வியாழன், 18 பிப்ரவரி, 2016

புலம்பெயர்ந்தவர்கள் Vs புலன்பெயர்ந்தவர்கள்

கைநிறைய சம்பளம். கிடைக்கும் நேரமெல்லாம் போதை ஏற்றிக்கொள்வது. ஜரோப்பிய கலாச்சாரத்தில் அடியொற்றி தோடுகளும், மிடுக்குகளும் பச்சைகளையும் குற்றிக்கொள்ள பாதுகாப்பான பெட்டலத்தில் இருப்பவர்களுக்கு தேவை ஈழம். கிடைத்தால் எத்தனை பேர் வந்து குடியேறுவார்கள் என்பது யாருக்கு தெரியும். தமிழ் கலாச்சாரத்தை அடியெற்றி தன்பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்காதவர்கள் ஈழ மண்ணில் மீள்குடியேற்ற எந்த சந்ததியை விரிவுபடுத்துகிறார்கள். இன்னும் பிள்ளைகளையும் நில புலன்களையும் தொலைத்து விட்டு ஒரு கூட்டம் கதறி அழ.! கிடைக்கும் லாபத் தொகைக்கு அவர்களுடை சொத்துக்ககளையும் பூர்வீக நிலங்களையும் டொலர்களால் சுரண்டவென இன்னொரு கூட்டம். எல்லோரும் பதுங்குவதற்கு தேவை தமிழ் மொழி. தமிழ்ஈழம். சமூகவிடுதலையின் பேரில் வியாபாரநோக்கமும் இன்று போராளிகளின் கல்லறைகள் மேல் கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது... தேசியம் இன்று அவரவர் தேவைக்காக விளம்பரமாகி வியாபாரமாகி போய்கொண்டு இருக்கிறது...