புதன், 26 பிப்ரவரி, 2014

மீள்குடியேற்றத்துக்காக…. - கவிதைத்தொகுப்பு

மீண்டும் கடிகாரம் பின்னோக்கி ஓட வேண்டும்.
விட்டுச்சென்ற என் காதலை மீளபிடிக்க வேண்டும்.
கற்பனையின் உச்சத்தை எட்டும் போது 
கவிதைகள் மட்டுமே வருகிறது. 
அக்கவிகளில் உன் முகஓவியம் மட்டும் தெரிகிறது.
கண்சிமிட்டும் நேரத்தில் தடுமாறிய தூரிகை கிறுக்கல், 
என்நெஞ்சினில் கரிய நிறபக்கங்களை மட்டுமே விட்டுச்சென்றன. 
வலிசுமக்கும் மனதின் விழி சிரிப்பை மட்டும் அறிவார் பலர்.
கலைந்து செல்லும் கார்மேகம் கூட
கண்ணீர் கொடுப்பதை புரிவார்கள் சிலர். 
உச்சத்தில் இருந்தாலும் உள்ளத்தில் வித்தியாசமான 
கவியை மட்டும் குடியேற்றினேன். மீள்குடியேற்றத்துக்காக....!


© அ. எல்றோய்