ஞாயிறு, 4 மே, 2014

கிரீமியா மீண்டும் கிழக்கோடு ஒட்டிக்கொள்ளும்

( மார்ச் 5. 2014 சமூகவலைதளத்தில் பதிவேற்றியது… )

நடக்கப்போவது இனி...

புதிய தேசம் இனி புழியப்படப்போகிறது
சிரியதேசம் சீரழிக்கப்பட்டு பலநாள் ஆகிவிட்டது
சூடுகண்ட தேசத்தை சுனாமியோடு சேர்த்து சில
பிணாமிகளால் சுடுகாடு ஆக்கப்பட்டுவிட்டது
ஆப்கானில் உள்ள ஆப்பு இன்னும் எடுபடவில்லை
ஈராக்கில் இன்னும் இயல்புநிலையில்லை
கருங்கடலில் கந்தகவாசனை மீண்டும் உணர
கிரீமியா மீண்டும் கிழக்கோடு ஒட்டிக்கொள்ளும்
பனியில் பிரிந்த தேசங்கள் இனி பழங்கதை கூற
வல்லவதேசம் வான்படை நம்பிநிற்கும்
இஸ்ரேலின் இயங்குநிலை ரானியதடத்தை மாற்ற
வல்லாதிதேச இருப்பிடம் பெருஞ்சுவரில் தடம்பதிக்கும்
ஏகாதியபத்தின் நீதி புரட்சியாகவும்
ஏதோச்சதிகார நியதி பயங்கரவாதமாகவும்
ஊடக உழைப்புக்கு உவர்ப்பாய் இருக்கும்
வெளிவிவகார வெகுளி வெந்திய தேசம்
வெட்கப்பட்டு வீட்டோவை வீட்டில் வைக்கும்
பயங்கரவாத கதைபேசி இந்தி பாக்கி கணக்கை முடிக்க நினைக்கும் -
கதை சொல்லி நதியில் கைவைக்க திபெத்து கதை பேசி அருணாவின் மேல் செம்படை கைவைக்கும்
வச்ச கைக்கு பலுஸ்கிஸ் நிழுவையில் தொங்க
தென் சீனக்கடல் மேல் சாம்பல் வாசம் மேலேலும்
ஜனநாயக கதை பேசி டொலர் தேசம் நிகழ்ச்சி நிரலை உருவாக்கும்
உருவாக்கிய கறுப்புக்கொடிப்படையை அமெ.ரஸ் இணைந் இனி அழிக்கும்
இழக்கப்பட்ட பனிபிரிவு நிலங்களை கரடி இனி கைப்பற்ற நினைக்கும்
மேற்குலகுக்கு சில அதிர்ச்சிகளை தன் அசைவுகளில் தெளிக்க
டொலர் தேசம் அமைதியில் உறக்கம் கொள்ளும்
அரபுலகின் பிரிவில் அசைபோடும் கொடி நட்சத்திரம்
ஏமன் ஊடு விசை அசைக்கும் உந்துகணையாக
புனித தேசங்கள் தன் கையை வைத்தே குத்திக்கொள்ளும்
தென்சீன எல்லை கிறிஸ்தவ தேசம் மனித அவலத்தை சுமந்து நிற்கும்
பேதையின் போதையால்- நட்பு தேசமும் கைமாறும் செங்கொடியாய்
இராவண தேசமும் தசாப்சத்தில் மூன்றாம் புனித நிலமாகி விடும்
காட்சிக்கு கூட இனி இங்கு சிலைகள் மிஞ்சாது. பக்ச வம்சம் பக்கவாதத்தில் பீடித்துக்கொள்ளும்
மீள் எழுச்சிக்கு நரபலிகள் ஆயிரம் எடுக்கப்படும்.
குமரியில் மிஞ்சிய முப்பழ தேசங்கூட கடலுள் உறக்கம் கொள்ளும்
ஆந்திரா இன்னும் நரபலி கொடுக்க செம்மரங்கள் செழித்து வளரும் - நதியால் திராவிடம் தீ தெறிக்க சினி தலைகள் வேடிக்கை பார்க்கும். கொரிய வடக்கில் அதிர்ச்சி தெறிக்க உலகம் அதிர சாமுராய் புது அவதாரம் எடுப்பார்கள்.
மாற்றம் ஒன்றே மாறாதது அணுமாற்றத்தால்
மாயர்காட்டி மறுபடி தட்டப்படும்-மக்களுக்காக
கழுகும் கம்யூனிசமும் நேரடியாக கடிபடபோவதில்லை
கடிபட்டு வலியுணர கருங்காலிக்கும் இஷ்டமில்லை…!!!

© அ. எல்றோய்
(மார்ச் 5. 2014 சமூகவலைதளத்தில் பதிவேற்றியது…)