வெள்ளி, 25 அக்டோபர், 2019

டென்மார்க்கில் ஆச்சரியம்: நகர்த்தப்பட்ட கலங்கரை விளக்கம்

டென்மார்க்கில் கலங்கரை விளக்கம் ஒன்று நகர்த்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோபன்ஹேகன், 

டென்மார்க் நாட்டின் வடக்கு ஜட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரில் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் உள்ளது. ‘ரப்ஜெர்க் நியூடு’ என்று அழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டு தோறும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ‘ரப்ஜெர்க் நியூடு’ கலங்கரை விளக்கத்தை பார்த்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மணல் அரிப்பு காரணமாக இந்த கலங்கரை விளக்கம் மெல்ல, மெல்ல சரிந்து மொத்தமாக கடலில் விழும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் கடலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த கலங்கரை விளக்கம், மணல் அரிப்பு காரணமாக தற்போது 2 மீட்டர் தொலைவில் இருக்கிறது.

எனவே இந்த கலங்கரை விளக்கத்தை சேதப்படுத்தாமல், அப்படியே பெயர்த்து எடுத்து நகர்த்தி பாதுகாப்பான இடத்தில் வைக்க டென்மார்க் அரசு முடிவு செய்தது. அதற்காக 7½ லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.5 கோடியே 32 லட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் பணிகள் தொடங்கின.

 தண்டவாளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் 720 டன் எடைகொண்ட அந்த கலங்கரை விளக்கத்தை 70 மீட்டர் தொலைவுக்கு நகர்த்தும் பணிகள் நடந்தன. கடுங்குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுக்கும் நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளை மறைத்து எந்த ஆராய்ச்சியையும் நடத்தவில்லை-எட்வர்டு ஸ்னோடன்

அமெரிக்கா வேற்றுகிரகவாசிகளை மறைத்து எந்த ஆராய்ச்சியையும் நடத்தவில்லை என அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடன் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் உள்ள  ஏரியா 51 பகுதி குறித்து பல்வேறு கற்பனை செய்திகள்  வருகின்றன. லாஸ் வேகாஸில் இருந்து வடமேற்கே 80 மைல்கள் தொலைவில் நிவேடாவில் உள்ள ராணுவப் பயிற்சி முகாம் தான் ஏரியா 51 எனப்படுகிறது. 

2013 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட - ஏரியா 51 முகாமில் பிடிபட்ட வேற்றுகிரகவாசிகள் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய தொழில்நுட்பமும், பறக்கும் வாகனமும் அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதை அமெரிக்க அரசு மறுத்து வருகிறது.

ஏரியா 51ல் பணியாற்றிய இயற்பியலாளர் என்று தம்மை கூறிக் கொண்ட பாப் லாஸர் என்பவர் அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் 1989-ல் பேட்டி அளித்த போது, இந்தத் தகவல்கள் பரவத் தொடங்கின.

வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருப்பது பற்றியும், வேற்றுக்கிரக பறக்கும் சாதனங்கள் பற்றி அமெரிக்க அரசிடம் தகவல்கள் உள்ளதாகவும், மக்களிடம் தெரிவிக்காமல் அவற்றை மறைத்து வைத்திருப்பதாகவும் சிலர் கருதுகின்றனர்.

ரகசியத்தன்மை உள்ள அந்த ராணுவ முகாமை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுமே வேற்றுகிரகம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளன.  `பூமிவாசிகளை வரவேற்கிறோம்' என்ற அறிவிப்புப் பலகை வரவேற்கிறது.

‘ஏரியா 51’ பகுதியில், கண்ணுக்கு தெரியும் ஆய்வுக்கூடங்களை விட, மண்ணுக்குள் மறைந்திருக்கும் ஆய்வுக்கூடங்களே அதிகம். அதனால்தான், ‘ஏரியா 51’ ரகசியம் காக்கப்படுகிறது.

சிஐஏவின் முன்னாள் ஊழியர், எட்வர்டு ஸ்னோடன் நாட்டின் மிக நெருக்கமாக வைத்திருக்கும் சில ரகசியங்களை தேடி உள்ளார்.  கூகிளின் சிஐஏ பதிப்பை அணுகக்கூடிய  ஆர்வமுள்ளவர்களைப் போலவே, உலகில் உலவும் சில மிக முக்கியமான கேள்விகளுக்கான பதில்களைத் தேடி உள்ளார்.

எட்வர்ட் ஸ்னோவ்டென் சிஐஏ தரவுத்தளங்கள் மூலம் தேடியபோது அரசாங்கம் வேற்றுகிரகவாசிகளை மறைத்து வைத்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறினார். 

 ஸ்னோடன்  புத்திசாலித்தனமான, வேற்று கிரக வாழ்க்கை பற்றி அமெரிக்க அரசிற்கு ஒன்றும் தெரியாது என்று  கூறி உள்ளார்.

வேற்றுகிரகவாசிகள் ஒருபோதும் பூமியைத் தொடர்பு கொள்ளவில்லை, அல்லது குறைந்தபட்சம் அவர்கள் அமெரிக்க உளவுத்துறையையும் தொடர்பு கொள்ளவில்லை "என்று ஸ்னோடன் தனது சமீபத்திய   பதிவில் "எழுதி உள்ளார்.

ஆனால் நிலவில் அமெரிக்கா இறங்கியது  உண்மையில் நிகழ்ந்தது என கூறி உள்ளார்.

கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி

All 39 people found dead in shipping container in Essex were Chinese nationals, officials confirm.

லண்டன்

கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி

இங்கிலாந்தில், போலீஸ் பறிமுதல் செய்த லாரி கண்டெய்னரில் சடலமாக கிடந்தவர்கள் சீனர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார மந்தநிலை, அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் வாழ்வாதாரத்தை இழக்கும் பின்தங்கிய நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

அவ்வாறு குடிபெயர்வோரை தடுக்க எல்லையோரம் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளதால், மக்கள் சட்டவிரோதமாக குடியேற முயல்கின்றனர்.

அவ்வாறு சட்டவிரோதமாக செல்வோர் பூட்டிய வாகனங்களில் நீண்ட தூரம் பயணித்து மூச்சுத் திணறி உயிரிழப்பது உண்டு. அந்தவகையில் கடந்த 2000-ம் ஆண்டு டென்மார்க்கிலிருந்து இங்கிலாந்து வந்த லாரியில் 58 சீன அகதிகளின்  உடல்கள் இருந்த சம்பவம் உலகையே அதிரவைத்தது.

இந்தநிலையில், பெல்ஜியத்திலிருந்து கப்பல் மூலம் லண்டன் வந்த கண்டெய்னர் நேற்று லாரியில் வைத்து லண்டனின் கிரேய்ஸ் பகுதியில் உள்ள தொழில்நுட்ப பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

அதனை காவலாளிகள் சோதனை செய்தபோது, அதில் பெண்கள் உள்பட  39  பேரின் உடல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் கண்டெய்னருடன் சடலத்தை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தவர்கள் சீனர்கள் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த சம்பவம் நினைத்து பார்க்க முடியாதது என்றும் இந்த சோகமான சம்பவத்தைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் உண்மை என்ன என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

புதன், 23 அக்டோபர், 2019

கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் புதிய உச்சம்.. செயற்கை தோல் கண்டுபிடிப்பு

பொதுவாகவே குளர்ச்சி, வெப்பம் ஆகியவற்றை நமது தோல்தான் முதலில் உணரும். பின்னர் அதை நரம்பு வழியாக மூளைக்கு கொண்டு சென்று அதற்கு ஏற்றவாறு எதிர்வினையை நமது உடல் செய்யும்.

அதேபோல், கிள்ளுதல், தொடுதல், கூச்சம் போன்ற உணர்வுகளை மனித மூளை தோல் மூலமே கண்டறியும். இந்நிலையில், மனித உணர்வுகளை கண்டறியும் செயற்கை தோலை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் பிரான்ஸ் சோபோர்ன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்காம் பாரிஸ்டெக் நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செயற்கை தோல், சிலிக்கான் (silicone membrane) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மனித தோல் மாற்று அறுவை சிகிச்சைதான் எங்கள் இலக்கு என்று செயற்கை தோலை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்மருத்துவம்உலகம்பரம்பரை நோய்களை திருத்தியமைக்கும் பொறிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு உண்டாகும் பல நோய் நிலைமைகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளும் காரணமாகின்றன. இக்குறைபாடுகள் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படக்கூடியனவாகும். இந்நிலையில் குறித்த குறைபாடுகளை 90 சதவீதம் வெற்றிகரமாக மாற்றயமைக்கக்கூடிய புதிய பொறிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள சுமார் 75000 நோய்களை கட்டுப்படுத்தலாம்.

விக்கிப்பீடியாவை விரைவில் இழந்து விடுவோமா? - புதிய தகவல்

அறிவுப்பசிக்கான தீனி அற்றுப்போகும் அபாயம், ஈடில்லா ஞானத்தை அளிக்கும் மட்டற்ற கலைக்களஞ்சியச் சுரங்கம் வற்றிப்போகும் ஆபத்து. விக்கிப்பீடியாவுக்கு என்ன நேர்ந்தது?

வாஷிங்டன்:

அரிய பல தகவல்களை தன்னகத்தே பொதித்து வைத்திருக்கும் நவீன உலகின் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா நிதி நெருக்கடியால் தள்ளாட்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

வரலாற்று காலத்தில் நமது வாழ்நாளுக்கு முற்பட்ட நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை பற்றிய அரிய தொகுப்புகள்  ‘என்சைக்லோப்பீடியா’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் புத்தக தொகுப்புகளாக முன்னர் வெளிவந்தன.

ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பல்வேறு தொகுப்புகளாக வெளியான இந்த புத்தகங்களின் மூலம் நாம் அறிய விரும்பிய தகவல்களை எல்லாம் விளக்கப்படங்களுடன் தெரிந்துகொள்ள முடிந்தது. 

ஆனால், இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் பலநூறு பக்கங்களை கொண்டதாகவும் முழு தொகுப்பும் பல்லாயிரம் ரூபாய் விலையிலும் இருந்ததால் ஏழை-எளியவர்களால் இவற்றை வாங்கி பயனடைய இயலாத நிலை இருந்தது. 

எனினும், மாவட்ட அரசு தலைமை நூலகங்களில் ‘குறிப்புதவி நூல்கள்’ என்ற பகுதியில் இவை வைக்கப்பட்டிருந்தன. நம்மால் இந்த புத்தகங்களை சொந்தமாக்கி கொள்ள இயலாமல் போனாலும் தேவையான குறிப்புகளை பெற  ‘என்சைக்லோப்பீடியா’ தொகுப்புகள் உறுதுணையாக அமைந்தன.

சில ஆண்டுகளுக்கு பின்னர் புதுப்பிக்கப்பட்ட பதிப்புகளாக வெளியாகும் ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகங்களில் முந்தைய பதிப்புக்கு பிறகு நடைபெற்ற மேலும் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

நாளடைவில் உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி அபாரமான வளர்ச்சியை அடைந்தது. கம்ப்யூட்டர், மின்னணு எழுத்தியல் முறை அதிகரித்தது. இன்டர்நெட் எனப்படும் இணையத்தளத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாத அம்சமாக மாறியது.

எழுத்துகளாக அச்சுக்கோர்த்து, மையால் காகிதத்தில் அச்சிட்டு புத்தகமாக தயாரித்து விற்பனை செய்த காலம் மாறி, இணையத்தின் வழியாக மின்னணு முறையில் கம்ப்யூட்டரில் புத்தகங்களின் பக்கங்களை காணும் நிலை உருவானது.

இப்படி சில தகவல்கள் பல இடங்களில் பரவிக்கிடக்கும் நிலையை மாற்றி அனைத்து தகவல்களையும் கலைக்களஞ்சியமாக ஒரே இடத்தில் 
குவியலாக  படைக்கும் எண்ணம் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்மி வேல்ஸ் என்பவருக்கு தோன்றியது.

இதன் விளைவாக ‘என்சைக்லோப்பீடியா’ புத்தகத் தொகுப்புகளைப்போல் இணையத்தளத்தின் வாயிலாக ஓர் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கினார். ’விக்கிப்பீடியா’ என்ற பெயருடன் 15-1-2001 அன்று துவக்கப்பட்ட இந்த இணையவழி அறிவுச்சேவைக்கு இன்று வயது 18.

தற்போது அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள ’விக்கிப்பீடியா’ நிறுவனத்தின் படைப்புகளுக்கு தனிப்பட்ட முறையில் பிரதான ஆசிரியர்கள் என்று எவரும் இல்லை.

உலகின் பல்வேறு விவகாரங்கள் மற்றும் பிரபலங்கள், முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்புகளை தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இந்த ’விக்கிப்பீடியா’ இணையப்பக்கத்தில் தனித்தனி தலைப்புடன் பதிவு செய்கின்றனர்.

குறிப்பாக, இணையத்தளத்தில் நரேந்திர மோடி என்று தேடினால் முதலில் அவரது பெயரிலான 'விக்கிப்பீடியா’ பக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். இப்படி உலகளாவிய அளவில் பல வரலாறுகளும் சம்பவங்களும் தனிநபர்கள் பற்றிய குறிப்புகளும் விக்கிப்பீடியாவில் பொதிந்துள்ளன.

பெரும்பாலும் முதலில் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்படும் இதுபோன்ற தரவுகளை பிறநாட்டினர் தங்களது தாய்மொழியில் மீள்பதிவிடுகின்றனர். இந்தியாவிலும் அனைத்து மாநில மொழிகளிலும் பல 'விக்கிப்பீடியா’ தகவல்கள் காணக் கிடைக்கின்றன. 

அவற்றில் சில திருத்தங்களையும் பலர் சுட்டிக் காட்டுவதுண்டு. பின்னர், அவை நிவர்த்திக்கப்படும். இப்படி பல தனிநபர்கள் தாமாகவே முன்வந்து சம்பளம் ஏதுமின்றி பதிவிடும் தகவல்களை தொகுப்பாக திரட்டி வைக்கும் பணியை 'விக்கிப்பீடியா’ நிர்வாகம் செய்து வருகிறது. 

இந்த தகவல் திரட்டுகளை எல்லாம் பாதுகாப்பதற்காக ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகளை விலைகொடுத்து பெறுவதற்கும், தகவல் திரட்டுகளை எல்லாம் டிஜிட்டல் கோப்புகளாக சேகரித்து, பாதுகாத்து சர்வர்களின் மூலம் பயனாளிகளுக்கு அளிப்பதற்கும்  ஏராளமான பணம் தேவைப்பட்டாலும் வர்த்தக நோக்கம் ஏதுமின்றி, பயனாளிகளின் அறிவுப்பசிக்கு தேவையான அம்சங்கள் அனைத்தும் இங்கு இலவசமாகவே கிடைத்து வருகின்றன. 

இதனால், உலகம் முழுவதும் பலகோடி மக்கள் பலனடைந்துள்ளனர். அன்றாடம் சிலகோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தகவல்களை தேடி விக்கிப்பீடியா பக்கத்துக்கு செல்லும் வாசகர்களுக்கு அந்நிறுவனத்தின் சார்பில் ஒரு அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, சில விக்கிப்பீடியா பக்கங்களின் முகப்பில் ஒரு விண்ணப்பம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

‘இந்தியாவில் உள்ள அனைத்து வாசகர்களும் அறிவது.., விக்கிப்பீடியாவின் சுதந்திரத்தை நீங்கள் பாதுகாத்து நிலைநாட்ட ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உங்களிடமிருந்து நன்கொடைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், 99 சதவீதம் பேர் அப்படி தருவதில்லை.

இதை வாசிக்கும் அனைவரும் 150 ரூபாயாவது அன்பளிப்பாக அளித்தால்தான் இனிவரும் ஆண்டுகளுக்கு அபிவிருத்திக்கான பாதையில் விக்கிப்பீடியாவை அழைத்துச் செல்ல இயலும்.

லாபநோக்கமற்ற முறையில் இந்த விக்கிப்பீடியாவை நாங்கள் தொடங்கியபோது இதனால் ஏற்படப்போகும் பொருளிழப்பு பற்றியும் இதற்காக நீங்கள் வருத்தப்பட நேரிடும் என்றும் பலர் எச்சரித்தனர். 

ஆனால், விக்கிப்பீடியா வர்த்தகரீதியாக மாற்றப்பட்டு விட்டால் அதனால் இந்த உலகிற்கு பேரிழப்பு என்று நாங்கள் கருதினோம். ஞானத்தை விரும்பும் அனைவரையும் விக்கிப்பீடியா ஒன்றிணைத்து வருகிறது. படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும் சில கொடையாளர்கள் ஆகியோர் நம்மை வாழ்வித்து வருகின்றனர்.

நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை மாறாத எண்ணற்றத் தகவல்களை இங்கு பதிவிட்டு உங்களுக்காக உழைக்கும் மக்களை உள்ளடக்கிய சமுதாயமாக திகழும் விக்கிப்பீடியா இணையத்தில் உயிர்ப்புடன் இருக்கவும் வளரவும் உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்’ என அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரூ.150, 300, 500, 1000, 1500, 3000, 5000 அல்லது அதற்கு அதிகமான தொகையையும்கூட நன்கொடையாக அளிக்க விரும்பும் கொடையாளர்கள் பணம் செலுத்துவதற்கான வசதியும் இந்த தகவல் வந்துபோகும் பெட்டியில் இடம்பெற்றுள்ளது.

செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை அறிமுகம் செய்ய உள்ள பேஸ்புக்..!

செய்திகளுக்கு என்று பிரத்யேக பிரிவை பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வானொலியைத் தவிர, 1990கள் வரை நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள அடுத்தநாள் காலையில் வரும் நாளேடுகளுக்காக மக்கள் காத்திருந்தனர். பின்னர் செய்தி தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் என்று பரிணமித்து வந்த செய்தித்துறை இன்று முழுக்க முழுக்க இணைய மயமாகிவிட்டது. ஒரு செய்தி ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக சென்று விழுந்துவிடுகிறது. இதற்கு முழு முதற்காரணம் சமூக வலைதளங்களின் பயன்பாடுதான். 

சமூக வலைத்தளங்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, தொலைக்காட்சியில் செய்தி நேரத்திற்காக காந்திருந்தவர்களை செல்போனை நோக்கி வரவைத்திருக்கிறது. அதிலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் எளிதில் மக்களை அடைந்துவிடுகிறது. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது பேஸ்புக் நிறுவனம். 

நம்பகமான செய்திகளைப் பெறவும், உலகெங்கிலும் உள்ள ஊடகவியலாளர்கள் தங்கள் முக்கியமான செய்திகளை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதையும் நோக்கமாக கொண்டு  புதிய செய்தி பிரிவை அறிமுகம் செய்வது தான் அந்த புது முயற்சி. செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி  செய்ய உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களான  Wall Street Journal, News Corp, Dow Jones, New York Post, the Washington Post போன்ற செய்தி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 

செய்தியை வெளியிட விரும்பும் நிறுவனங்கள் மக்களுடன் நேரடி உறவை ஏற்படுத்த இந்த புது வசதிகள்  உதவும்.மேலும் அதன் உண்மைத்தன்மை உயர்தரமாக  இருப்பதையும் இந்த புது வசதி உறுதி செய்கிறது.  பயனர்களுக்கு எந்த வகையிலான செய்திகள் தேவைப்படுகின்றன என்பதை செயற்கை நுண்ணறிவு மற்றும் இதற்கென சிறப்பாக நியமிக்கப்பட உள்ள செய்தி ஆசிரியர்கள் தீர்மானிப்பார்கள்.   செய்தி சேனல்களில் வரும் தலைப்புச் செய்திகளைப் போலவே,  10 முக்கிய தலைப்புச் செய்திகளைக்  கொண்ட ஓர் பகுதி இங்கு  பிரதானமாக இருக்கும். 

இனி மக்கள், செய்திகளை தெரிந்துகொள்ள தொலைக்காட்சிகள், யூடியூப், செய்தி நிறுவனங்களின் பேஸ்புக் பக்கங்களை தேடவேண்டியதில்லை.  பேஸ்புக் செய்தி சேவையின் மூலமாக பேஸ்புக்கே இனிமேல் நமக்கு செய்தி வாசிக்கப்போகிறது. இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த சேவைக்காக சுமார் 30 லட்சம் டாலர் பணத்தை முதலீடு செய்யவுள்ளது பேஸ்புக். செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களுக்கு பேஸ்புக் ஓர் குறிப்பிட்ட கட்டணத்தையும் வழங்கும். 

செய்தி சேனல்களில் ப்ரேக்கிங்கை பார்த்து தங்களை அப்டேட் செய்துகொண்ட சமூகம் இனிமேல் பேஸ்புக்கிலேயே செய்திகளை பார்த்து, கேட்டு தெரிந்துகொள்ளப்போகின்றனர். இனி அடுத்து வரும் சந்ததிகளும் செய்திகளுக்காகவும் பேஸ்புக்கை  உபயோகப்படுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மார்க் ஜீகர்பெர்க்.

செவ்வாய், 22 அக்டோபர், 2019

கருப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான ஆஸ்திரேலிய பத்திரிகைகள்- பின்னணி இதுதான்

ஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கருப்பு மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன.

சிட்னி:

போர்க்குற்றங்கள், ஆஸ்திரேலிய குடிமக்களை உளவு பார்த்த அரசு நிறுவனம் என இரு கட்டுரைகள் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளில்  சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முக்கிய பத்திரிக்கை நிறுவனமான ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஏபிசி) மற்றும் நியூஸ்  கார்ப் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் வீடு ஆகிய இடங்களில் கடந்த ஜூன் மாதம் போலீசார் சோதனை நடத்தினர்.

அரசின் இரு முக்கிய விவகாரங்களை வெளியிட்டதால் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக பத்திரிக்கை நிறுவனங்கள் குற்றம்  சாட்டின. பத்திரிக்கைகளுக்கு அரசு ஆதரவு அளிக்கிறது, ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றே என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பத்திரிக்கை சுதந்திரம் ஒடுக்கப்படுவதாகவும், ‘இரகசிய கலாச்சாரம்’ உருவாகி வருவதாகவும்  ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விளைவாக ஆஸ்திரேலியாவில் இன்று முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும்  தங்களது முதல் பக்கத்தில் உள்ள செய்தியை கருப்பு மை பூசி மறைத்து வெளியிட்டுள்ளன. இதற்கு பல்வேறு வானொலி மற்றும்  தொலைக்காட்சி நிறுவனங்களும் ஆதரவு அளித்துள்ளன.

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பத்திரிக்கை நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மைக்கேல் மில்லர், அவரது பத்திரிக்கை, தி  ஆஸ்திரேலியன் மற்றும் தி டெய்லி டெலிகிராப் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் அச்சிடப்பட்ட கறுப்பு நிற முதல் பக்கத்தின் படத்தை  (போட்டோவை) ட்விட்டரில் பதிவு செய்தார்.

மேலும், ‘என்னிடமிருந்து எதை மறைக்க முயற்சிக்கிறார்கள்?’ என அரசாங்கத்திடம் கேள்வி கேட்குமாறு அவர் பொதுமக்களை  கேட்டுக்கொண்டார்.

ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் கூறுகையில், ‘ஆஸ்திரேலியா உலகின் மிக ரகசியமான ஜனநாயகமாக மாறும் அபாயம்  உள்ளது’ என தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

இந்த சம்பவத்தை குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஊடக அமைப்புகளுக்கு என்ன வேண்டும்? கடந்த  இரண்டு தசாப்தங்களாக இயற்றப்பட்ட கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் புலனாய்வு பத்திரிகை துறைக்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளன. இது பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது என்கின்றனர்.

பத்திரிகை சுதந்திர விசாரணையின் முடிவுகள் அடுத்த ஆண்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பத்திரிகை சுதந்திரம் ஆஸ்திரேலியாவின் ஜனநாயகத்திற்கு முக்கியமானது, ஆனால் சட்டத்திற்கு உட்பட்டது. அதில் நான்,  பத்திரிகையாளர், வேறு யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்,” என்றார்.

'இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜன்சி கால ஊடக வெளியீடுகளை நினைவுபடுத்திய ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள். இதே போல் அன்றும் இந்திய பத்திரிக்கைகள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டன'
In India, "the Emergency" refers to a 21-month period from 1975 to 1977 when Prime Minister Indira Gandhi had a state of emergency declared across the country.

Related Tags :
Australia | Australian newspapers | black out | ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் | கருமைநிற பக்கம்