வெள்ளி, 13 ஜனவரி, 2017

PETA அமைப்பின் மறுபக்கமும் ஜல்லிக்கட்டும்

சல்லிக்கட்டு என இன்று அடையாலப்படுத்தப்படும் தமிழர்களின் பண்டைய வீர விளையாட்டான
ஏறுதழுவுதலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் PETA தலைமையிலான மிருக நல ஆர்வலர்களூடாக மேற்கொள்ளப்பட்டுவருவதை நாம் அனைவரும் அறிவோம்.

PETA அமைப்பு :

“விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) ” என்ற முழுப்பெயரை உடைய இவ் நிறுவனம், 1980 ஆம் ஆண்டு Ingrid Newkirk மற்றும் Alex Pacheco ஆகிய இருவரால் அமெரிக்காவில் தொடக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டில் சில வழக்குகள் மூலம் மக்களிடையே பிரபலமாகி இன்று விலங்குகளின் உரிமைகளுக்கான மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. (மேலதிக விபரங்கள் இணையத்தில் உள்ளன)


விலங்குகளை காப்பாற்ற முனைவதாக கூறும் இந்த அமைப்பின் மறுபக்கத்தை ஆதாரங்களுடன் இப்போது பார்ப்போம்.


PETA கொலை வீதம்!

VDACS, என்ற விவசாயத்தொடர்புடைய அமைப்பு மேற்கொண்ட கணிப்பின்படி,
ஒரு வருடத்தில் PETA அமைப்பால் மீட்கப்பட்டதாக கூறப்படும் விலங்குகளின் எண்ணிக்கைக்கும், அந்த ஆண்டு முடிவில் PETA அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த விலங்குகளிற்கும் இடையிலான எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மீட்கப்பட்ட விலங்குகள்; தத்தெடுக்கும் திட்டங்களுக்கமைய தத்துக்கொடுக்கப்படுகின்றன. சில விலங்குகள் உடல் நலம் இன்றி இறக்கின்றன. மீதி விலங்குகள் மிச்சமாக இருக்கவேண்டும்.
ஆனால், மீட்கப்பட்ட விலங்குகளில் இருந்து தத்து, நோயால் இறந்த விலங்குகளின் எண்ணிக்கைய கழித்துப்பார்க்கும் போது மிஞ்சும் விலங்குகள் PETA இன் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படும் விலங்குகளின் எண்ணிக்கைக்கு சமமாக‌ இருக்கவில்லை. அதாவது மீட்கப்பட்ட விலங்குகளில் மெகப்பெரும் எண்ணிக்கையிலான விலங்குகள் PETA அமைப்பினால் கொல்லப்பட்டுள்ளன.

இவ் விலங்குகள் தெருவோரங்கள், பிச்சை எடுப்போர், கட்டிவைத்து வளர்ப்போர் மற்றும் துன்புறுத்துபவர்களிடம் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தெருவோரங்களில் வாழ்ந்த இவ் விலங்குகள் விட்டிருந்தால் அவ்வாறே சுதந்திரமாக வாழ்ந்திருக்கும். நோய் பரப்பியாக இருக்கும் என காரணம் சொன்னால், அது விலங்கு நல அமைப்பில்லை. “மனித சுய நல அமைப்பே.
பிச்சை எடுப்போரிடம் வாழும் விலங்குகள் மகிழ்வுடன் வாழ்வ்தை நாமே கண்கூடாக பார்க்கமுடியும்.
கட்டி வைத்து வளர்ப்போர் (கண்டிக்கப்படவேண்டியது தான்) இடம் இருந்து கைப்பற்றப்பட்ட விலங்குகள். PETA வால் அமைக்கப்பட்ட சிறைகள் போன்ற கூடாரங்களில் வளர்க்கப்பட்டுள்ளன. பெரிய வித்தியாசமில்லை. (தத்தெடுக்கப்பட்டவற்றை தவிர)

PETA அமைப்பால் கொல்லப்பட்ட விலங்குகளின் வீதாசார விபரம் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கான விளக்கம் PETA அமைப்பால் இதுவரை கொடுக்கப்படவில்லை.


PETA அமைப்பானது பல நிறுவனங்கள் மூலமும் சாதார‌ன எம்மைபோன்ற மக்கள் மூலமும் நிறுவனத்திற்கு தேவையான பணத்தை ஈட்டி வருகிறது. அவ் பணம் கொடுக்கப்படுவதற்கான காரணம் விலங்குகளை பாதுகாப்பதற்கே. ஆனால், விளம்பரம் என்ற பெயரில் உலக பிரபலங்களை (ஆபாசமாக) காட்டுவதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறி குறித்த பணத்தை விரையம் செய்துவருகிறது இவ் அமைப்பு.
தெருக்களில் நடாத்தப்படும் இவ்வாறான விழிப்புணர்வு என வகைப்படுத்தப்படும் நிகழ்வுகளால் அத்தெருக்களில் சென்றுவரும் சிறார்களின் மனது பாதிக்கப்படுவதாகவும், தெருக்களில் ஆபாச நிகழ்வுகள் நடைபெறுவதாகவும் அவ் நிறுவனம் உருவாக்கப்பட்ட அமெரிக்காவிலேயே பல எதிர்ப்புக்கள் கிழம்பியுள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டிய விடையம்.

மேலும் சில விளம்பரங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் விளம்பரப்படுத்தப்படுகிறது..
உதாரணமாக, சைவம் சாப்பிடுவோர் பாலியல் விடையத்தில் திறமையானவர்கள் என விளம்பரப்படுத்தப்படுகிறது. இதற்கு எந்த விதமான மருத்துவ விஞ்ஞான ஆதாரமும் இல்லை.

PETA அமைப்போடான நேர்காணல் காணொளி பகிரப்பட்டுள்ளது.


அடுத்து,
PETA அமைப்பிற்கு பின்னான வர்த்தக அரசியல் பற்றி ஏற்கனவே பல பதிவுகள், காணொளிகள் பகிரப்பட்டு விட்டன. அவற்றை இணையத்தில் பார்க்கலாம்.

PETA அமைப்பு உண்மையிலேயே கருனை மிக்கதுதான். ஏறுதழுவுதல் தேவையில்லை என வாதிடுவோருக்கு.

ஏறுதழுவுதலை தடுப்பதனால், வலிமை மிக்க நாட்டு காளை மாடுகளை ஒழித்து அதன் அடுத்த கட்டமாக நாட்டு மாட்டு இனம் இல்லாமல் போகும். இது ஒரு இன அழிப்பு. எவ்விதத்திலும் கருனையாகாது.
மேலும் இன்னும் கொஞ்சம் காலம் கடந்து பார்த்தால், இயற்கையாக மாட்டில் கறக்க கூடிய பாலை விட அதிக பாலை கறக்க வைக்க மரபணு மாற்றப்பட்ட Jersey வகை மாடுகளின் பால்கள் சந்தையில் முதன்மை பெறும். (ஏற்கனவே அவை தான் முன்னிலை. நாட்டு மாடுகள் அற்ற நிலையில். போட்டியில்லை.)
மரபணு மாற்றப்பட்ட பாலினால், 50-60 ஆண்டுகளிற்கு பிறகு மனிதர்களுக்கு என்ன என்ன நோய் வரும் என்பதை எதிர்வு கூறமுடியாது. 50-60 ஆண்டுகளின் பின்னர்தான் அதன் விளைவுகளை பார்க்க முடியும். (அப்போது நாட்டு மாட்டினம் அழிந்திருக்கும்.) இப்போதே, சில நோய்களுக்கு இவ்வகை மாட்டுப்பால் காரணமாக இருப்பதாக அறியப்பட்டுவருகிறது.
+ மாடுகள் அற்ற நிலையில், விவசாயத்திற்கு பல் நாட்டு நிறுவன உழுதியந்திரங்களை வாங்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.

அதே நேரம் PETA, செயற்கை விவசாய உணவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அவற்றின் பின் விளைவுகளுக்கு 100 ஆண்டுகள் பொறுத்திருக்கவேண்டும்.

பெரும் கேள்வி.
பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்களுக்கென சொந்தமான பகுதியில் தமிழர் அடிப்படை தொழிலான விவசாயத்திற்கு பயன்பட்டு தமிழரோடு ஒன்றி வாந்துவரும் இவ் மாட்டு இனத்தையும், அதன் விளையாட்டையும் அவர்கள் விரும்பும் போது. 60 ஆண்டுகளுக்குட்பட்ட ஒரு அமைப்பு எப்படி தடுக்க முடியும். இத்தனைக்கும் அவ் அமைப்பினரே வெளி நாட்டு வகை நாய்களை வெப்பம் நிறைந்த பகுதிகளில் வளர்க்க கூடியவர்கள்.

எவளவு தான் நாம் பேசினாலும், தடை உத்தரவு பெறப்படத்தான் போகிறது. ஒரு 10-20 வருடம் தடைய மீறி நடாத்தப்படும். அதன் பின்னர் காங்கேயன் மாடு என்று ஒரு இனம் வாழ்ந்ததாக புத்தகங்களில் படிக்க முடியும். :)

மேலும் சில…
#வெள்ளைக்காரன்_சொன்னாத்தான்_கேட்போம்_moment





Ref : petakillsanimals.com / vdacs.virginia.gov / Youtube / wikipedia / google search

பேஸ்புக்கின் மர்ம பின்னனி! – Illuminati & facebook


பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
“உலகின் புதிய கட்டளை (New world order)” எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும். 20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் “கிங் மேக்கர்”களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்… லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்… ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன… பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்…)

எனினும், இந்த ஆக்கத்தை எழுதும் எனக்கு ஒரு விடையம் அப்போதே உறுத்தியது. அதாவது “ஒலிம்பிக்கில் தாக்குதல் நடாத்தப்பட உள்ளது” என்ற ஒரு ஐயக்கருத்தை இலுமினேட்ட உறுப்பினர்களே பரப்பினால், எதிர் இலுமினேட்ட உறுப்பினர்கள் நிச்சயமாக அந்த கருத்தை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதாவது இவ்வாறான ஒரு தாக்குதல் இலுமினேட்டி எனும் குழுவினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிப்பார்கள்.

அப்படி ஆதாரங்களுடன் அறிவிக்கப்பட்டும், அத்தாக்குதல் நடைபெறாது போனால், “இலுமினேட்டி” என்ற குழு பற்றி மக்களிடையே அரிதாக பரவிவரும் நம்பிக்கை தகவல்கள் அனைத்துமே பொய்பிக்கப்படும். அதாவது “எதிர் இலுமினேட்டி” உறுப்பினர்கள் என்ன சொன்னாலும் அதை மக்கள் நம்பாத நிலையை ஏற்படுத்தமுடியும்.
2012 ஒலிம்பிக் தாக்குதல் நடைபெறும் என்ற தகவலை இலுமினேட்டியே கசியவிட்டு பின்னர் அதை பொய்ப்பித்து, அன்டி இலுமினேட்டி உறுப்பினர்களின் வார்த்தைகளை நிரந்தரமாக நம்ப விடாமல் செய்திருக்கலாம்! ( நான் கூட இத்தொடர் பதிவை நிறுத்தியதன் காரணம், “இலுமினேட்டி” என்ற வார்த்தை மீதே ஏற்பட்ட சந்தேகம் தான்… எனினும், தொடர்ச்சியான தேடலில் இந்த குழு நாம் எதிர் பார்ப்பதை விட அதி புத்திசாலித்தனமானதாக இருக்கவேண்டும் என்ற எண்ணமும், சான்றுகளும் கிடைத்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்… அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என…
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு உங்கள் எண்ணங்களோடு விவாதியுங்கள்.

முதலில் நாம் அனைவரும் பயன்படுத்தும் சமூகத்தளமான ஃபேஸ்புக் தொடர்பான இலுமினேட்டி தன்மையை ஆராய்வோம்.

பிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம். மார்க் ஒரு யூதர் என்பதை இங்கு நீங்கள் கருதில் கொள்ளுங்கள். காரணம், யூதர்களுக்கும் இலுமினேட்டிக்கும் தொடர்பிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அது தொடர்பாக பின்னர் பார்க்கலாம். இப்போது மார்க் தொடர்பாக பார்ப்போம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மார்க் ஃபேஸ்புக் தளத்தின் பாவணையாளார்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் உத்தியோக பூர்வமாக பகிர்ந்துகொண்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

D8 எஅ அழைக்கப்படும் பிரபல தொழில்நுட்ப நேர்காண‌ல் நிகழ்ச்சியொன்றில் ஃபேஸ்புக் தளம் தொடர்பான கேள்விகளுக்கு மார்க் நேரடியாக பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது தனிதகவல் பாதுகாப்புத்தொடர்பான பேச்சு எழுந்த போது, பேட்டிகளின் போது மார்க் அணிந்துவரும் மேலங்கிய பார்வைக்கு காட்டுமாறு எதேச்சையாக நேர்காணலை நடாத்தியவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அந்த கேள்வி கேட்ட அடுத்த கணமே மார்க்கின் முகம் மாறியது. எனினும் அவர்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதன் பின்னர் தனது மேலங்கியை கழற்றினார். கழற்றும் போதே… தமது ஃபேஸ்புக் திட்டம் அந்த அங்கியில் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனினும், அந்த அங்கியை உற்று நோக்கும் போது அது இலுமினாட்டியின் சின்னத்தையும், பகுதி திட்டத்தையும் குறிப்பதாக அமைந்திருந்தது!

யூதர்களின் நாடான இஸ்ரேலின் கொடியிலுள்ள மைய நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு அந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. கீழ் வரும் புகைப்படங்களில் அவற்றை உண்ணிப்பாக அவதானியுங்கள்…

“மேலங்கி” தொடர்பான கேள்வியின் பின்னர் மார்க்கின் சஞ்சல முகம் :


மேலங்கியில் பொறிக்கப்பட்ட அடையாளம் :



மேலங்கி அடையாளத்திற்கும் இஸ்ரேலிய கொடிக்கும் இடையிலான ஒற்றுமை :


இலுமினேட்டியை குறிக்கும் அடையாள வடிவமைப்புக்கள் :



மேலும், ஃபேஸ்புக் உடன் இணைந்து இயங்கும் அமைப்புக்களை ஆராயும் போது அதில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு இருப்பதுடன்; ஃபேஸ்புக்கின் அடிப்படை இணை அமைப்பான information awareness office இல் இலுமினேட்டி சின்னம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலுமினேட்டியின் இஸ்ட இலக்கம் 13 என இத்தொடரில் நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். ஃபேஸ்புக் உள் நுழைவு முகப்பை அவதானியுங்கள். 13 நபர்கள் காட்டப்படுவார்கள். அவர்கள் நாம் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அதே 13 குடும்பங்களை குறிப்பதாக இருக்கலாம்!



இணையத்தில் தேடிப்பெற்றவற்றின் தொகுப்பை என் போக்கி ல் பதிவிட்டுள்ளேன். இது தொடர்பாக மேலும் தகவல்களை அறிந்து வைத்திருப்பவர்கள் கருத்திடவும். மர்மமாகவே இயங்கிவரும் இந்த இலுமினேட்டி மர்மக்குழுவின் திட்டங்களையும் அது எம்மிடையே ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்களையும் அறிந்திருப்பதும் எதிர்வுகூறுவதும் அவசியமான ஒன்று.

எதிர் கால அவர்களின் அடிமைப்படுத்தல் திட்டங்களையும் அவற்றிற்கு இருக்கும் இடையூறுகளையும் பார்வையிட முன்னர்; அடுத்த பதிவில், சில வாசகர்கள் கேட்டிருந்த இலுமினேட்டி அட்டைகள் பற்றிய தகவல்களை பார்க்கலாம். இணைந்திருங்கள். அடுத்த பதிவில் மிகவும் அதிர்ச்சிகரமான இவ்வருடம் திட்டமிட்டு நடைபெறவுள்ள ஒரு சம்பவத்தை பார்க்க ஆரம்பிப்போம்! இணைந்திருங்கள்!
பதிவை பகிர்ந்து ஊக்குவியுங்கள்! பல உண்மைகள் மண்டிக்கிடக்கின்றன!

References : cuttingedge, izismile, SyriaDefender, TheTruthIsFromGod6 & google

சனி, 31 டிசம்பர், 2016

சார்லஸ் டார்வின் - படிமலர்ச்சி கோட்பாடு

பழைய சிந்தனைகளிலிருந்து விடுபட மறுத்த உலகத்தை தங்களின் அரிய கண்டு பிடிப்புகளால் மாற்றம் பெறச் செய்தவர் களில் நால்வருக்கு முதன்மை பங்கு உண்டு. நாம் வாழும் புவி உருண்டையானது என்ற க—யோ, இயக்கவியல் கோட்பாட்டை நிறுவிய ஐன்ஸ்டீன், புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன், மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்த உண்மைகளை வெளியிட்ட சார்லஸ் டார்வின் ஆகியோரே அந்த நான்கு முதன்மை அறிவியலாளர்கள். இவர்களின் கண்டுபிடிப்புகளே நவீன உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடித்தளம்.

இங்கிலாந்து நாட்டின் ஷிரூஸ்பரி நகரில் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் பிறந்த சார்லஸ் டார்வின் பிறந்து 200 ஆண்டுகள் கழித்தும் தன்னை இந்த மனித சமுதாயம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மனித குலம் குறித்த மிக முக்கியமான ஆய்வுப்புரட்சியை நடத்தியவர் டார்வின். அப்படியென்ன புரட்சி?

உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றையும் கடவுள் படைத்தார்.
அதுபோல, மனிதனையும் கடவுள் படைத்தார் என்பதே மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கையாக காலங்காலமாக இருந்து வந்தது. டார்வினின் ஆராய்ச்சி முடிவுகள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து உண்மையை உலகுக்கு உணர்த்தின. எச்.எம்.எஸ் பீகிள் கப்பலில் இயற்கையியலாளராக பதவியமர்த்தப்பட்ட சார்லஸ் டார்வின் ஏறத்தாழ 5 ஆண்டுகள் அந்தக் கப்பலில் பயணித்து தென் அமெரிக்காவின் பசிபிக் கரையோரத்திலும் பசிபிக் கடலில் உள்ள சில தீவுகளிலும் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து 600 குறிப்பேடுகளில் தரவுகளைப் பதிவு செய்தார். மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி (படிமலர்ச்சி) பற்றிய டார்வினின் அரிய ஆய்வுகளுக்கு அந்தக் குறிப்பேடுகளே அடித்தளம்.

உயிரினங்கள் தங்களின் இயற்கையான தேர்ந்தெடுத்தலில் காரணமாகவே படிமலர்ச்சியை அடைகின்றன என்பதே டார்வினின் கோட் பாடாகும். பறவை, விலங்கு என ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவான குணங்கள் இருந்தா லும் தனிப்பட்ட ஒவ்வொரு பறவைக்கும் விலங்குக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை டார்வின் தெளிவுபடுத்தினார். ஒரே தட்பவெப்பம் நிலவும் பகுதியில் வாழும் பறவை களில் சிலவற்றுக்கு வலிமையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு மென்மையான அலகு இருக்கிறது. சிலவற்றுக்கு நுண்மையான அலகு இருக்கிறது. வலிமையான அலகுகள் கொண்ட பறவைகள் பெரிய விதைகளை சாப்பிடக்கூடியனவாகவும், மென்மையான அலகுகளைக் கொண்ட பறவைகள் சிறிய விதைகளைச் சாப்பிடுபவையாகவும் நுண்ணிய அலகுகளைக் கொண்ட பறவைகள் புழு- புச்சிகளை சாப்பிடக்கூடியனவாகவும் இருப்பதை அவர் தன் ஆய்வில் உறுதி செய்தார்.

ஒரே இனத்தில் இத்தகைய மாறுபாடுகள் கொண்ட உயிரினங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் படிமலர்ச்சியை அடைந்து புதிய உயிரினங் களாக மாற்றம் பெறுகின்றன என்பதே டார்வினின் ஆராய்ச்சி. அதாவது, ஆதாம்-ஏவாள் மூலமாக மனித இனத்தைக் கடவுள் படைத்தார் என ஒரு மதமும், படைப்புக் கடவுளான பிரம்மாவி னால் மனிதர்கள் படைக்கப்பட்டார்கள் என இன்னொரு மதமும் பல நூற்றாண்டுகளாக மக்களின் மனங்களில் கருத்துகளைப் பதிவு செய்திருந்த நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்டிருந்தது டார்வினின் ஆராய்ச்சி. மனித இனம் என்பது தனித்துவமாகப் படைக்கப்பட்டதில்லை. ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என்ற படிமலர்ச்சியின் தொடர்ச்சி யாக ஒவ்வொரு உயிரினமாக உலகில் தோன்றின. அப்படி தோன்றிய உயிரினங்களின் வழியே, இயற்கையான தேர்வு முறையில் படிமலர்ச்சி பெற்ற இனம்தான் மனித இனம். சுருக்கமாகச் சொல்வதென்றால், குரங்கு இனத் தில் இயற்கைச் சூழலால் தனித்த குணங்களுடன் செயல்பட்ட ஒரு குழுவிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் படிமலர்ச்சி பெற்றவனே மனிதன்.

டார்வினின் இந்த ஆய்வு, அவர் காலத்திற்கு முன்பு வரை இருந்து வந்த மதம் சார்ந்த- மூடநம்பிக்கைகளுடனான அறிவியலை மதத்திற்கு அப்பாற்பட்ட பகுத்தறிவு சார்ந்த அறிவியலாக மாற்றியது என்கிறார் இருபதாம் நூற்றாண்டின் இயற்கைவியலாளரும் படிமலர்ச்சி ஆராய்ச்சியாளருமான எர்னஸ்ட் மேயர். இத்தகைய அறிவியல் புரட்சியை மதம் சார்ந்த உலகம் உடனடியாக ஏற்றுக் கொள்ளுமா?

படிமலர்ச்சி குறித்த டார்வினின் ஆய்வு களுக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இது கடவுளை மறுக்கும் கருத்து, நாத்திக கருத்து என மதரீதி யான எதிர்ப்புகள், அரசியல் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் ஆகியவை நடைபெற்றன. இது டார்வினை கலங்கச் செய்தது. அவ ருடைய ஆய்வுகள் புரட்சிகரமாக இருந்தனவே தவிர, டார்வின் புரட்சியாளர் அல்ல என்கிறார் அறிஞர் ஜான் பெலாமி ஃபாஸ்டர். படிமலர்ச்சி பற்றிய டார்வினின் புகழ்பெற்ற புத்தகமான உயிரினங்களின் தோற்றம் 1859ல் வெளியானது. தன் இறுதிக்காலத்தில் லண்டன் நகரிலிருந்து 15 கல் தொலைவில் உள்ள ஓர் ஊரில் வசித்தார் டார்வின். அவர் தனது ஆய்வுக் கோட்பாடுகளை, தானே தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை. உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளை புதிய சிந்தனைகளோடு முடுக்கிவிடும் தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடரும் பணியை தாமஸ் ஹக்சிலி போன்றவர்களிடம் விட்டுவிட்டார்.

டார்வின் முன்வைத்த படிமலர்ச்சி கோட்பாடு இன்றளவிலும் பலவித மான ஆய்வுகளைக் கண்டு வருகிறது. மேற்குலக நாடுகளில் நிறத்தின் பெயரா லும் இனத்தின் பெயராலும் அடிமைத்தனம் நிலவி வந்த கால கட்டத்தில், உயிரினங்களின் தோற்றம் பற்றிய டார்வினின் ஆராய்ச்சி உண்மையிலேயே பெரும் புரட்சிதான். ஏனெனில், வெள்ளை இனம் எஜமானம் செய்யவும் கறுப்பினம் அடிமைத்தொழில் புரியவும் படைக்கப்பட்டவர் கள் என்ற ஒடுக்குமுறை சிந்தனையை உடைத்தெறியும் விதத்தில், மனிதர்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் இயற்கையான தேர்வு முறையில் உயிரினங்களின் படிமலர்ச்சி யின் விளைவாக உருவானவர்கள் என்ற டார் வினின் தத்துவம், ஆண்டான்-அடிமை கோட் பாட்டை உடைத்து நொறுக்குவதாக அமைந் தது. இந்தியாவிலும் பிறப்பினால் உருவாக் கப்பட்டுள்ள நால் வருணக் கோட்பாட்டுக்கு சம்மட்டி அடி தருவதாகவே இருக்கிறது டார்வினின் ஆராய்ச்சி முடிவு.

உலகில் உள்ள மனிதர்கள் ஏற்றத்தாழ்வற்ற சமஉரிமைகளுடன் வாழவேண்டும் என்ற பெருங்கனவுடன் பொதுவுடைமை எனும் அர சியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வகுத்தவர் களான காரல்மார்க்சும், ஃப்ரெடெரிக் எங்கெல் சும் டார்வினின் ஆய்வுகளை கவனத்துடன் அல சினர். உயிரினங்களின் தோற்றம் புத்தகத்தின் முதல் பதிப்பை வாங்கிப்படித்த எங்கெல்ஸ், இது முற்றிலும் சிறப்பானது என மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். டார்வினின் செயலை “அறிவியல் கண்ணோட்டத்தில் பெருங் காப்பியம்’ என வர்ணித்தார் காரல் மார்க்ஸ்.

ஆள்வதற்கும் ஒரு பிரிவும் அடிமையாக இருப்பதற்கு ஒரு பிரிவுமாக மனிதகுலம் படைக்கப்படவில்லை. மனித இனம் என்பது படைப்பால் வந்ததன்று. இயற்கையான தேர்வு முறையினால் வந்ததன்று என்கிற புரட்சிகரமான உண்மையை வெளிக்கொண்டு வந்தவர் அறி வியல் அறிஞர் சார்லஸ் டார்வின். அதனால் தான் மாபெரும் அறிஞர்கள் போற்றும் மகத் தான அறிஞராக இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னும் அவர் நினைக்கப்படுகிறார். டார்வினின் ஆய்வுகள் புதிய புதிய கோணங்களில் இன்றளவும் ஆராய்ச்சி செய்யப்படுவது அவரது பேராற்றலுக்கு கிடைத்துள்ள பெருமை.

தாவரங்களுடன் பேசுங்க

தாவரங்கள் நன்றாக வளர என்ன செய்ய வேண்டும்? 'தண்ணீர் பாய்ச்ச வேண்டும். முறையாக உரமிட வேண்டும்' என்கிறீர்களா? இதெல்லாம் பொதுவான முறைகள். தாவரங்களுடன் மனம்விட்டுப் பேசினால் அவை நன்றாக வளரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தாவரங்களுடன் பேசுவதா? அவற்றுக்கென்ன நாம் பேசுவது புரியுமா என்ன என்று கேள்வி எழுப்புகிறீர்களா? 'தாவரங்களுக்கு மொழி புரியாதுதான். ஆனால் அவை உங்களின் உச்சரிப்பைப் புரிந்து கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது தொடர்பான புதுமையான ஆய்வை இங்கிலாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன் முடிவில்தான், தாவரங்கள் மனிதர்கள் தம்மிடம் பேசுவதை விரும்புகின்றன என்று அறிவித்துள்ளனர்.

அதிலும் இங்கிலாந்தின் நியுகேசில் பகுதியில் புழங்கும் உச்சரிப்பு முறையைத் தாவரங்கள் அதிகம் ரசிக்கின்றனவாம். எசக்ஸ், வேல்ஸ் பகுதி உச்சரிப்பு முறைகளும் பலன் கொடுக்கின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

எசக்ஸ் பகுதி செடி, கொடிகள் விற்பனை மையம் ஒன்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏனோ தெரியவில்லை, மேல்தட்டு மக்களின் உச்சரிப்பு முறையை தாவரங்கள் ரசிக்கவில்லையாம்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் 1986-ம் ஆண்டில் தனது தோட்டத்துத் தாவரங்களுடன் பேசுவது பிடிக்கும் என்றபோது பலரும் அவரைக் கிண்டலடித்தார்கள். அவர்கள் தற்போது என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை!

கோஹினூர் ('மலையளவு ஒளிவீச்சு')

இந்தியாவை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பொது கைப்பற்றப்பட்டது ஒரு வைரம். பின்னர் குவாலியர் மன்னர் குடும்ப வசமானது அந்த வைரம். ஹுமாயுன் தலைமையில் பாபர் படைகள் குவாலியரை தாக்கியபோது, குவாலியர் மன்னர் குடும்பத்தினர் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வைரத்தை விலையாகக் கொடுத்தனர். ஹுமாயுன் தனது தந்தை பாபரிடம் அத வெற்றி பரிசாக அளித்தார். பாபர் அந்த வைரத்தை ஹுமயுனிடமே திருப்பித் தந்துவிட்டார்.

பின்னர், பாரசீக மன்னர் ஷா தாமாஸ்ப் கைக்கு போன அவ்வைரம், தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷாவை வந்தடைந்தது. 17-ம் நூற்றாண்டில் ஷாஜஹான் வசம் வந்தது அந்த வைரம். பின்னர் மொகலாய மன்னர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. 1739-ல் டெல்லியை சூரையாடிஅய பாரசீக மன்னர் நாதிர் ஷா, மொகலாய மன்னர் முகமது ஷாவிடம் இருந்து அந்த வைரத்தைக் கைபற்றிகொண்டார்.

பிரசித்தி பெற்ற "கோஹினூர்" வைரத்தின் கதை இது. அதற்கு கோஹினூர் ('மலையளவு ஒளிவீச்சு') என்று பெயரிட்டவரும் நாதிர்ஷாதான். தாதிர் ஷாவுக்குப் பின்னர் அவரது வழித்தோன்றல்களிடம் இருந்தது இந்த வைரம். தொடர்ந்து, "பஞ்சாப் சிங்கம்" என்றழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைவசம் மாறியது.

பஞ்சாப் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தபிறகு, சர் ஜான் லாரன்ஸ் என்ற திகாரி அதை பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவுக்குப் பரிசாக அளித்தார். இன்றுவரை பிரிட்டீஷ் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது, கோஹினூர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் வெட்டி எடுக்கப்பட்டது இந்த புகழ்பெற்ற வைரம்.

காடுகள் இரவு நேரத்தில் எப்படி இருக்கும்?

பூமியின் மொத்த நிலப்பரப்பில் வெறும் 6 சதவீத நாடுகளில் தான் உலகில் வாழும் பெரும்பான்மையான ஜீவராசிகள் உயிர் வாழ்கின்றன. இந்த காடுகள் இரவு நேரத்தில் எப்படி இருக்கும் என்பன பற்றிய சிறு பார்வை.
     இரவு நேரத்தில் காடுகள் அமைதியாக இருக்கும் என்று நினைத்தால் அது தவறு தான். காரணம் நள்ளிரவில்தான் பூச்சிகள், மிருகங்கள், பறவைகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். பேசுவது என்றால் படுக்கையில் கணவனும், மனைவியும் பேசும் ரகசியமான பேச்சில்லை. இந்த உயிரினங்களுக்கு இரவு நேரத்தில் தனக்கான துணை எங்கே இருக்கிறது என்றே தெரியாது. அதனால் தனது இணையை “எங்கேடா செல்லம் இருக்க?” என்று விடிய விடிய குரல் எழுப்பி கேட்டு கொண்டே இருக்கும்.
தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை குரங்குகள் எழுப்பும் காதல் ஒழி 5 கி.மீ. தூரத்துக்கு கேட்கும் என்று ஒரு வகையான ஆராய்ச்சி கூறுகிறது. காங்கோ காடுகளில் காணப்படும் ஒரு வகை வவ்வால்களின் தொண்டை கத்தி கத்தியே மார்பு வரை நீண்டு விட்டது. அதன் பரிணாம வளர்ச்சியே மாறி விட்டது. அந்த அளவுக்கு சவுண்ட் கில்லாடியாக இந்த வவ்வால்கள் இருக்கின்றன.
   சிங்கம், புலி, சிறுத்தை போன்றவைகளின் இணைகள் வெகு தொலைவில் எங்கேயோ இருக்கும் இணையை அழைக்க இவை காடே அதிரும்படி கர்ஜிக்கும். ஆண் சிங்கம் கூப்பிட அதற்கு பெண் சிங்கம் பதில் சொல்ல டிடிஸ் எபக்டில் காடே அதிரும். இதற்கு நடுவில் யாரவது மாட்டி கொண்டால் மாட்டியவர் கண்டிப்பாக அச்சத்தின் உச்சத்தை தொடுவார்.
ஆப்ரிக்க யானைகள் எழுப்பும் ஒழி, அடர்ந்த காடுகளை கிழித்துக் கொண்டு பல கி.மீ. தூரம் தாண்டியும் கேட்கும். தன் இணை நடந்து வரும் அதிர்வை வைத்தே எவ்வளவு தூரத்தில் தனக்கான இணை உள்ளது என்று கண்டுபிடித்துவிடும் அளவுக்கு யானைகள் கில்லாடிகள். சிம்பன்சி குரங்குகள் கால்களால் பூமியை தட்டி தன் காதலிக்கு தகவல் தெரிவிக்குமாம்.
    இப்படி கத்தல் பார்ட்டிகள் ஒரே நேரத்தில் ஓராயிரம் தகவல்கள் அனுப்ப அமைதியான உரியினங்கள் எப்படி தங்கள் காதல் மொழியை பகிர்ந்து கொள்ள முடியும்? இறைவன் அதற்கொரு வழி இல்லாமலா விட்டிருப்பான். ஒரு சில அமைதியான விலங்குகள் தங்களின் உடல் வாசனையை தூது அனுப்பும். புனுகுப்பூனை, கஸ்தூரி மான், பட்டாம்பூச்சிகள் வரை சில உயிரினங்கள் வாசனையை வைத்து தான் வம்சத்தை வளர்கின்றனர்.
   அமைதியான இரவுகளை இரைச்சல் ஆக்குவதில் முக்கிய பங்கு தவளைக்கு உண்டு. தவளையின் குரலை வைத்தே அந்த தவளையின் வயது, அளவு பருமன் எல்லாவற்றையும் இணை தவளை அறிந்து கொள்ளும். விருப்பம் இருந்தால் பதில் குரல் தந்து விரும்பிப் போகும். இல்லையென்றல் விலகிப் போகும்.

மரணத்தின் மறுபக்கம்

மறுஜென்மம் உள்ளதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மரணத்தின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை பலரிடம் ஆராய்ந்து அது இப்படித்தான் இருக்கும் என்று தகவல் தருகிறார்கள் ஆய்வாளர்கள்.

    அதன்படி நான் இறந்துவிட்டேன் என்று உணர்வதுதான் முதல்நிலை. அதன்பின் பூமியில் இருந்து வெளியேறி வின் வெளியில் சுற்றிச்சுலழ்வது போல் உணர்தல் இரண்டாம் நிலை. உடலைவிட்டு விலகி வெளியே சென்று பார்ப்பது போன்று உணர்தல், உடலைச்சுற்றி டாக்டர்கள், உறவினர்கள் நிற்பதை பார்ப்பது மூன்றாம் நிலை.

  மிக அமைதியான, வெளிச்சம் குறைவான சுரங்கத்திற்குள் போய்க்கொண்டே இருப்பது போல உணர்தல் – இது நான்காம் நிலை. கண்ணை கூசவைக்கும் அதீதமான வெளிச்சத்தை நோக்கி மெதுவாக பறப்பது போன்று உணர்தல் 5-ம் நிலை. வெண்மையான அல்லது வெள்ளை நிற உடை அணிந்த ஆணா, பெண்ணா என்று அடையலாம் கண்டுபிகிக்க முடியாத உருவங்களை பார்ப்பது 6-ம் நிலை. ஒருவர் வாழ்வில் நடந்த எல்லா சம்பவங்களும் அவர் கண்முன்னால் வந்து செல்வது 7-வது நிலை.

     கீழே கிடக்கும் தன உடலுக்குள் நிலைய வேண்டும் என்ற ஆசையும், வேண்டாம் என்ற வெறுப்பும் மாறி, மாறி தோன்றுவதுதான் கடைசி ஆசை இந்த நிலையில் ஒரு சிலரால் மீண்டும் உடலுக்குள் நுழைந்துவிட முடியுமாம். இறந்ததாக நினைத்து சுடுகாடுவரை எடுத்துச் சென்று, பின்னர் நினைவு திரும்பிய சம்பவங்கள் எல்லாம் இதனுடைய தாக்கம் தான்.

    இந்த உணர்வுகள் பெற்ற எல்லோருமே மறுபடி உயிர் திரும்பும்போது எதோ மறுபிறவி அடைந்தது போன்று உணருவார்கள். செய்த தவறுகளுக்கு சம்மந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பும் கேட்டு கொள்கின்றனர். இதற்கு மேல் தவறுகள் எதுவும் செய்வதில்லை என்று உறுதியும் எடுத்துகொள்கின்றனர். ஆனால் மரணத்தின் மறுபக்கமாக உள்ள மீண்டும் உயிர்ப்பு என்பது, மரணத்தை விட மனித வாழ்வை உணர வைக்கிறது.

பழமையான புதிய மனித இனம்


     இதுவரை அறியப்படாத ஒரு புதிய மனித இனம் மண்ணில் உலவித் திரிந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சீனாவில் சில குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிரான புதைபடிவங்கள், அந்த அறியப்படாத மனித இனத்துக்குச் சிந்தமானதாக தொல்லுயிரியல் நிபுணர்களால் கருதப்படுகிறது.

   அந்த எலும்புகள், மிகப் பழங்கால மற்றும் நவீன மனிதனின் அம்சங்களைக் கொண்டிருப்பதும் விஞ்ஞானிகளைக்குழப்புகிறது.
இன்னொரு ஆச்சரியமூட்டும் அம்சம், இந்த எலும்புகள் 11 ஆயிரத்து 500 ஆண்டுகள் பலமையானவைதான். அதாவது நவீன மனிதன் பூமியில் காணப்பட்ட அதே காலகட்டத்தில் இந்தப் புதிரான மனிதன் இருந்திருக்கிறான். இன்னும் விளக்கமாகச் சொல்வதென்றால் சீனாவின் ஆரம்பகால விவசாயிகள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வசித்திருக்கிறார்கள்.

   இந்த புதிய புதைபடிவங்கள், இதுவரை அறியப்படாத மனித இனத்துக்குச் சொந்தமான இருக்காலம். அதாவது, 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவதற்கு முன்புவரை வாழ்ந்த ஓர் இனம். என்பது, முன்னணி தொல்லுயிரியல் ஆய்வாளரான ஆஸ்திரேலியாவின் நியு சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேரன் கர்நோவின் கருத்து.

    அவரே, “அவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த, முன்பு அறியப்படாத, ஆரம்பகால நவீன மனிதர்களாக இருக்கலாம். அவர்கள் மரபனுரீதியகத் தொடராமல் போயிருக்கலாம்” என்கிறார் கர்னோ.

     தென்மேற்குச் சீனாவில் மேங்சி நகருக்கு அருகில் உள்ள மலுடோங் எனப்படும் சிவப்பு மான் குகைப் பகுதியில் உள்ள குவாரியில் இந்தப் புதைப் படிவங்களை சுரங்கத் தொழிலாளர்கள் கண்டு பிடித்தனர். 1989-ம் ஆண்டிலேயே அந்த மூன்று புதைபடிவங்களையும் அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அனால் 2008-ம் ஆண்டில்தான் அவை தொடர்பான ஆய்வுகள் தொடங்கின.

     குறிப்பிட்ட புதைபடிவங்களுக்கு உரிய மனிதர்கள், மறைந்து போன சிவப்பு மானை உணவாக உட்கொண்டிருப்பதா, அவர்களை ‘சிவப்பு மானை உணவாக உட்கொண்டிருப்பதால், அவர்களை சிவப்பு மான் குகை மனிதர்கள் என்று ஆய்வரளர்கள் குறிப்பிடுகின்றனர்’