புதன், 31 அக்டோபர், 2018

கப்பல் படையும் தமிழர்களும்




கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
கடலில் பயணம் செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும், கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும், அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்கு வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசா வரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.
இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்த போது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும், மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாகத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.
உதாரணம்:
தமிழா் - மியான்மர்.
சபா சந்தகன் - மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கர ை,ஒட்டன்கரை, ஊரு - ஆஸ்திரேலியா
கடாலன் - ஸ்பெயின்
நான்மாடல் குமரி - பசிபிக் கடல்
சோழா,தமிழி - மெக்ஸிகோ
திங்வெளிர் - ஐஸ்லாந்து
கோமுட்டி - ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடல், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த்தால் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.
நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.

வெள்ளி, 26 அக்டோபர், 2018

போரா, சமாதானமா—உங்களை எப்படி பாதிக்கிறது

போர் என்பது என்ன?
“போர், கடவுளால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் உலக ஒழுங்கில் உள்ளடங்கிய ஒரு பகுதியாக இருக்கிறது. போரில்லாவிடில் உலகமானது சுறுசுறுப்பில்லாமல் பொருளாசையிலேயே ழூழ்கிவிட்டிருக்கும்.”—ஜெர்மன் தேசத்து படைத்துறை உயர்தரப் பணியாளர், ஹெல்முத் வான் மோல்ட்கி
“போரை அடக்குங்கள். இது இயற்கையின் வளர்ச்சியை அடக்க முயற்சிப்பது போலிருக்கும்.”—ஜோசப் P. கோபெல்ஸ், கருத்துப் பரப்பு மற்றும் தேசீய அறிவொளியின் நாசி அமைச்சர்.
“அரசியலின் ஒரு பாகம்”—ரஷ்ய தேசத் தலைவர், லெனின்.
“ஒரு ஆட்சியாளரின் ஒரே ஆராய்ச்சி. இராணுவ முன்னேற்பாடுகளை திட்டமிட வாய்ப்பை அளித்து அதை நிறைவேற்ற திறமையை அளிக்கும் ஒரு ஓய்வு நேரமாக மட்டுமே அவன் சமாதானத்தைக் கருத வேண்டும்.”—இத்தாலிய அரசியல் தத்துவஞானி, நிக்கல்லோ மக்காவல்வி.
சமாதானம் என்பது என்ன?
“இரண்டு யுத்த காலப்பகுதிகளுக்கிடையே வரும் ஏமாற்றத்தை அளிக்கும் ஒரு காலப்பகுதி.”—அம்ரோஸ் பியர்ஸ், அமெரிக்க தேசத்து பத்திரிக்கை எழுத்தாளர்.
“படைத்துறையை சார்ந்திராத ஆட்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருப்பதால் ஏற்படும், உயிர் வீரியத்தை இழந்த நிலைக்கு யுத்தம் பரிகாரமளிக்க முயலுகிறது.”—சிரில் கன்னாலி, இங்கிலாந்து நாட்டு விமர்சகரும் எழுத்தாளரும்.
“ஒரு கனவு, அழகான ஒன்று இல்லை.”—ஹெல்முக் வான் மோல்க்.
மேலே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் கருத்துக்கள் உங்களுக்கு எவ்விதமாக தோன்றுகின்றன? போரினிடமாகவும் சமாதானத்தினிடமாகவும் ஒரு கவலையீனமான அணுகுமுறையை உங்களால் காணமுடிகிறதா? அநேக ஆட்களுக்கு விசேஷமாக ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்—ஆபத்திலிருப்பது தங்களுடைய உயிராக இல்லாத வரையில்—உயிர் மலிவான ஒன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தை அவை தருகின்றனவா? என்றபோதிலும் நீங்கள் எந்த தேசத்தாராக இருந்தாலும், சமாதானமும் ஒத்திசைவுமுள்ள ஒரு உலகிலேயே வாழ விரும்புவீர்கள் என்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமாயிருக்கிறோம்.
6000 வருட மனித சரித்திரத்தில், போரானது பல நூறு லட்சக்கணக்கில் மரித்தோரை அறுவடை செய்திருக்கிறது. இரண்டு உலகப் போர்களின் அனுபவத்துக்குப் பின்னும்கூட, சமாதானமும் ஒத்திசைவும் வெறும் ஒரு கனவாகவே தோன்றுகிறது. போர் என்ற சமீப கால புத்தகத்தில் குவென் டையர் எழுதிய விதமாகவே: “இரண்டாம் உலகப் போரின் கடந்த இரண்டு மாதங்களின்போது, ஒவ்வொரு மாதமும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மறுபடியுமாக ஒரே ஒரு தடவை, வல்லரசுகள் இப்பொழுது அவர்களிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி ஒருவரோடொருவர் போர் செய்வார்களேயானால், ஒவ்வொரு நிமிடமும் பத்து லட்சம் ஆட்கள் கொல்லப்படுவார்கள்.” அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வல்லரசுகள் போருக்குச் செல்லுமேயானால், அவை முதலாவது ஜனங்களுடைய கருத்தை அறிந்துகொள்ள அவர்களை கலந்தாலோசிக்குமா? சரித்திரம் வேறு விதமாக பதிலளிக்கிறது.
கடந்த கால போர்களும் தற்போது படுகொலை செய்யப்படுவதற்கான வாய்ப்பும் பின்வருமாறு நம்மைக் கேட்டுக்கொள்ள வழிநடத்துகிறது: “போருக்கு காரணங்கள் யாவை? போர்களுக்கிடையே வெறும் ஓய்வு நேரமாக இல்லாமல், நம்முடைய காலத்தில் மெய்யான நிரந்தரமான சமாதானத்துக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன? நிலையான சமாதானம் வெறும் ஒரு மாயமான கனவாக மட்டுமே இருக்கிறதா?