மவுசை வைத்து கிளிக் செய்து கொண்டு இருக்கிறீர்கள் அந்த ஒவ்வொரு நொடியும் இமைக்கும் பொழுதில் கடக்கிறது. கடக்கும் நிமிடங்களை நிறுத்த முடியாது. ஆனால் அதை நாம் உணருகிறோம். ஒவ்வொரு நொடியும் இறந்த காலத்திற்க்கு  செல்கிறோம் .


இன்னும் விரிவாக விளக்க வேண்டுமானால்,  நாம் காரில் பயணிக்கும் போது நேர் பாதையில் (நீளம் ) பயணிக்கிறோம், வளை பாதையில் (அகலம் ) பயணிக்கிறோம் . அதே ஒரு உயரமான மலை பாதையில் வளைந்து வளைந்து ஏறுகிறோம் ( உயரம் + நீளம்+அகலம் ). மூன்று பரிமாணங்கள் உண்டு . நான்காவது பரிமாணம் தான் நேரம். அதாவது நாம் பயணம் செய்யும் காரின் காலத்தை அளவிடலாம் (அதுவும் ஒரு அளவுகோல் தானே ) . அப்படியானால் கண்ணுக்கு தெரியாத மிக மிக குறுகியது தான் நேரம் . இன்னும் எவ்வளவோ பரிமாணங்கள் இருக்கின்றன. 

அதாவது இரு நேரங்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்கிறது . அவை இரண்டையும் தொடர்பு படுத்துகிறது தான் நேரம் . 


இறந்த காலத்துக்கு கொண்டு செல்லும் டைம்  டிரவல் இயந்திரம் மிகவும் சக்த்தியை உறிஞ்சும் இயந்திரமாக காணப்படும் . ஒவ்வொரு குகைக்குள்ளும் செல்வது போல அமைய வேண்டும் என்பது ஒரு ஊகம். 

இது சாத்தியம் என்பது ஐங்ஸ்டெயின் ரிலேடிவிட்டி தியரி சொல்கிறது ( E =MC ^2 ). அதாவது ஒளியின் வேகத்தில்(3 *10 ^8 ms) சென்றால் நாம் இறந்த காலத்துக்கோ நிகழ் காலத்துக்கோ செல்லலாம் என்பது அந்த தியரி . 


இயற்கையில் எதிர்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் எம்மால் போக முடியுமா?
ஒரே பதில் வார்ம்ஹோலேஸ்(வார்ம்ஹோலஸ்) என்பது பௌதீகவியலாலரின் கருத்து .  

ஒவ்வொரு தேடல்களுக்கும் இயற்கையில் நாம் காணும் விடயங்களில் இருந்து விடை கிடைக்கும் . அதே போல நாம் காணும் சடப்பொருட்கள் . உதாரணமாக பூல் விளையாட்டு பார்த்திருப்பீர்கள் . பந்து மிகவும் வழுக்கும் தன்மை உடையது. விளையாடும் மேசையும் மிக மிக தட்டை. ஆனால் அதை மிக மிக தொழில்நுட்பம் பாவித்தால் அங்கு நிறைய துளைகள் காணப்படும். பந்திலும் நிறைய துளைகள் காணப்படும். இவ்வாறன துளைகள்  மூன்று பரிணாமங்களிலும் காணப்படுகிறது. 

ஆனால் இது நான்காவது பரிணாமமான நேரத்திலும் காணப்படுகிறது . அணுவை விட மிக மிக சிறிய இடைவெளிகள் நேரத்திலும் காணப்படுகிறது .அளவிட மிக சிறியது . மிக மிக சிறிய இடைவெளிகள், விரைவான குறுக்கு பாதை , இரு வேறு நேரத்தையும்  இடத்தையும் அந்த இடைவெளிகள் இணைக்கின்றன . மில்லியன் ட்ரில்லியன் சென்டி மீட்டர் ஒரு சதுர குறுக்குவெட்டு பரப்புக்கு இருக்கலாம் . மனிதனால் போக முடியாதா அளவில் காணப்படுகிறது .     

டைம் டிரவல்  இயந்திரம் செய்ய வேண்டிய வேலை என்ன ?
இந்த துளைகள் மனிதனால் செல்ல முடியாதவை. பௌதீக விஞ்ஞானிகள் முயற்ச்சி அந்த துளைகளில் ஒன்றை பெரிதாக்கினால் அதனுள் மனிதனை செலுத்தலாம் என்பதே. அதற்க்கான முயற்ச்சிகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. மனிதனை செலுத்த  முடியா விட்டாலும் செயற்க்கைகோளை 
விண்வெளியில் வைத்தே  இவ்வாறு டைம் இயந்திரம் மூலம் எதிர் காலத்திட்ட்க்கு கொண்டு செல்லலாம் .

இவை அனைத்தும் சாத்தியமா? மேலும் டைம் டிரவல்  பற்றிய தகவல்களுடன்...!
இதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள் போன்றவற்றை அடுத்த பதிவில்  இடுகிறேன் .  

ராஜேந்திர சோழன் - "அலைகடல் மீது பல கலம் செலுத்தி..!"


வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டும் கடந்து விட்டது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன்.

''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை.


'ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?''

'' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான்.

சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது.

கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும்.

அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன!''

''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது?''

''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது!

இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது!''

''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது?''

''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்!''

''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே?''

''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை!''

''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை?''

''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன!

இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா?’ என்று அலறத் தோன்றுகிறது!''

நாடகக் கலை


ஆடல் பாடல் இவைகளே பன்னெடுங்காலமாக நாடகம் என அறியப்பட்டு வந்திருக்கின்றன. மனித வாழ்க்கையில் ஆடலும், பாடலும் சிறப்பான இடத்தை வகிக்கின்றன. அசைவுகளும், ஓசைகளும் காலம் காலமாக மனித மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருகின்றன. தன்னுடைய மனத்தின் நுண்ணிய சலனங்களையும், அழகுணர்வுகளையும் இவைகளின் மூலமாகவே மனிதன் அடையாளம் கண்டு வந்திருக்கிறான். தன்னுடைய சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி வந்திருக்கிறான். ஒரு வளர்ச்சிப் போக்கில் ஆடல், பாடலுடன் கதையைச் சொல்வது என்கிற நிலையில் நாடகம் தோன்றுகிறது. குழுச்சமூகங்கள் நிலவிவந்த ஒரு காலகட்டத்தில் இவை குழுச் செயல்பாடாகவும், குழுவின் அடையாளத்தைப் பேணவும், ஒரு கலாச்சாரப் பகிர்தலுக்கான தளமாகவும் பயன்பட்டிருக்கின்றன.

கிராமப் புறங்களில் மதச்சடங்குகளுடன் இணைந்த சில அதீத நடவடிக்கைகளின் பின்னணியைப் பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட மனம் தளைகளிலிருந்து விடுதலை பெறவும், பங்கு பெறுபவர்களும் பார்வையாளர்களும் வெளி உலகைக் கடந்து செல்வதற்கான முகாந்திரத்தையும், சுதந்திரத்தையும் இங்குப் பெறுவதையும் பார்க்க முடியும். தமிழ்ச் சமூகம் இதற்கு விதிவிலக்கல்ல. தொலைக்காட்சி, காணொளி, திரைப்படம் என்று பலவகையான தாக்கங்கள் மிகுந்த இன்றைய காலகட்டத்திலும் சில கிராமங்களில் கூத்துகள் நடைபெற்றுக் கொண்டிக்கின்றன.. மதச் சடங்குகளிலும், திருவிழாக்களிலும் கூத்துக்களே இடம்பெறுகின்றன. வருடம் தோறும் அண்ணன்மார் கதை கொங்குநாட்டுக் கிராமப்புறங்களில் நிகழ்த்தப்படும்போது மக்கள் பாறைகளின் மீது நின்று கொண்டு பார்ப்பதாகச் செய்திகள் வரும்.

கூத்துக்கள் உள்ளிட்ட நம்முடைய நாட்டுப்புற நிகழ்கலைகள் இத்தகைய ஒரு சமூகப்பங்கு கொள்வதை உறுதி செய்தவை. ஒவ்வொரு தனிமனிதனும் தானும் ஒரு சமூகக் குழுவின் அங்கமாக இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுத் தன்னுடைய அழகுணர்ச்சியின் வடிகால்களை இவைகளில் தேடி வந்திருக்கிறான்.

தொழிற்புரட்சி விளைவித்த விஞ்ஞான மாற்றங்கள், ஐரோப்பியர் வருகை, குழுச்சமூகம் சிதறுபடல், அச்சு எந்திரத்தின் தோற்றம் போன்றவை உலகெங்கும் நாடகம் குறித்த அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. தனிமனித உணர்வுகள் அங்கீகரிக்கப்பட்டு இலக்கியம் பெரும் மதிப்பு பெறுகின்றன. காட்சித் திறன் கொண்ட நாடகம் கருத்துத் தளத்திலும் பிணிக்கும் தன்மை கொண்டது எனக்கண்ட கிரேக்கம் துன்பியல் மனித உணர்வுகளை நாடகங்களில் அறிமுகப்படுத்தியது. மனித நடத்தைகளின் ஏற்ற இறக்கங்களை சேக்ஸ்பியர் நாடகங்களில் கவிதைகளாக வடித்தார். படிப்படியாக நாடகம் காட்சித் திறனும், சுவையும், சமூகப்பாங்கும் கொண்ட ஒரு ஊடகம் என்பது உணரப்பட்டது.

19ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சி பெர்னாட்ஷா, இப்சன், செகாவ் போன்ற எண்ணற்ற நாடகாசிரியர்களை உலகிற்கு வழங்கியது. நடனங்கள், பாடல்கள் வாயிலாகத் தன்னை நிறுவிக்கொண்ட நாடகம் படிப்படியாக மனித உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களைக் களனாகக் கொண்ட பிரதிகளையும் உலகிற்கு அளித்தது.

ஆனால் இந்திய நாடகப் பாரம்பரியம் என்பது பெரும்பாலும் நிகழ்வு சார்ந்ததாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. இங்கும் சிறந்த சமசுக்கிருத நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவை பேச்சு வழக்கில் இல்லாத மொழியில் எழுதப்பட்டிருந்தால் கூத்து, ஜாத்ரா, நௌடங்கி, தமாஷா போன்ற நாட்டுப் புறக்கலை மரபுகளின் வடிவாக்கத்தையே இந்திய நாடகம் சார்ந்திருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சி இந்திய மொழிகளில் உரைநடைக்கு இணையாக நாடகப் பிரதியையும் எடுத்துச் செல்ல உதவியது. ஆனால் தமிழில் நாடகம் அதற்குரிய இலக்கிய மதிப்பைப் பெறவில்லை. நடனத்திலிருந்து நாடகம் தோன்றியதால் அது முழுவதும் ஆடல், பாடல் சமபந்தப்பட்ட விசயமாகவே கருதப்பட்டுக் கூத்துக் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே மாறிவிட்டது. படைப்புக் கலைஞர்கள் நாடகத்தில் அதிக ஈடுபாடு காட்டவில்லை. நாடக நிகழ்வுகள் என்பவை பெரும்பாலும் தொடர்ந்த நிகழ்த்துதலால் பெற்ற வாய்மொழிச் செய்திகளின் அடிப்படையிலும் பரம்பரைச் செயல்பாடுகளாகவே வெளிப்பட்டன.

இலக்கியங்கள் என்பவை, கல்வி அறிவு பெற்ற புலவர்களாலும், ஆடல் பாடல் சம்பந்தப்பட்ட கூத்து வகை நாடகங்கள் பாமரர்களாலும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இங்கு ஒரு தொடர்ந்த இடைவெளி உருவாகிப் போனது. நாடகம் என்பது மனதைக் கிளரச்செய்து இன்பமூட்டிக் காமத்தை அதிகப் படுத்துவது என்று சமணம் போன்ற மதங்கள் பிரச்சாரம் செய்தன.

‘கூத்தாடுமிடத்தில் அறிவுடைய சான்றோர் எவரும் செல்லார்’ என்று ஏலாதி கூறுகிறது. இலக்கியம் என்பது அறிவு சார்ந்த செயல்பாடு என்பது போலவும், நாடகம் என்பது ஜனரஞ்சகச் செயல்பாடு என்பது போலவும் ஒரு கருத்துத் தமிழ்ச் சூழலில் உருவாக்கப்பட்டது. ஆனால் இசை, நடனம் ஆகியவற்றை மேல்தட்டு வர்க்கம் படிப்படியாகச் சுவீகரித்துக் கொண்டு அவைகளை (Classical) மேன்மை பெற்றவை என்று சொந்தம் கொண்டாடத் தயங்கவில்லை. நாடகம் மட்டும்தான் விடுபட்டுப்போனது.


அதனால்தான் தமிழ்ச் சூழல் சினிமா என்கிற வலிமையான தொடர்புச் சாதனம் வந்ததும், நாடகம் தன்னுடைய தொடர்ந்த ஜோவிதத்துக்கான நியாயங்களை இழக்கத் தொடங்கியது. தொலைக்காட்சி, திரைப்படம், காணொளி என்று புயல்கள் எழுந்தாலும், எந்த நாட்டிலும் நாடகம் தன்னுடைய மதிப்பை இழந்துவிடவில்லை. நேரில் நிகழ்த்தப்படும் ஒரு அரிய கலையாக இன்றும் அது தன் கவர்ச்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

நம்முடைய தமிழ் நாட்டிலும் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பம்மல் சம்மந்த முதலியாரும், சங்கரதாஸ் சுவாமிகளும் தங்களுடைய சிறப்பான நாடகச் செயல்பாடுகளால் நாடகத்துக்கு ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்கி இருக்கிறார்கள். பின்னர் மதுரகவி பாஸ்கரதாஸ், விஸ்வநாத தாஸ் போன்ற தேசிய நாடகவாதிகள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடகம் என்றாலே பிரிட்டிசார் பயப்படும் அளவுக்கு, முன் அனுமதியின்றிப் பொது இடங்களில் நாடகம் போடக்கூடாது என்று தடைச்சட்டம் போடும் அளவுக்கு நாடகத்தை மக்கள்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். பின்னர் வந்த திராவிட இயக்கம் அரசியலையே நாடக மேடையாக்கிப் புதிய சமூக நீதிக்கான குரலை நாடகத்தில் எழுப்பி மக்களை ஒரு பெரும் அரசியல் மாற்றத்திற்கே அழைத்துச் சென்றது என்பது வேறு எங்கும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வு.

நாடத்துக்கு இத்தகைய பின்பற்றுதலும், எழுச்சியும் கொண்டிருந்த தமிழ்ச் சூழலை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உரிய நாடகாசிரியர்கள் இங்கே தோன்றவில்லை. சினிமா பட்டி, தொட்டிகளிலெல்லாம் புக ஆரம்பித்த உடனேயே முழுநேர நாடகக் குழுக்களும் நாடகக்காரர்களும் கடையைக் கட்ட ஆரம்பித்தனர். அந்த இடத்தை நிரப்ப நகைச்சுவை நாடகங்களையும், சினிமா பாணியிலான மெலோ என்ற வகை நாடகங்களையும் சபாக்கள் உற்பத்திச் செய்தன. பம்மல் சம்பந்த முதலியார், சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜ மாணிக்கம், TKS குழுவினர் காலத்தில் கூட நாடக மேடையில் ஒரு பன்முகத்தன்மை இருந்தது.

மேடை பலவித உணர்ச்சிகளின் சங்கமமாக இருந்தது. இன்று (ஹாஸ்யம்) நகைச்சுவையைத் தவிர வெளிப்படுத்துவதற்கு வேறு உணர்ச்சிகளே இல்லை என்ற நிலைக்குத் தமிழ் நாடகமேடை தள்ளப்பட்டுவிட்டது. நகரங்கள் கலாச்சார உற்பத்திச் சாதனங்களாக மாறிய உடனேயே நாடகம் ப்ரொசீனிய மேடை வடிவத்தில் நடுத்தர வர்க்கத்தின் கைக்குப் போய்விட்டது.

உரையாடலும், பங்குகொள்ளலுமாகக் கலாச்சார இருப்பின் அடையாளமாகப் பேணப்பட்ட ஒரு வடிவம் ஒரு உள்ளீட்ட மத்திய வர்க்கத்தால் நான்கு சுவர்களுக்குள் வெறும் கேளிக்கை உணர்வுகளின் வடிகாலாகச் சுருங்கிப் போகிறது, இந்தியா முழுவதும் இந்தச் சூழலுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழுக்கு நேர்ந்த அளவுக்கு இந்த விபத்து வேறு எந்த மொழிக்கு நிகழவில்லை.

வங்காளத்தில் பாதல்சர்க்கார், உத்பல்தத், சோம்புமித்ரா, ஹிந்தியில் மோகன் ராகேஷ், சுரேந்திரவர்மா, ஹபீப் தன்வீர், மராட்டியில் விஜய் தெண்டுல்கர், கன்னடத்தில் கிரிஷ் கர்னாட், சந்திர சேகர கம்பார் போன்ற நாடகக்காரர்கள் சினிமாவுக்கு மாற்றான ஒரு புதிய நாடகத்தின் இருப்பை உறுதி செய்தனர்.

இலங்கையின் வடக்கில் குழந்தை ம.சண்முகலிங்கம் மற்றும் அருட் தந்தை மரியசேவியருடைய திருமறைக் கலாமன்றம். 
இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தை பொறுத்த வரை ஓய்வு நிலை பேராசிரியர் மௌனகுரு சிறந்த வகையில் கூத்து முறைகளில் புதிய விடையங்களை சேர்த்தும் மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றங்களை செய்தும் வருகின்றார். கொழும்பில் கலைஞர் கலைச்செல்வன் அரசுடன் இணைந்து நாடகம் சம்பந்தமாக விடையங்களில் ஈடுபடுகின்றார். ஆனால் இவர்களுக்கு பின்னர் யார் அவற்றை சிறந்த வகையில் செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வியும் தொக்கி நிற்கின்றது.

மரபின் ஆழங்களையும் இன்றைய யதார்த்தங்களையும் உள்வாங்கி நாடகம் இன்று இயங்கக் கூடிய புதிய தளங்களை அவர்கள் அடையாளம் காட்டி வருகிறார்கள். ஒரு பெரிய அளவுக்குத் தமிழில் இந்த மாற்றம் நிகழவில்லை. ந.முத்துசாமி, இந்திரா பார்த்த சாரதி, ஜெயந்தன் போன்ற புதிய நாடகக்காரர்கள் புதிய யதார்த்தங்களைத் தங்கள் நாடகங்களில் வெளிப்படுத்தினாலும் சூழலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. நம்முடைய நாட்டுப்புற நாடகங்களின் கேளிக்கை மனோபாவத்தையும் கடந்த நகர்புற நாடகங்களின் கேளிக்கை மனோபாவத்தையும் கடந்த புதிய வடிவங்கள் மற்ற மொழிகளில் மக்களைச் சென்றடைந்த அளவுக்கு தமிழில் நிகழவில்லை.

ஆனால் தமிழ் கலாச்சாரச் சூழலில் இது ஒரு தொடர்ந்த போராட்டமாக இருக்கிறது. ஒரு செறிவான தளத்தில் மேற்கொள்ளப்படுகிற நாடக முயற்சிகள் மட்டுமல்ல, ஆரோக்கியமான கலை இலக்கிய முயற்சிகள் எல்லாம் இங்குப் பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் விளைவித்துள்ள வர்த்தக மதிப்பீடுகளைத் தாண்டிப் பரவலான கவனத்தைப் பெற முடிவதில்லை.

மக்கள் கற்பனையற்ற மலிவான விசயங்களைத்தான் விரும்புகிறார்கள் என்று இவர்களாகவே தீர்மானம் செய்து கொண்டு ஆழ்ந்த, செறிவான படைப்புகளை மக்கள் பார்வைக்குக் கொண்டு வருவதில்லை. இதனால் வாழ்க்கையின் மீதும் கலையின் மீதும் தீவிரமான அக்கறையும், அர்ப்பணிப்புத் தன்மையும் கொண்ட படைப்பாளிகள் வெகுஜனத்தளத்துக்கு வர இயலாமல் போகிறது. உண்மையான கலாச்சார அக்கறை கொண்ட படைப்புகளைப் பெருவாரியான மக்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இன்று பார்வையாளர் மனோபாவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கும் இத்தகைய கற்பனையற்ற ஒரு சூழலே காரணமாக அமைகிறது.

அண்மையில் மோகமுள், அவதாரம் போன்ற வர்த்தக நோக்கிலிருந்து மாறுபட்ட திரைப்படங்களுக்கு நம்முடைய திரையரங்குகளில் கிடைத்த எதிர்வினைச் சூத்திரங்களைத் தாண்டிய எந்த முயற்சியையும் சகித்துக் கொள்ள முடியாத தமிழ்ப் பார்வையாளர் மனநிலையையே பிரதிபலித்தது. ஆனால் இத்தகைய ஒரு எதிர்வினைக்குத் தமிழின் ஒட்டுமொத்தச் சூழலும் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

கடந்த 50 வருடங்களாகத் தமிழ்க் கலாச்சாரச் சூழலில் வர்த்தகச் சக்திகளின் பாதிப்பினால் செறிவான கலை, இலக்கிய முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும், கலை எழுச்சிக்கான நியாயங்களுடன் இவையே காலத்தைக் கடந்து நிற்பவையாக இருக்கின்றன. தமிழ் நாடகத்திலும் சிலப்பதிகாரம் முதற்கொண்டு ஆழ்ந்த கூறுகளை உள்ளடக்கிய மாறுபட்ட பல பிரதிகளை வெவ்வேறு காலகட்டங்களில் நாம் பார்க்க முடியும்.

அந்தந்தக் காலத்திய பொது மரபிலிருந்து வேறுபட்டு வேறு தளங்களில் சிந்தனையைப் பாய்ச்சியவை இந்தப் பிரதிகள். இவையே பின்னர் வரக்கூடிய செறிவான படைப்புகளுக்கு முன் மாதிரியாக அமைக்கின்றன. தலைவன் மற்றும் கடவுளின் சிறப்பை வழிபடுதல் அல்லது நல்லொழுக்கம் மற்றும் மத உணர்வுகள் ஆகியவற்றால் உந்தப்பட்டே பெரும்பாலான நாடகப் பிரதிகள் உருவான ஒரு காலகட்டத்தில் மனித இயல்புகளின் ஏற்றத் தாழ்வுகளைச் சிலப்பதிகாரம் எடுத்துக் கொள்கிறது.

கோவலனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லிக் கொண்டுபோகாமல் கோவலனின் வாழ்க்கையிலிருந்து சாரமான பகுதிகளை எடுத்து கால ஓட்டத்தில் மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவது குறித்த ஒரு நிதர்சன நோக்கிச் சிலப்பதிகாரம் வெளிப்படுத்துகிறது. நாடகத்தின் உணர்ச்சி நிலைகளை வலுப்படுத்த பல்வேறு குரவைக் கூத்துகள் நாடக அமைப்புகளுக்கும் தெருக்கூத்து நாடக அமைப்புக்கும் ஒரு ஆரம்பமாக அமைகிறது. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகங்கள் போன்றவை வாழ்க்கையின் அடித்தளத்தில் ஒதுக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்நிலையை எதிரொலிக்கின்றன. இவற்றில் செந்நெறி மரபுகளுக்கு மாறாக எளிமையான நாட்டுப்புற வழக்காடல்கள் நிறைந்த ஒரு பாணி கையாளப்படுகிறது.

இந்த நாடகங்கள் சமூகத்தின் விளிம்பில் உள்ள மக்கள் குறித்த ஒரு பரிவுணர்வையும், அவர்கள் வாழ்க்கை முறையின் அழகியல் தன்மைகளையும் விளக்குவனவாக அமைகின்றன. இன்றைய தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அரங்கு குறித்த பார்வைகளை இந்த நாடங்கள் தமக்குள் கொண்டிருப்பதை நாம் பார்க்கமுடியும்.

கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை இது போன்ற சிந்தனையின் இன்னுமொரு பிரதிபலிப்பு. சேக்கிழாரின் பெரிய புராணத்திலிருந்து நந்தனார் பாத்திரத்தை ஒரு குறியீடாக எடுத்துக் கொண்டு எளியவர்களுக்கும், செல்வர்களுக்கும் இடையிலான போராட்டம், உயர்ந்த சாதியினர் என்று கருதிக் கொள்பவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையிலுள்ள போராட்டம், தம் இணைத்துப் பழமைவாதிகளுடனும், வைதீக அந்தனர்களுடனும் இன்னொரு போராட்டம் என்று அன்றைய சமூக மனிதன் மேற்கொண்ட சிக்கலைப் பிரதி மையப்படுத்துகிறது.

பள்ளு, குறவஞ்சி, நொண்டி மற்றும் கீர்த்தனை நாடகங்களின் வளர்ச்சி பெற்ற பிரதியாகத் தெருகூத்து அமைகிறது. நாட்டுப்புற மக்களிடமும், பாமர மக்களிடமும் நாடகம் என்கிற வடிவத்தைப் பரவலாகக் கொண்டு சென்றது இந்தக் கூத்துப் பிரதியின் முக்கிய அம்சம். தெருக்கூத்து அடிப்படையில் ஒரு காவிய மரபைப் பின்பற்றினாலும் உடை, ஒப்பனை, உடல் அசைவுகள், இடைவெளியை உபயோகித்த விதம், பாத்திரச் சித்தரிப்பு, நிறங்கள் பற்றிய உணர்வு ஆகிய எல்லாவற்றிலும் அது ஒரு புது மொழியை உபயோகித்தது. பரம்பரை பரம்பரையாகவும் வாய்மொழியாகவும் கற்ற பல கூத்துப் பிரதிகள் காலப்போக்கில் உருவாயின. தெருக்கூத்து வெறும் நாடக வடிவமாக மட்டும் முன் வைத்து முழுச் சமூகத்தின் அடையாளமாகவும் உருமாறுகிறது.

பின்னர் சமுதாய நாடகங்கள் உருவாகின்றன. அரசியல் ரீதியாகப் பல மாற்றங்களை உலகம் சந்திக்கிறது. உலக அரங்கில் சேக்ஸ்பியரின் தாக்கம் பரவலாகிறது. தமிழில் பரிதிமாற் கலைஞர், சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் சேக்ஸ்பியர் போன்று (ரொமாண்டிசிசம்) காதல் ரசம் கொண்ட நாடகங்களை உருவாக்குகிறார்கள். பம்மல் சம்பந்த முதலியார் மேற்கத்தியக் கோட்பாடுகளின் தாக்கத்தில் புதிய பிரதிகளை உருவாக்குகிறார். துன்பியல் நாடகங்களும் தமிழுக்கு அறிமுகமாகின்றன. இந்தக் காலகட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் ஒரு புதிய நாடக எழுச்சியை உருவாக்குகிறார். நம்முடைய மரபின் புதிய உருவாக்கங்களை அவர் அறிமுகப்படுத்துகிறார். தார்மீக நிலைப்பாடுகள் குறித்த தர்க்கப் பாடல்களையும், வசன அமைப்பையும் அவர் பயன்படுத்துகிறார். இசை அவருடைய நாடகங்களில் பிரதான அம்சமாகிறது. தம்முடைய காலத்தில் தோன்றிய பல இசை நாடகங்களுக்கும் இவரே ஆதர்சமாக விளங்குகிறார்.

பாடல்களில் ஆதிக்கத்திலிருந்து ஒரு கருத்து ஆதிக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள். எளிய சமூக உணர்வுகளும், பகுத்தறிவு வாதங்களும், கருத்துப் போராட்டங்களும் கூட நாடக மேடையை அலங்கரிக்க முடியும் என்பதற்கு இவை நிரூபணமாக இருந்தன. நாடகங்களைத் தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் சக மனிதனின் பிரச்சனைகளைப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை இத்தகைய நாடகங்கள். இதே அடிச்சுவட்டில் இடதுசாரி இயக்கங்கள் சுரண்டலற்ற சமதர்மச் சமுதாயம் குறித்த பார்வைகளை நாடகங்களை முன் வைத்தன. இவையெல்லாம் தமிழில் எதிர்ப்பு நாடகப் பிரதிகள் உருவாகக் காரணமாக அமைந்தன.

இவ்வாறு மரபு குறித்தக் கண்ணோட்டமும் மேற்கத்தியக் கோட்பாட்டுத் தாக்கங்களும், சமூக விமர்சனமும் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில் தமிழில் நவீன நாடகம் குறித்த பிரக்ஞை தோன்றுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியின் பின்னணியில் கவிதை, உரைநடை போன்றவை பெரும் மாற்றங்களைச் சந்திக்கின்றன. பாரதி, பாரதிதாசன், பிச்சமூர்த்தி போன்றவர்கள் கவிதையில் புதிய வீச்சுக்களைக் கொண்டு வந்தனர்.

ஒரு புத்திலக்கிய அடிச்சுவட்டில் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்கள் தமிழ் உரைநடைக்குப் புதிய பார்வைகளையும் அணுகுமுறைகளையும் அளிக்கிறார்கள். சி.சு.செல்லப்பா தம்முடைய எழுத்து பத்திரிகையின் மூலம் கவிதை பற்றியும், உரைநடை பற்றியும் புதிய விமர்சன நோக்குகளை அறிமுகப்படுத்துகிறார். வாழ்க்கையை உள்நோக்கிப் பார்த்தலும், புதிய யதார்த்தங்களை அங்கீகரித்தலுமான ஒரு போக்கை இலக்கியம் மேற்கொள்கிறது. இந்தப் பின்னணியில் தமிழில் ஒரு புதிய நாடகப் பிரதிக்கான தேடல் துவங்குகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்ச் சூழலிலும், உலக அரங்கிலும் கலாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை நாம் பார்க்க வேண்டும். உலகப் போர்கள் மனித மதிப்பீடுகளின் சரிவையும், மனித வாழ்க்கையின் அவலத்தையும் உணர்த்தின. இந்தியச் சூழலிலும் சுதந்திரத்துக்குப் பின் சமூக அரசியல் தளங்களில் பெரும் மதிப்பீட்டுச் சரிவுகள் ஏற்பட்டன. நம்பிக்கைகளும், கனவுகளும் பொய்த்துப் போயின. கூட்டுக் குடும்பம் சிதறிப் போனது. இருப்புக்கான போராட்டத்திலேயே மனித உணர்ச்சிகள் வறண்டு போயின. வாழ்க்கை காப்பியத் தன்மை கொண்டதாக இல்லை. அது துண்டுகளாகச் சிதறியிருக்கிறது.

நம்பிக்கையின் ஊற்றுகளைத் தேடிக் கண்டடைய வேண்டும். இவ்வாறு சிதறிப்போன பிம்பங்களும், களைந்து போன கனவுகளுமாக 20ஆம் நூற்றாண்டு மனிதன் சிக்கலான வாழ்வு முறைக்குள் இயங்குகிறான். நவீன நாடகாசிரியனும் இந்தத் தளத்தில்தான் வாழ்வைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

ந.முத்துசாமி தம்முடைய நாடகங்களில் இருபதாம் நூற்றாண்டின் சிதறுண்ட முகமிழந்த மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். தம்முடைய சிறு பத்திரிகைத் தொடர்புகளின் மூலம் கிடைத்த உணர்வுகளை அடித்தளமாகக் கொண்டு சில அபத்தபாணி நாடகங்களை அவர் எழுதினர். இந்திரா பார்த்தசாரதி உள்மனக்குழப்பங்கள், (Ego) ஈகோ போராட்டங்கள், உறவுப் பிறழ்ச்சிகள் இவைகளை மையமாக வைத்து மனோதத்துவ ரீதியில் சில நாடகங்களை எழுதினர்.

இன்றைய யதார்த்தத்தின் சில வினோதமான சித்திரங்களை ஜெயந்தனுடைய பிரதிகளில் பார்க்க முடியும். புனைகதைகளை மையமாக வைத்து பேரா.ராமானுஜம் எழுதினர். இலக்கியப் பின்னணியுடன் நாடகத்துக்கு வந்த எம்.டி. முத்துக் குமாரசாமி, எஸ். ராமகிருஷ்ணன், நிஜந்தன், பிரேம் போன்ற நவீன எழுத்தாளர்கள் வாழ்க்கையின் பல சாத்தியங்களை முன்வைக்கிறார்கள். வெறும் உரையாடலை மடக்கிப் போட்டுக் கதை சொல்வது என்ற நிலையில் இந்தப் பிரதிகள் இயங்காமல் கதையிலிருந்து கதையை அழித்து வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான நுட்பமான கோட்டை இவை விலக்க முயற்சி செய்கின்றன. ஒரு சிந்தனை மரபின் தொடர்ச்சியை இந்தப் பிரதிகளின் ஊடாக நாம் பார்க்க முடியும்.

ஆனால் எழுதப்படுவதால் மட்டும் நாடகம் முழுமையடைவதில்லை. நிகழ்த்தப்படும் போதுதான் அவை முழுமை அடைகின்றன. நிகழ்த்துதலின் நுட்பங்களையும், மனோதத்துவங்களையும் எட்டாமல் வெறும் பிரதியின் பலத்தில் நாடகம் செய்ய முடியாது. நாடகத்தின் காலம், இடம் மற்றும் வெளியில் உருவகப்படுத்த இலக்கியம், கவிதை, சங்கீதம், நாட்டியம் ஆகிய எல்லாக் கலைகளின் பங்களிப்பும் வேண்டும்.

சினிமாவின் வருகைக்குப் பிறகு முழுநேர நாடகக் குழுக்கள் நாடகத்தை நம்ப வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்காங்கே தோன்றிய அமெச்சூர் நாடகக் குழுக்கள் பொழுது போக்கு நாடகத்துக்குரிய மனப் பயிற்சியும், உடல் பயிற்சியும் அற்ற நிலையிலேயே இங்கே குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு 50 ஆண்டு காலம் வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக நாடகக் குழுக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் ஒரு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. அவர்களுடைய உழைப்பு குறித்தும், கலை குறித்தும் மக்களும் அதிக ஈடுபாடும், மதிப்பும் கொண்டிருந்தனர்.

கும்பகோணத்தில் அண்மையில் வாழ்ந்து மடிந்த பாலாமணி என்கிற நாடக நடிகையின் நாடக வாழ்க்கையைப் படிக்கும்போது நாடகத்தின் மூலம் அவர் எத்தகைய வீச்சுகளையும், அலைகளையும் உருவாக்கி இருந்தார் என்பதைப் பார்க்க முடிந்தது. கவனிக்க யாருமின்றி பாலாமணி கடைசியில் ஒரு குடிசையில் இறக்க நேர்ந்தது என்பது இன்னொரு சோக வரலாறு. நாடக நடிகர், நடிகையர் தாங்கள் ஈடுபட்ட கலைக்காக தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த நிலையிலேயே நாடகம் சமூகத்தின் மதிப்புக்கு உரியதாக இருந்தது.

அத்தகைய உழைப்பும், பயிற்சியும் இன்று நாடகத்தில் அரிதாகிவிட்டன. அண்மைக் காலமாக ந.முத்துசாமி கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி முழுநேர நடிகர்களைத் தயார் செய்து வருகிறார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நடிகர்கள் பல்வேறு பயிற்சிகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு வருகிறார்கள். பல்வேறு மொழிக் குழுக்களுக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி நாடகக் கோட்பாடுகள் குறித்தும் நடிகனுக்கான பயிற்சிகள் குறித்தும் கூத்துப்பட்டறை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. கடந்த 20 வருடங்களில் தமிழ் நாடகத்தில் நடந்த முக்கியமான சோதனை முயற்சிகளைக் கூத்துப்பட்டறையே நிகழ்த்தியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது பிற இந்திய மொழி நாடகங்களையும், மேற்கத்திய நாடகங்களையும் மொழியாக்கம் செய்து நிகழ்த்தியுள்ளது.

நாற்காலிக்காரர், காலம் காலமாக சுவரொட்டிகள், உந்திச் சுழி, நிரபராதிகளின் காலம், வெள்ளை வட்டம், Gas-II, மீள முடியுமா, தூத கடோத்கஜம், பகவதாஜ் ஜீகியம், காந்தியின் கடைசி 5 வினாடிகள், காலிகுலா, காண்டா மிருகம் என்று பல நாடகங்களைக் குறிப்பிட முடியும், இதே போன்று பரிக்ஷா, வீதி ஆகிய நாடகக் குழுக்களும் வழக்கமான சபா நாடகங்களுக்கு மாற்றாக இலக்கிய உணர்வும், சமூக உந்துதலும் கொண்ட பல நாடகங்களை நிகழ்த்தியுள்ளன.

இதே அடிச்சுவட்டில் மதுரையில் நிஜ நாடக இயக்கம், சுதேசிகள், திருச்சியில் திருச்சி நாடக சங்கம், பாண்டிச்சேரியில் கூட்டுக் குரல்கள், ஆழி நாடகக் குழு, தன்னானே குழு, திருவண்ணாமலையில் தீட்சண்யா, சென்னையில் ஆடுகளம், ஐக்யா, பல்கலை அரங்கம், மௌனக்குரல், டில்லியில் யதார்த்தா ஆகிய குழுக்கள் ஒரு அர்த்தமுள்ள நாடக இயக்கத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகங்களில் நாடகத்துறை அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடகத்துக்கென மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். இன்று தலித் அரங்கம், பெண்ணிய அரங்கம், ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கம் என்ற நாடகத்தில் பல்வேறு குரல்கள் ஒலிக்கின்றன. இன்று நாடகப் பிரதியின் தளம் விரிவடைந்துள்ளது.

இத்தகைய ஒரு புதிய நாடக இயக்கத்துக்கு உரிய மன வளமும், கற்பனையும் கொண்ட பயிற்சியை அளிப்பதில் தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ராமானுஜமும் (இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகத்தில் நாடகத்துறைத் தலைவராக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர்), சாந்தி நிகேதனில் பயின்று காந்திகிராமம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.பி.சீனிவாசன் அவர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நாடகப் பட்டறைகளை ஏற்பாடு செய்து கோட்பாட்டு ரீதியிலும், நடைமுறை ரீதியிலும் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். நாடகம் குறித்த புதிய கட்டுமானங்களையும், பார்வைகளையும் தளைகளற்று மனம் ஏற்பதற்குரிய ஒரு சூழலை அவர்கள் கட்டமைக்கிறார்கள்.

அண்மையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பேராசிரியர் ராமானுஜம் 25 பேர் கலந்து கொண்ட ஒரு நாடகப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார். பட்டறையின் முடிவில் ஜரிஷ் நாடகாசிரியர் Syngeன் ‘கடலோடிகள்’ நாடகம். பங்கு பெற்றவர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. நடிக, நடிகையருக்கு ஏற்பட்ட தாக்கங்களையும், கிடைத்த அனுபவத்தையும் அந்த நிகழ்த்துதலில் பார்க்க முடிந்தது. சென்னையில் ஒரு நிரந்தரமான நாடகப் பள்ளி ஏற்பட்டு இது போன்று நாடகப் பயிற்சிகளுக்கு பரவலான வாய்ப்புகள் கிடைக்கும் போது நாடகத்தில் தேர்ந்த நடிக, நடிகையர் காலப்போக்கில் உருவாக முடியும்.

இன்று நாடகத்தின் இடம் என்ன என்கிற கேள்வி பலருக்கு எழுந்து வருகிறது. நாடகம் சிறு சிறு துகளாக மக்களுடைய வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த ஒரு வடிவம். இன்று சினிமா அசுர வலிமையுடன் ஒரு சேரப் பலரைச் சென்றடையும் அளவுக்குப் பாதிப்புடையதாக இருக்கலாம். ஆனால் நாடகம் நம் கண் முன்னே ஒரு யதார்த்தத்தை, ஒரு கனவை, நாம் இழந்து போன கணங்களை முன் நிறுத்துகிறது. ஒரு எந்திர உலகம் மனிதனின் கற்பனைகளையும், படைப்புச் சந்தியையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது.

அவன் ஒரு நுகர் பொருளாக உலவிக் கொண்டிருக்கிறான். நாடகம் அவனுடைய கற்பனைகளை மீட்டெடுக்க முடியும். ஒரு கவிதையை அவனுக்கு வசப்படுத்த முடியும், யதார்த்தத்தின் முன் அவன் வீறு கொள்ள முடியும். கற்பனையற்ற அவனுடைய வாழ்க்கையை இன்னும் அதிக கற்பனையுடன் இன்னும் அதிக படைப்பு மனத்துடன் அவன் எதிர்கொள்ள முடியும். அதற்கான ஒரு கலையின் அண்மையை நாடகம் அவனுக்கு வழங்க முடியும். அதற்கான ஒரு கலையின் அண்மையை நாடகம் அவனுக்கு வழங்க முடியும். நாடக வெளியில் ஒரு நடிகன் பார்வையாளனுடன் கொள்ளும் உறவு என்பது ஈடு இணை இல்லாதது.

ஆரோக்கியமான கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பொறுப்பேற்கிற ஒரு அரசாங்கம் சில ஏற்பாடுகள் மூலம் நாடகம் தொடர்ந்து சிறப்பாக இயங்க வழிவகைகள் செய்ய முடியும்.

செவ்வாய், 27 மார்ச், 2018

மக்களையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை!

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திரண்ட 50 ஆயிரம் மக்கள்!

"ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்”

ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? 

வெல்லட்டும் தூத்துக்குடி மக்கள் போராட்டம்.

Even after knowing the dangerous outcomes how can we allow this. #SterliteProtest #SterlitePlant

தூத்துக்குடியில் கடந்த 16 ஆண்டுகளாக நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் உடல் நலத்தை பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் குற்றங்களுக்கெல்லாம் கண்துடைப்பு தண்டனையாக ரூ 100 கோடி அபராதம் கட்டும்படி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

2010-ல் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஏ கே பட்னாயக், எச் எல் கோகலே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மேற்கண்டபடி தீர்ப்பளித்தது.

‘உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்குவதற்காக ஸ்டெர்லைட் பொய்யான தகவல்களை தந்ததும், தகவல்களை மறைத்ததும் உண்மைதான். ஆனாலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கா விட்டால் அது தொழிற்சாலையை மூடுவதில் முடிந்திருக்கும்’ என்று குறிப்பிட்டு ஸ்டெர்லைட்டின் அந்த குற்றத்தை மன்னித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.

‘1997 முதல் 2012 வரை ஸ்டெர்லைட் இழைத்த சேதங்களுக்கு நிவாரணமாகவும், உரிய அனுமதிகள் பெறாமல் தொழிற்சாலையை நீண்ட காலம் நடத்தியதற்கு அபராதமாகவும் ரூ 100 கோடி கட்ட வேண்டும். 2010-11ல் கம்பெனியின் லாபமான ரூ 1,043 கோடி முந்தைய நிதி ஆண்டில் கிடைத்த ரூ 744 கோடியை விட 40 சதவீதம் அதிகம். அதனால் ரூ 100 கோடி ரூபாய் அபராதம் என்ற கடும் தண்டனையை விதிக்க வேண்டியிருக்கிறது’ என்று சவடாலாக உறுமியிருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

‘ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கும் வேலை வாய்ப்புகள், அரசுக்கு செலுத்தும் வரித் தொகைகள், அது உற்பத்தி செய்து நாட்டுக்கு அளிக்கும் தாமிரத்தின் முக்கியத்துவம் இவற்றைக் கருத்தில் கொண்டு அபராதத்தைக் கட்டி விட்டு அது தனது நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கிறோம்’ என்று ‘பாலியல் வல்லுறவு செய்த மைனர் அபராதம் செலுத்தி விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்’ என்ற  ஆலமரத்து சொம்பு நாட்டாமையைப் போல தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே. ஸ்டெர்லைட்டின் மொத்த விற்பனை வருமானத்தில் 0.48% பெற்றுத் தரும் வேலை வாய்ப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களின் உடல் நலத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துக் கொள்ளலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்.

சென்ற நிதியாண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய ரூ 960 கோடி கலால் வரியையும், சுமார் ரூ 550 கோடி வருமான வரியையும் முழுவதுமாக செலவிட்டால் கூட நிலங்களுக்கும், கடல் வளங்களுக்கும், மக்களின் உடல் நலத்துக்கும் இந்த ஆலை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் செய்வது சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்.

சமூகத்துக்கு மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி ஸ்டெர்லைட் நிறுவனம் சென்ற ஆண்டு ஈட்டிய நிகர லாபம் ரூ 1,657 கோடி (விற்பனை மதிப்பில்ல் 8.6%). இந்த லாபத்தில் 56.64% (ரூ 939 கோடி) டுவின் ஸ்டார் என்ற லண்டனைச் சேர்ந்த வேதாந்தா குழும நிறுவனத்துக்கும், 12.45% (ரூ 206 கோடி) சிட்டிபேங்க் நியூயார்க்குக்கும் போகிறது. ஒரு ஆண்டில் ரூ 939 கோடி ரூபாய் லாபம் பெறும் வேதாந்தா, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் செய்த பங்கு முதலீடு வெறும் 336 கோடி மட்டும். அதாவது 16 ஆண்டுகளில் தனது முதலீட்டுப் பணத்தை பல மடங்கு திருப்பி எடுத்த பிறகு சென்ற ஆண்டு முதலீட்டின் மீது சுமார் 300% லாபம் ஈட்டியிருக்கிறது.

மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் தடை செய்யப்பட்டது.

அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஸ்டெர்லைட்டை இரு கரம் நீட்டி வரவேற்று 30.10.1994 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆரம்பம் முதலே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களும், உழைக்கும் மக்களும், சில கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில் ‘சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்’ என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் மக்களின் எதிர்ப்புகளை மீறி 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.

21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது. “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”

மன்னார் வளைகுடாவில் மண்டபம் அருகில் உள்ள குருசடி தீவில் பவளப் பாறைகள். (படம் உதவி : பிரண்ட்லைன்

“இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

“மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஸ்டெர்லைட் கொடுத்த பொய்யான தகவல்களையும், உண்மை நிலவரங்களை திரித்து கூறியதையும் அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து ஆலை தொடர்ந்து இயங்க வழி வகுத்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இழுத்தடித்த வாதங்களுக்குப் பிறகு 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆலையை மூடும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்தியாவின் தாமிர தேவைக்காக ஸ்டெர்லைட் தொண்டு செய்கிறது என்பது ஆதாரமற்ற வாதம். 1992-ல் இந்திய தாமிர உற்பத்தித் துறை தனியார் முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டது. 1996-ல் 62,000 டன்னாக இருந்த தாமிர உற்பத்தி 2007-ல் 9.97 லட்சம் டன்னாக உயர்ந்தது. இப்போது இந்தியாவின் தாமிர தேவை ஆண்டுக்கு 4 லட்சம் டன் மட்டுமே. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் தாமிரமும் தாமிரப் பொருட்களும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அது உற்பத்தி செய்யும் சுமார் 4 லட்சம் டன் தாமிரம் நின்று போனாலும் நாட்டுக்குத் தேவையான தாமிரத்தின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.

தாமிர உற்பத்திக்கான தொழிற்சாலைகள் ஏன் இந்தியாவில் இடம் பெயர்ந்தன?   வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின்  விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட்.

சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன.

மாசு உருவாவதையும், வெளியாவதையும் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கோ, உருவான மாசை தூய்மைப் படுத்துவதற்கோ பணம் செலவழிக்காமல் மலிவு விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் முதலாளிகளும், வாங்கி பயன்படுத்தும் பன்னாட்டு முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். சுற்றுச் சூழல் மாசுபடுவதை கண்காணிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வளி, நீர், நில மாசுகளை தொடர்ந்து வெளியேற்றி தமது சுரண்டலையும் கொள்ளை லாபம் ஈட்டலையும் தொடர்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி ஏற்பட்ட கந்தக டை ஆக்ஸைடு கசிவினால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் தீவிரமடைந்த எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை ரத்து செய்யக் கோரும் ஸ்டெர்லைட்டின் மேல் முறையீட்டை பசுமை வாரியம் விசாரித்து வருகிறது.

திருப்பூரில் சாயப் பட்டறைகள் அழித்தொழித்த நொய்யல் ஆற்றையும் அவற்றால் பாழாக்கப்பட்ட சார்ந்த விளைநிலங்களையும் வேலூர் மாவட்டத்தில் தோல் பட்டறைகளால் பாழடிக்கப்பட்ட விளைநிலங்களையும் நீர் ஆதாரங்களையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புள்ளி விபரங்கள் காட்டுவதில்லை.

உலகளாவிய உற்பத்திச் சங்கிலிகளை இணைத்து இயக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு குறைந்த செலவிலும் மக்களுக்கு அதிக பாதிப்பிலும் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்த பொருட்களை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உயர் விலைக்கு விற்று லாபம் ஈட்டி கொழுக்கின்றனர். நிலத்தையும், நீரையும், காற்றையும் அதன் மூலம் மக்களின் உடல் நலத்தையும் வாழ்வாதாரங்களையும் அழித்து விட்டு பாயைச் சுருட்டிக் கொண்டு அவர்கள் இன்னொரு நாட்டுக்குத் தமது கொள்ளையைத் தொடர நகர்ந்த பிறகு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அழிவுகளின் விளைவுகளை மக்கள் சுமக்கின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச் சூழல் அமைச்சகம், உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், ம.தி.மு.க.வின் வழக்குகள் போன்ற நீதித்துறை நடவடிக்கைகளை அத்தகைய தொழில் செய்யும் முறையின் சைட் ஷோக்களாகவே கருதி தமது சுரண்டலை தொடர்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் நடந்து வரும் மறுகாலனியாக்க நடவடிக்கைகள் மக்களை மட்டுமல்ல, நாட்டின் இயற்கை வளத்தையும் அழிக்கின்றன என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை ஒரு துலக்கமான சான்று.

வியாழன், 22 மார்ச், 2018

'டோலோனஸ்'

தூய்மைமிகு இறையுறவில் நிலைத்திருக்கவும், மாட்சிமிகு நிறைவாழ்வை இலக்காகக் கொண்ட இறை வழியில் பயணிக்கவும், இறைவனை நோக்கி நம்மை வழிநடத்துவது வேண்டுதல்கள் ஆகும்.

வேண்டுதல் கிறிஸ்தவர்களின் சிறப்பு உரிமை’ என்கிறார் மார்ட்டின் லுத்தர் அவர்கள். வேண்டு தல்கள் நம் மனித வாழ்வை புனிதப்படுத்த வேண்டுமானால், அது இறைவனுக்கு ஏற்புடையதாயிருத்தல் வேண்டும்.

‘இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்’ எதுவென்பதை இறைமகன் இயேசு ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ பற்றிய உவமையில் எளிமையாக விளக்குகிறார்.

பரிசேயரும் வரிதண்டுபவரும்.

இறைவனிடம் வேண்டுதல் செய்ய இருவர் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.

பரிசேயர் நின்று கொண்டு, ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரி தண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று வேண்டினார்.

ஆனால், வரிதண்டுபவரோ தொலைவில் நின்று கொண்டு தம் மார்பில் அடித்தவராய், ‘கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும்’ என்று வேண்டினார்.

‘பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்’ என்றார் ஆண்டவர் இயேசு.

பரிசேயர்

முதலாவது வருகின்றவர் திருச்சட்டத்தைக் கற்றுத் தேறினவர்களான பரிசேயர். ‘பரிசேயர்’ எனும் வார்த்தை ‘பரிசோஸ்’ என்ற கிரேக்க வேர்சொல்லில் இருந்து உருவானதாகும். இது, ‘தலைமை ஆசாரியர்’, ‘பரிசேயர்’ என்ற இரு பொருளைத் தருகிறது.

இவர்கள், ‘திருச்சட்டத்தை கடைப்பிடிப்பதே மானிட வாழ்வின் தலையாய இலக்கு’ என்ற கருத்தாக்கமுடையவர்கள் (மத்தேயு 23:23). அப்படியே திருச்சட்டத்தை கடுகளவும் பிசகாமல் கடைப்பிடிப்பவர்கள். எனவே, ‘தாங்கள் மட்டுமே இறைவனின் பிள்ளைகள், ஏனையோர் பாவிகள்’ என்று நினைப்பவர்கள்.

இங்கே கூறப்படும் பரிசேயருடைய நன்றியுரை அல்லது மன்றாட்டு போலியானது என்று கருத முடியாது. ஏனெனில் இது யூத குருமார்  களின் இயல்பான மன்றாட்டு தான்.

சிமியோன் பென் யோகாய் என்ற யூத குருவானவர் தனது நூலில், ‘இவ்வுலகில் இரு நீதிமான்கள் உண்டென்றால், அது நானும் என் மகனும் தான். ஒரு நீதிமான் தான் உண்டென்றால் அது நான் தான்’ என்கிறார்.

இந்த மனநிலை தான் ஒவ்வொரு பரிசேயர்களிடமும் காணப்பட்டது. இந்த பரிசேயரும் தன் மன்றாட்டில் தன் நற்பண்புகளை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்தியதோடு, கடவுளுக்கு முன்பாகத் தன்னை நீதிமானாகக் கருதுவதோடு, பிறரை அற்பமாய் எண்ணுகின்றார்.

இறைவனை நோக்கி மன்றாடுவதற்கு பதிலாக, தன் புகழைக்கூறி, சுய நீதியை நிலை நாட்டும் ஒரு செயலை செய்கிறார்.

இவர் கடவுளிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. ஏனெனில் தான் ஏற்கனவே ‘முழுமையானவன்’ என்ற நினைவு அவரிடம் மிகுந்திருந்தது.

வரி தண்டுபவர்

மற்றொருவர் வரி தண்டுபவர். ‘வரி தண்டுபவர்’ எனும் வார்த்தை ‘டோலோனஸ்’ எனும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவானதாகும்.

புதிய ஏற்பாட்டு காலத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த ரோம ஆளுகைத் தலைவரி மற்றும் நிலவரியை வசூலிக்கும் பொறுப்பு இவர்களுடையது.

இப்பணியில் பெரும்பாலும் யூதர்கள் ஈடுபடுவதில்லை. இவர்கள் மிகவும் இழிநிலையோராய் கருதப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டனர் (லூக் 19:7).

ஏனெனில் வரி செலுத்துவதை யூதர்கள் இறைவனுக்கு எதிரான பெருங்குற்றமாக கருதினர். இவர்கள் விபசார கூட்டத்தோடு சேர்க்கப்பட்டனர்.

இங்கே வரி தண்டுபவர் ‘தூய்மை நிறைந்த இறைவனின் முன்னிலையில், மாசு நிறைந்தவனாய் நிற்கின்றேன்’ என்ற குற்ற உணர்வு மிகுந்திட, அவரை நேருக்குநேர் காண அஞ்சிப் பார்வையைத் தாழ்த்தி, மார்பில் அடித்துக்கொண்டு, தூரத்தில் நின்று மன்றாடுகிறார்.

இவர் இறைவனின் திருவடியினில் தன் தீய ஆன்மாவை ஒப் படைத்து, செருக்கை விடுத்து, சுயத்தை அர்ப்பணிக்கிறார். இறைவனிடம் கருணையும், பாவமன்னிப்பும் பெற்றிட வேண்டி கதறு கிறார். இறைவனின் கருணையால் கிடைக்கப்பெறும் தூய்மையான நிறைவாழ்வுக்காகப் போராடுகிறார்.

இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்

யூதர்களின் பார்வையில் உயர்நிலையினராய் கருதப்பட்ட பரிசேயர், இழிநிலையோராய் எண்ணப்பட்ட வரிதண்டுபவர் ஆகிய இருவர் மீது விழுந்த இயேசுவின் புதிய பரிமாணப் பார்வையினை இந்த உவமையில் காணலாம்.

இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் முரண்பட்டத் தன்மையுடையவர்கள். பரிசேயர் என்பதை அன்றைய கால பக்தியுள்ள உயர்குல யூதர்களின் பிரதிநிதியாகவும், வரிதண்டுபவரை யூத சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் அடையாளப்படுத்துகிறார்.

மனித ஞானத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட இரண்டு உண்மைகள் இங்கே புலப்படுகின்றது. மாபெரும் புனிதராய் கருதியவர் நீதியற்றவராய் புறக்கணிக்கப்பட, ஏழைப் பாவியர் நீதியராய், தூயராய் ஏற்கப்படுகின்றனர்.

பரிசேயர் சமூகத்தில் உயர்ந்தவராயிருந்தும் அவர்தம் தற்புகழ்ச்சியும், தன்னலமும் நிறைந்த வேண்டுதல் இங்கே நிராகரிக்கப்படுகிறது. இழிநிலையில் வாழ்ந்தாலும் தன்னிலை உணர்ந்து, வருந்தி அறிக்கையிட்ட பணிவுமிகுந்த மன்றாட்டு கடவுளுக்கு ஏற்புடையதாகின்றது.

'செருக்குற்றோரைக்கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார், தாழ்வு நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்’, (1 பேதுரு 5:5).

புதன், 21 மார்ச், 2018

மார்ச் 21 - உலக வன தினம் இன்று!

ஆதிமனிதன் காட்டினை நேசித்தான்
காற்றை சுவாசித்தான்
இன்றையமனிதன் காட்டினை அழித்து - பணத்தை நேசிக்கிறான்.
சுவாசகாற்றுக்கு யாசிக்கிறான்...

உலகில் பருவம் தப்பாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது. 

பொதுவாக மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு அல்லது வனம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன.

காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.வெப்பமண்டலக் காடுகள் உலகில் வாழும் 50% உயிரினங்களுக்கு உறைவிடமாக விளங்குகின்றன.உலக நிலப்பரப்பில் 30 சதவீத அளவுக்கு காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன.

நிழல், இலை, காய், கனி, மணம், குணம், பானம், மழை, குளுமை, தூய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மனித சமுதாயத்துக்கு பல வழிகளும் தாவரங்கள் நன்மை தருகின்றன. மறுபுறம் பல வழிகளில் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படப் போகும் ஆபத்துகள் கடுமையாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பருவம் மாறாத கால நிலை பெரும்பாலும் சீராக இருப்பற்கு காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவே மார்ச் 21ம் தேதி உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தில் காடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மைகள் எடுத்துச் சொல்லப்படுகிறது. மேலும், வன வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் எடுத்து சொல்லப்படுகிறது. 

மனித இனம அதன் வரலாற்றில் சந்தித்துள்ள நெருக்கடியான பிரச்னைகளில் இது வரை சந்திக்காதது புவி வெப்பமடைதலால் ஏற்படும் பல்வேறு அழிவுகள். முக்கியமாக காடுகளை அழிப்பதை நிறுத்துவது மற்றும் புதிதாக அதிக மரங்களை வளர்ப்பது மூலம்தான் புவி வெப்பம் அடைதலை தடுக்க முடியும்.வனம் என்பது காட்டு விலங்குகளுக்கு உரியது. அங்குள்ள மரங்களை நாம் வெட்டி விடுவதால் மழை குறைந்துவிடுகிறது. இதனால், விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நாட்டுக்குள் நுழைந்து விடுகின்றன.

இயற்கையோடு இயைந்த வாழ்வை நடாத்தியவனாகத் தமிழன் வாழ்ந்தான் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. அன்பின் ஐந்திணையாக இருப்பினும் சரி, புறத்திணையாக இருப்பினும் சரி, அதற்குக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, வெட்சி, வஞ்சி, கரந்தை, வாகை, உழிஞை, என மலர்த் தாவரங்களின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தமையும் ஐந்திணைக்கான நிலப்பாகுபாடும் அவற்றிற்கான உயிரினங்கள் உள்ளிட்ட கருப்பொருள்களை வகுத்தமையும் இயற்கையின் மீதான ஆதித் தமிழனது ஈடுபாட்டினைக் காட்டி நிற்கின்றன.

இன்றைய நாளில் உயிரிழந்த உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான்னை நினைவு கூறுவோம். இயற்கையின் அவசியத்தை உணருவோம். அதை நேசிப்போம். பாதுகாப்போம்.

"பூமி மேல் படிந்த பசுமையான வானம் தான்.. வனம்..!" ஆம் இன்று உலக வனம் தினம்...!

International Day of Forests is celebrated on 21st March 2018. intlForestDay

செவ்வாய், 20 மார்ச், 2018

உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடான் உயிரிழந்தது

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவின் ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகத்தில் மிகவும் பாதுகாப்புக்கள் மத்தியில் இருந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம் (பெயர் சூடான்) உயிரிழந்தது என விலங்குகள் காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

World's last male northern white rhino dies

உலகில் சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகைகள் உள்ளது. ஆப்பிரிக்காவில் வேட்டையாடுதல் காரணமாக விலங்குகளின் எண்ணிக்கையானது நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் காண்டாமிருகங்கள் அதன் கொம்புக்காக வேட்டையாடப்படும் சூழ்நிலை தொடரும் நிலையில், ஆப்பிரிக்காவிலும் அவை வேட்டையாடப்படுகிறது. காண்டாமிருகங்களுக்கு இயற்கையாக பெரிய எதிரிகள் கிடையாது. அவை வயது உயர்வு அல்லது உடல்நலக்குறைவு காரணமாகவே உயிரிழக்கும். இவைகளுக்கு முக்கிய எதிரி மனிதன் மட்டும்தான்.

ஆப்பிரிக்காவில் யானைகளுக்கு அடுத்தப்படியாக காண்டாமிருகங்களே அதிகமாக வேட்டைக்காரர்களின் இலக்குக்கு ஆளாகிறது.  

இதில் ஒல் பெஜெட்டா வனவிலங்குகள் காப்பம் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு மிகவும் கவனம் பெற்று இருந்தது. உலகில் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையே மொத்தம் மூன்றுதான். அதில் இரண்டு பெண்கள், ஒரே ஒரு ஆண் காண்டாமிருகம்தான். ஒரு வேளை வேட்டைக்காரர்களின் துப்பாக்கி இந்த சூடானையும் சுட்டு விட்டால் இந்த பூமியில் இனி இந்த இனமே இருக்காது என்ற நிலையில் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்களுக்கு கென்யா அரசு பாதுகாப்பை அதிகரித்து பராமரித்து வந்தது.

இப்போது அங்கிருந்த கடைசி வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகம் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வயது தொடர்பான சிக்கல்கள் காரணமாக காண்டாமிருகம் உயிரிழந்தது என ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒல் பெஜெட்டா விலங்குகள் காப்பகம் தரப்பில் வெளியிட்ட செய்தியில், வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகத்தால் எழுந்து நிற்ககூட முடியவில்லை. மிகவும் நோய்வாடப்பட்டு, பலவினமாக காணப்பட்டது. 45 வயதாகும் வெள்ளை காண்டாமிருகத்தின் சதைகள், எழும்புகள் சிதைந்தது. அதனுடைய தோல் பகுதியில் பெரும் காயங்கள் ஏற்பட்டது, வலது காலிலும் தொற்று ஏற்பட்டு இருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே இப்போது உலகில் உள்ளது. 

எதிர்காலத்தில் செயற்கை முறையில் பெண் காண்டாமிருகம் மூலமாக இனப்பெருக்கத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடைசி வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருகம் சூடானில் பிறந்தது, இதுதான் உலகின் கடைசி ஆண் காண்டாமிருகம் ஆகும். இந்த காண்டாமிருகம் அப்போது செக் குடியரசு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் 2009-ம் ஆண்டு கென்யாவிற்கு கொண்டு செய்யப்பட்டது. அங்கு இனப்பெருக்கத்திற்கான முயற்சிகள் பெரிதும் பலன் இல்லாமலே காணப்பட்டது. காண்டாமிருகங்கள் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் சிறப்பு உணவுப்பொருட்களுடன் பராமரிக்கப்பட்டது. விலங்குகள் காப்பகத்தில் காண்டாமிருகத்தின் இனச்சேர்க்கை காணப்பட்ட போதிலும் துரதிஷ்டவசமாக கருத்தரிப்பு என்பது வெற்றிகரமாக அமையவில்லை என விலங்குகள் காப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.