வியாழன், 1 மே, 2014

தொழிலாளர் தினவாழ்த்துக்கள் 2014 - MAY DAY



உழைப்பவர்களை போற்றும் தினம் இது 
உலகத்தவர்கள் போற்றும் மேதினமிது
வியர்வை சிந்தும் மனிதர்களை 
வியந்து பார்க்கும் நேரமிது

அக்கிரமங்களை கண்டெழுந்து
அழிக்கத்துணிந்தோர் ஆயிரமானோர்
சர்வதேச புரட்சியும் தடைகள் கடந்து
சரித்திரமானது உரிமை வென்று

உழைப்புக்காக குரல்கொடுத்தோரை நினைத்திடுவோம்
உணர்வுக்காக உயிர்கொடுத்தோரை உயர்திடுவோம்
பிழைப்புக்காக ஊர்பிரிந்து உலகை செதுக்கும் - எம்
பிள்ளைகளையும் ஒருதரம் வாழ்த்திடுவோம்

வாழ்வதற்கான பணத்தை பெற்றிடுவோம் - பணத்திற்காக
வாழ்வதை வெறுத்திடுவோம்
விழிதிறந்து உழைத்திடும் விதைகளெல்லாம்
விடியலின்போது விருட்சமாய் விளைந்திருக்கும்

அடிமை அச்சத்தை தவிர்த்திடுவோம்
அஞ்சாத உழைப்புக்கு வழிசமைப்போம்
விடுமுறை நாளுக்கான கொண்டாட்டத்தை தவிர்த்து
வியர்வைக்கான நாளாய் கொண்டாடுவோம். 
------ அன்புடன் அ. எல்றோய் --------

1 comments:

பெயரில்லா சொன்னது…


வாழ்வதற்கான பணத்தை பெற்றிடுவோம் - பணத்திற்காக
வாழ்வதை வெறுத்திடுவோம்
விழிதிறந்து உழைத்திடும் விதைகளெல்லாம்
விடியலின்போது விருட்சமாய் விளைந்திருக்கும்................அருமையான வரிகள் நீ எழுது கொண்டேஇரு உன்னை ரசித்து கொண்டே தொடர்கிறேன் ரசிகனாக

சிவா கர்ணன்