திங்கள், 30 ஜூலை, 2018

தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு!

துபாய் நாட்டில் நடைபெற்ற பன்முக கலாச்சார திருவிழாவில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

துபாய் அரசின் இஸ்லாமிய சமய அறநிலையத்துறை சார்பில் இந்த திருவிழா நடைபெற்றது. இதில், அரபி, ஜெர்மன், ஸ்பானிஷ், ருமேனியா, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மொழி, மற்றும் கலாச்சாரங்களின் அடிப்படையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இந்த கண்காட்சியில் தமிழ் கலாச்சாரத்திற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தமிழ் அரங்கில் தமிழ் மொழியின் வரலாறு, வளர்ச்சி, தமிழர் நாகரிகம், தமிழ் கவிஞர்கள், தமிழர்கள் பண்பாட்டு பொருட்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதில் 2-ஆவது பரிசு பெங்காலிக்கும், 3-ஆவது பரிசு எத்தியோப்பியாவுக்கும் வழங்கப்பட்டது.

வெள்ளி, 27 ஜூலை, 2018

உலகின் மிக அழகிய சிறுமி

நைஜீரியன் சிறுமியின் புகைப்படம்...!

Angelic five-year-old Nigerian, Jare, is ‘world’s most beautiful girl’

உலகின் மிக அழகிய சிறுமி என்று அனைவராலும் பேசப்பட்டு வருகிறார் நைஜீரியாவை சேர்ந்த 5 வயது சிறுமி ஜேர் இஜலானா (Jare Ijalana ).

சமூக வலைதளமான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில், ஜேரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தார் புகைப்படக்கலைஞர் மோஃபி பமூயிவா (Mofe Bamuyiwa). “அவள் ஒரு சிறுமி.... இருந்தாலும் அவள் ஒரு தேவதை” என்று ஜேரின் ஒரு புகைப்படத்திற்கு மோஃபி தலைப்பிட்டிருந்தார்.

பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அதிக மக்களால் லைக்  செய்யப்பட்டு, தற்பொழுது 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஜேரின் புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளனர்.

ஜேரின் கருமை நிறமும், அழகான கண்களும், அடர்ந்த முடியும் அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. பொம்மை போன்று மிக அழகாக இருக்கும் ஜேரின் புகைப்படத்திற்கு பெரும்பாலானோர் உலகின் மிக அழகிய சிறுமி என்பது போல கருத்து பதிவிட்டுள்ளனர்.

குழந்தைப்பருவத்திற்கும் இளமைப்பருவத்திற்கும் இடையிலான ஒரு விஷயத்தை புகைப்படம் எடுக்க முயற்சித்ததாகவும், ஜேரின் இயற்கையான அழகை அப்படியே படம்பிடிக்க வேண்டுமெனெ நினைத்ததாகவும் ஜேரை புகைப்படம் எடுத்த மோஃபி தெரிவித்தார்

21-ம் நூற்றாண்டிலேயே மிக நீளமானது: இன்று முழு சந்திர கிரகணம்: 103 நிமிடங்கள் நீடிக்கும்

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணம் இரவு 1 மணிக்கு தொடங்குகிறது. 103 நிமிடங்கள் தொடர்ந்து நீடிக்கிறது. அதிகாலை 2.43 மணிக்கு முடிக்கிறது. அப்போது நிலா, ரத்த சிவப்பு நிறத்தில் காட்சி தரும்.

முன்னதாக இந்த சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு பகுதி சந்திர கிரகணமாக தொடங்குகிறது.

இந்த 21-ம் நூற்றாண்டின் மிக நீளமான முழு சந்திர கிரகணம் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்த அம்சம்.

மேலும், புதன், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய 5 கிரகணங்களும் ஒன்றாக அணி வகுத்து வருகிற தருணத்தில் இந்த முழு சந்திர கிரகணம் நிகழ்வது சிறப்பு பெறுகிறது.

அடுத்து இதே போன்றதொரு நீளமான முழு சந்திர கிரகணம் 2029-ம் ஆண்டு, ஜூன் மாதம் 25-ந் தேதி நிகழும். அதுவும் 103 நிமிடங்கள் நீடிக்கும்.

இந்த சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு ஏற்படாது.

இதுபோன்ற ஒரு முழு சந்திர கிரணம் மீண்டும் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 21-ந் தேதி இரவில் நிகழ உள்ளது.

வியாழன், 26 ஜூலை, 2018

இம்ரான் கான் - விளையாட்டுத் துறையில் இருந்து அரசியல்

பாகிஸ்தான் அணி, 1992ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இம்ரான் கான், இன்று அந்நாட்டின் பிரதமராகும் நிலைக்கு உயர்ந்துள்ளார். விளையாட்டுத் துறையில் இருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கியது எப்படி என்பதை இனி பார்க்கலாம்.

1992ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் Imran Ahmad Khan Niazi.அப்போது பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரிஃப். ஊழல் புகாரில் சிக்கி நவாஸ் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்க இருக்கிறார் இம்ரான் கான்.

1952ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் உயர் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் இம்ரான்கான். அமைதியான சிறுவனாக வளர்ந்த இம்ரான் கான், பாகிஸ்தானில் பள்ளிப் படிப்பையும், இங்கிலாந்தில் கல்லூரி படிப்பை முடித்தார். தனது 16 வயது வயதில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இம்ரான், 1971ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார்.

மெல்ல மெல்ல அணியில் தனது இருப்பை பலப்படுத்திய இம்ரான் தனது 30வது வயதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி 1992ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அதே ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற இம்ரான், 1996ம் ஆண்டு Pakistan Tehreek-e-Insaf என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 

1997ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான் இரண்டிலுமே தோல்வியடைந்தார். 1999ம் ஆண்டு ராணுவ உதவியுடன் நவாஸ் ஷெரிஃப்பை ஆட்சியிலிருந்து அகற்றிய முஷாரஃப்பின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார் இம்ரான். ஆனால், ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யாமல் 2007ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடத்த உத்தரவிட்ட முஷஃரப்பின் நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, இம்ரான்கான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 2011ம் ஆண்டு ஆளும் கட்சிக்கு எதிராக லாகூரில் பிரமாண்ட பேரணியை நடத்தி தனது பலத்தை நிரூபித்தார். இதனால், பாகிஸ்தானின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக இம்ரான் கான் வளர்ந்து விட்டதாக பத்திரிகைகள் எழுதின. பாகிஸ்தான் மண்ணில், தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், அமெரிக்க போர் விமானங்கள் நடத்தும் தாக்குதல்களைக் கண்டித்து ஊர்வலம் நடத்தினார் இம்ரான்.

2013ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சூறாவளி பிரசாரம் செய்தார் இம்ரான். ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானின் பழங்குடியின பகுதிகளில் அமெரிக்கா போர் விமானத் தாக்குதலை முடிவிற்கு கொண்டு வந்து அமைதியை நிலை நாட்டுவேன் என்றார். அந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சியால் 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது இம்ரான் கானின் Pakistan Tehreek-e-Insaf. 

2013ம் ஆண்டு தேர்தலில் முறைகேடு செய்து நவாஸ் வெற்றி பெற்றதாகவும் எனவே நவாஸ் ஷெரிஃப் பதவி விலகக் கோரியும் உரிய விசாரணை நடத்தக்கோரியும் லாகூரிலிருந்து இஸ்லாமாபாத் வரை ஊர்வலம் சென்றார் இம்ரான். 2013ம் ஆண்டுக்குப் பிறகு இம்ரான்கானின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் காணப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் கருத்துகளை ஏற்கும் விதமாக கூட்டங்களில் பேசினார் இம்ரான்கான். பாகிஸ்தான் ராணுவமும் அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியதாகவும் கூறப்படுகிறது.

நவாஷ் ஷெரிஃப் மற்றும் பூட்டோ குடும்பத்தினர் மீது அடுத்தடுத்து வெளியான ஊழல் புகார்களும், இம்ரான்கானின் அரசியல் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்தது. வெளிநாட்டில் சொத்து வாங்கிய புகாரில் நவாஸ் ஷெரிஃபும், ஊழல் குற்றச்சாட்டில் ஆசிஃப் அலி சர்தாரியும் சிறையில் அடைக்கப்பட்டதால், இம்ரான் கானுக்கு அரசியல் ரீதியான வாய்ப்புகளை அதிகரித்தன.

நிர்வாக ரீதியாக பாகிஸ்தானை எப்படி வழிநடத்துவார் என்ற கேள்விகள் இருந்தாலும், ஊழல் கறை படாத அரசியல் தலைவர் என்ற காரணம், அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு பற்றிய அடிப்படைத் தகவல்கள்

➤பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்பு தான் பிரிக்ஸ்

➤5  நாடுகளின் முதல் எழுத்தை கொண்டு ஆங்கிலத்தில் BRICS என்ற பெயர் உருவாக்கப்பட்டது

➤சர்வதேச பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளுக்கு போட்டியாக பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது

➤உலக மக்கள்தொகையில் 40% பேர் பிரிக்ஸ் நாடுகளில் உள்ளனர்

➤உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% பிரிக்ஸ் நாடுகளின் பங்களிப்பு

➤உலக வங்கி, IMFக்கு போட்டியாக நியூ டெவலப்மெண்ட் பாங்க் என்ற பெயரில் வங்கி தொடங்கப்பட்டுள்ளது

➤சர்வதேச அரங்கில் வளர்ந்த நாடுகளின் ஆதிக்கத்திற்கு சவாலாக பிரிக்ஸ் அமைப்பு பார்க்கப்படுகிறது 

➤பிரிக்ஸ் அமைப்பின் 10-வது மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ளது

➤சில நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா வர்த்தக போர் தொடுத்துள்ள நிலையில் பிரிக்ஸ் மாநாட்டு முக்கியத்துவம் பெறுகிறது

பேய்ப்படம் 

சுவாரசியமான விஷயங்களை விரும்புபவர்கள், பேய் படம் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். பயந்தாலும் கூட பேய் படம் பார்ப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

பேய் கனவை ஏற்படுத்துவது, பயமுறுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்கு சில நன்மைகளும், பேய்ப்படம் பார்ப்பதன் மூலம் ஏற்படுகிறது.

பேய் படம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

1. கலோரிகளை குறைக்கிறது:

2012ம் ஆண்டு, லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில், 10 நபர்களை வேறு வேறு பேய் படங்களை பார்க்கச் செய்தது. அதிக பயமாக இருக்கும் பேய் படத்தை பார்த்த நபர் ஒருவர் அதிகமாக குதித்ததாலும் கத்தியதாலும் அவருடைய கலோரிகள் அதிக அளவில் குறைந்தது தெரியவந்தது. இதனால், பேய் படம் பார்ப்பதன் மூலம் நம் உடலில் உள்ள கலோரிகள் குறைகின்றது என ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்தனர்.

2. நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது:

பேய் படம் பார்ப்பது, சிறிது நேரத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பயமான காட்சிகளை பார்க்கும்பொழுது ரத்த ஓட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது. இதனால், அந்த குறிப்பிட்ட சமயத்தில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

3. மனநிலையை தீர்மானிக்கிறது:

பேய் படங்களை பார்த்த பின்னர், மகிழ்ச்சியாகவும், நிம்மதியுடனும் இருக்கமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை அனைத்தும், பேய் படம் பார்க்கும்பொழுது பயப்படுபவர்களுக்கு மட்டுமே நிகழும். அதனால், பேய் படம் பார்ப்பது மட்டுமல்லாமல், அந்த பேய் படத்தை பார்த்து பயப்பட வேண்டும்.

ஸ்காட்லாந்து நாட்டின் டோமிச் நகரில் 350க்கும் மேற்பட்ட கோல்டன் ரெட்ரீவர்ஸ் நாய்கள் ஒரே இடத்தில் கூடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

நாய் இனங்களில் பலவகை உண்டு. இதில் லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, பக் போன வகை நாய்கள் நமக்குத் தெரிந்தவை. நமக்குத் தெரியாத இன்னும் பல வகை நாய் இனங்கள் உலகம் முழுக்க உள்ளன. இதில் கோல்டன் ரெட்ரீவர்ஸ் என்ற நாய் இனம், 19ம் நூற்றாண்டில் உருவானது. 

அந்த நாய் இனம் உருவாகி தற்போது 150 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனவே இந்த 150வது ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில், கோல்டன் ரெட்ரீவர்ஸ் எனும் இந்த வகை நாய்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டன. கோல்டன் ரெட்ரீவர்ஸ் கிளப் மூலம் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. இதைப் பார்த்து அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் குதூகலமடைந்தனர்

புதன், 18 ஜூலை, 2018

முதுமைக் காதல்

மெருகூட்டும் உன் கன்னங்கள்
மருவற்ற முகத்திற்கு
அழகு சேர்க்க!!
 
மொழிபேசும் உன் இதழை
மெய்மறந்து நான் பார்த்திருக்க
வளையோசை கேட்டுக்கொண்டே
மடிமீது தலை சாய்க்க!!
 
அசைந்தாடும் கூந்தல்; அதில்
அலைபாயும் காற்று
இசையாவும் உந்தன் கால்கொலுசில்
விளையாடும் அழகே!!
 
கதைபேசும் கவிதையே
கைகோர்க்கும் தாரகையே
விலைபேசும் உன் கண்ணோடு
உரையாடல் நான் தொடங்க!
 
வார்த்தைகள் தடுமாறி
குறிலும் நெடிலுமாய் முடிவுற்று போயின!
எதைச் சொல்லி மறைப்பேன் – நான்
உன் சிரிப்பொலியில் வீழ்ந்ததை!
 
வயதானது கூட தெரியவில்லை
வருடங்கள நாட்களாய்ப் போனதடி!
தடுமாறி நான் எழுகையில்
கைத்தடியாய் உன் கரங்களடி!!