செவ்வாய், 31 மார்ச், 2020
அமெரிக்காவில் இரு வாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப்பலியும் உச்சத்துக்கு செல்லும் - அதிர வைத்த டிரம்ப்
திங்கள், 30 மார்ச், 2020
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு
‘We’re going to be fine’ — Nobel winner Michael Levitt says COVID-19 pandemic will end soon
வியாழன், 26 மார்ச், 2020
கிருமிகள் உலகில் மனிதர்கள்
தற்கால சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்களை உள்ளடக்கியது இந்த புத்தகம். கிடைத்திருப்பது வரப்பிரசாதமே. நேரம் ஒதுக்கி படியுங்கள் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. சுய ஊரடங்கு உங்களை வாசிப்பின் தாற்பரியத்தை மேம்படுத்தும். அதற்கேற்றால் போல் நுண்ணங்கிகளையும் உலகின் அசைவையும் ஓரளவு புரிந்து வைக்க இந்த நூல் உதவும் என நம்புகிறேன்.
- எல்றோய் அமலதாஸ்
நாடெங்கும் ஏன் பாரெங்கும் ஒரு பாதையில் விரைந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான பாதையில் இயல்பாகவே ஒரு மாற்றுக் குறைவு ஏற்பட்டு விடுகிறது. என்றாலும் அதில் இருக்கும் நியாயங்கள் மறைக்கப்பட்டாக வேண்டுமா? விவாதிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.
நுண்ணுயிர் தேற்றம் (Germ theory) அதன் தொடக்க காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டிருக்கின்றன.
அலோபதி மருத்துவத்தின் போதாமையும், அறிவியல் ஆய்வுகள் என்ற பெயரில் நடக்கும் ஒற்றைப் பார்வை ஆய்வுகளும் கண்டிப்பாக மக்களின் ஆரோக்கியத்தை காக்கப் போவதில்லை. என்றால் மக்களை நேசிப்பவர்களின் அடுத்த அசைவு எதை நோக்கியதாக இருக்க வேண்டும்?
கிருமிகள் உலகில் மனிதர்கள் எனும் அக்கு ஹீலர் உமர் ஃபாரூக் எழுதிய இந்த நூலை படித்துப் பாருங்கள். நுண்ணுயிர்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பார்வையை எளிமையாகவும், வலிமையாகவும் மறுத்து விளக்கங்களையும் தரவுகளையும் முன் வைக்கிறார்.
மருத்துவ மாணவர்களே, மருத்துவர்களே, மருத்துவ வல்லுனர்களே, இதை விவாதிக்க நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறேன். இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான மக்களின் ஒருமையையும், ஓர்மையையும் குலைப்பது இதன் நோக்கம் இல்லை. சரியானதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் முனைப்பு தான்.
வாருங்கள் விவாதிப்போம்.
நூலை பதிவிறக்க
https://drive.google.com/file/d/13Et9_ThqgJ3vWOuErXyZU724zYJSJwjt/view
புதன், 25 மார்ச், 2020
256 தவிர்க்க முடியாத இலக்கம்..!
திங்கள், 23 மார்ச், 2020
பொறுப்புடன் அறிக்கையிடுங்கள். நம்பகத்தன்மையற்றவற்றை பிரசுரிக்க வேண்டாம்.
ஞாயிறு, 22 மார்ச், 2020
பல நாடுகளும் கைவிரித்த நிலையில், மனிதநேயத்துடன் அடைக்கலம் தந்த கியூபா!
நடுக்கடலில் சிக்கித்வித்த கொரோனா தாக்கிய வெளிநாட்டு பயணிகளுக்கு கியூபா அரசு ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
அச்சறுத்தும் கொரோனாவால், ஒவ்வொரு நாடும் உலக நாடுகளில் இருந்து தங்களை தனிமைபடுத்தி கொண்டே வருகிறது. வைரஸ் தொற்று அறிகுறியுள்ள வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அனைத்து நாடுகளும் தடை விதித்துள்ளது. சில நாடுகளில், கொரோனா பாதித்த சொந்த நாட்டு மக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கியூபா மட்டும் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு தஞ்சமளித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற சொகுசு கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதில் இருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் நிர்வாகத்தினர் அனுமதி கோரினர். ஆனால், அனைத்து நாடுகளும் கைவிரித்து விட்டன. இதனால், நடுக்கடலில், நடுங்கிக்கொண்டிருந்த சொகுசு கப்பலுக்கு, கியூபா அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுற்றுலாப்பயணிகள் சோதனைக்குப் பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். வைரஸ் தாக்கிய பயணிகளுக்கு தாங்களே சிகிச்சை அளிக்க கியூபா அரசு முன் வந்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதித்த மக்களை ஏற்க முன்வராத போது, கியூபா மட்டும் ஏற்றுக்கொண்டது ஏன்? கியூபாவின் மருத்து கட்டமைப்பு அவ்வளவு வலுவானதா என்பதை அறிய வேண்டியுள்ளது.
1959ம் ஆண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த படிஸ்டாவின் சுறண்டல் ஆட்சியை பிடல் கேஸ்ட்ரோவும், சேகுவேராவும் புரட்சி முலம் வீழ்த்தினர். பின்னர், கியூபாவின் அதிபரான ஃபிடல் கேஸ்ட்ரோ, மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பை நிறுவ விரும்பினார். மருத்துவ சேவை இல்லாத பகுதிகளில் மருத்துவ சேவை வழங்குவது கேஸ்ட்ரோவின் கனவாக இருந்தது. கேஸ்ட்ரோவின் இந்த கனவை நனவாக்க, மருத்துவரான, அவரது சக போராளி சேகுவேரா பல திட்டங்களை கொண்டுவந்தார். அதன் ஒருபகுதியாக, கியூபாவில் இருந்த மருத்துவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு மருத்துவர்கள், கியூபாவில் தங்கியிருந்து மருத்துவச் சேவையைச் செய்ய வேண்டும். அதேநேரம் தேவைப்படும்போது, மற்ற நாடுகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின்போது, தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்பட வேண்டும். இந்த மருத்துவப் பிரிவு மருத்துவப் புரட்சி படை என்று அழைக்கப்பட்டது.

மருந்துகளின் விலை குறைப்பு, இலவச மருத்துவ சேவை, மருத்துவ கல்வியை பரவலாக்கியது என பல திட்டங்களை முன்னெடுத்தார் ஃபிடல் கேஸ்ட்ரோ. இதனால், மற்ற நாடுகளை விட மருத்துவ சேவையை விசாலமான சிந்தனைகொண்டு கியூப அரசால் செயல்பட முடிகிறது. அதன் வெளிப்பாடே, கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க கியூபா முன் வந்துள்ளது.

முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள பல வல்லரசு நாடுகள், கொரோனாவை தாக்குபிடிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், கம்யூனிச சிந்தனையால் ஆட்சி செய்யப்பட்டு வரும் கியூபாவில், இதுவரை கொரோனாவால் 4 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணிகளுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முன்வந்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து 2015ம் ஆண்டே எச்சரித்த பில் கேட்ஸ்.!
கொரோனா வைரஸ் குறித்து 2015ம் ஆண்டே மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு டெட் டாக் (Ted Talk) நிகழ்ச்சியில் பங்குபெற்று பில்கேட்ஸ் 8 நிமிடங்கள் உரையாற்றினார். அந்த உரையின்போது அடுத்த பத்தாண்டுகளில் உலகிற்கும் மனித இனத்திற்கும் பேராபத்தாக போர் இருக்காது எனவும் அதைவிட பேராபத்தாக வைரஸ் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த வைரஸ் மூலம் 1 கோடி மக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் ஆற்றிய உரையில், எபோலா வைரஸ் குறித்து பேசினார். அப்போது எபோலா வைரஸை கட்டுப்பத்த தேவையான திட்டங்களும் வழிவகைகளும் இல்லை என தெரிவித்தார். ஆனாலும் சுகாதாரத்துறையினர் துல்லியமாக செயல்பட்டதாலையே அதனை கட்டுக்குள் வைக்க முடிந்தது எனவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டார். மேலும் எபோலா தொற்று நோயாக இருந்தாலும் அது காற்றின் மூலம் பரவவில்லை என்பதாலே உலக நாடுகளில் மிகப்பெரிய இழப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார். ஆனால் அடுத்தமுறையும் இப்படியொரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறமுடியாது என்றார்.
வைரஸ் மூலமாக ஏற்படும் தொற்று நோயினால் உலகம் முழுவதும் ஒரு கோடி பேர் வரை உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம் என்றும் அதனை தடுக்க உலக நாடுகள் இணைந்து போராட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கே கோடிக்கணக்கான பணத்தை உலக நாடுகள் செலவிடுவதாக கூறிய பில் கேட்ஸ், தொற்று நோயை தடுக்கும் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் தொற்று நோய் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வல்லுநர்களும் தொற்று நோயியல் நிபுணர்களும் இல்லை எனவும் பில் கேட்ஸ் கூறினார்.
“The next outbreak? We’re not ready”
Bill Gates Ted Talk in 2015 #coronapocolypse #coronavirus pic.twitter.com/1tz3FMw2WS
— Paul ➐ (@NoGamePaul) March 15, 2020
இந்த தொற்று நோயினை போர் கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலே தப்பிக்க முடியும் எனக் கூறிய பில் கேட்ஸ், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் பொருளாதார வீழ்ச்சி ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் கூறினார். 2015ம் ஆண்டில் பில் கேட்ஸ் கணித்தது தற்போது கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் மூலமாக நடந்து கொண்டிருக்கிறது என சமூக வலைதளத்தில் இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
I’m answering your questions about the #COVID19 coronavirus on @reddit in 10 minutes: https://t.co/JXEYRCpCza pic.twitter.com/ESyUqomdSD
— Bill Gates (@BillGates) March 18, 2020
கடந்த வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிய பில் கேட்ஸ், இனிமேல் மக்கள் நலன் சார்ந்த செயல்களில் (Philanthropy) அதிக கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் ரூ.750 கோடி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் வளரும் நாடுகளையும் அதன் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் என்றும் பில் கேட்ஸ் கணித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு நாடு குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் முழு அடைப்பை (Shut Down) பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். முழு அடைப்பை பின்பற்றினாலே ஓரளவு கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பு மருத்தை செயல்படுத்த இன்னும் 18 மாதங்கள் ஆகலாம் எனவும் ஆனாலும் அதனை உறுதியாக சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
