வியாழன், 12 மார்ச், 2020
சிக்மண்ட் ஃபிராய்ட் : சிறகுகள் விரிக்கும் கனவுகளின் ஆதிமூலத்தை அகழ்ந்தெடுத்தவர்!
நரம்பியல், உளவியல் மருத்துவம் மற்றும் உளவியல் பகுப்பாய்வு போன்ற துறைகளிலும் தனது ஆராய்ச்சிகள் மூலமாகவும், ஆய்வுகள் வழியாகவும் தனக்கென தனியிடத்தை சிக்மண்ட் ஃப்ராய்ட் உருவாக்கிக் கொண்டார்.
உளவியல் சிக்கலுக்குள்ளானவர்களை தனித்து பார்த்த அன்றைய மருத்துவ முறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஃபிராய்ட், உளவியல் சிக்கலுக்கு உள்ளானோருடன் கலந்துரையாடல் மூலம் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து சிகிச்சை அளிக்கும் உளவியல் பகுப்பாய்வு முறையை உருவாக்கி ஃப்ராய்ட் புகழ் பெற்றார். உளவியல் துறையில் தனது பங்களிப்பிற்காய் 1930ஆம் ஆண்டிற்கான கோதே பரிசை பெற்றார்
1881ஆம் ஆண்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் மருத்துவப்பட்டம் பெற்ற ஃப்ராய்ட், 1885ஆம் ஆண்டு நரம்பு நோயியல் பிரிவில் சிறப்பு பட்டம் பெற்று 1902ஆம் ஆண்டு இணை பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.
கட்டற்ற தொடர்பு மற்றும் இடமாற்றீடு போன்ற கோட்பாடுகளை கொண்டுவந்து உளவியல் மருத்துவத்தில் புதிய கண்ணோட்டத்தை உருவாக்கினார் ஃபிராய்ட். இடிபஸ் மனப்பான்மை போன்ற பாலின உணர்வு ரீதியான உணர்ச்சிகளை ஆராய்ந்து பாலின பாகுபாடு குறித்த பார்வையை மறுவரையறை செய்தார்.
ஆழ்மனதில் அமுக்கப்பட்ட எண்ணங்களே வண்ணம் பெற்று கனவுகளாக வருகிறது என கூறினார் ஃப்ராய்ட். “லிபிடோ” என்னும் உணர்வுதான் எதிர்பாலின கவர்ச்சி, திரும்பத் திரும்ப ஒரு செயலை செய்யத் தூண்டும் எண்ணம், வெறுப்பு, ஆவேசம் மற்றும் ஒரு வகையான குற்ற உணர்வுக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறுகிறார்.
ஃப்ராய்ட் உருவாக்கிய இந்த முறைகளின் மருத்துவ நம்பகத்தன்மை, விஞ்ஞான முக்கியத்துவம் மற்றும் சமூகவியல் ரீதியில் இந்த கருத்துக்கள் பெண்ணியத்திற்கு சார்பானவையா அல்லது எதிரானவையா என்பன போன்றவை ஃப்ராய்டியம் குறித்து பெரிதும் விவாதிக்க கூடிய தலைப்புகளாக அமைகிறது. ஆடன் என்னும் கவிஞர் ஃப்ராய்டுக்காக எழுதிய கவிதையில், மக்களின் மனஓட்டத்தை காலநிலையைப் போல விளக்குபவர் ஃப்ராய்டு என புகழாரம் சூட்டியுள்ளார்.
செரிப்ரல் பால்சி என்னப்படும் நோயைப் பற்றியும் அதிகமாக ஆராய்ச்சி செய்தார் ஃப்ராய்ட். குழந்தை பிறக்கும் போது ஏற்படும் பிராணவாயு குறைபாடால் தான் இந்த நோய் வருகிறது என்ற தவறான நம்பிக்கையை உடைத்து, அந்த நோய் இருப்பதற்கான அறிகுறியாகவே குழந்தைப் பிறப்பின் போது உள்ள சிக்கலை பார்த்தார்.
1890 ஆம் ஆண்டில் அதிகமான மக்கள் இளவயதில் ஏற்பட்ட பாலியல் பிரச்சினைகளை பற்றி கூறியதால் அது குறித்த ஆய்வில் ஈடுபடும் போது இடிபஸ் மனப்பான்மையை முக்கியத்தன்மையை கண்டறிந்தார். கொகைன் மன மற்றும் உடல் ரீதியான பல உபாதைகளுக்கும் தீர்வாக அமையும் என நம்பிய ஃப்ராய்ட், 1884ஆம் ஆண்டு “On Coco" என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.
இதே போல 1883 முதல் 1887 ஆம் ஆண்டு வரை எழுதிய கட்டுரைகளில் கொகைன் ஒரு மன அழுத்தத்தை ஒழிக்கும் நிவாரணி என கூறினார். கொகைன், மார்ஃபைன் என்னும் போதை பழக்கத்தை மாற்ற வல்லதாக இருக்கும் என்ற நோக்கில் ஃப்ராய்ட் செய்த சோதனை தோல்வியில் முடிந்த காரணத்தால், அறிவியல் பூர்வமாக அவரின் கொகைன் தொடர்பான கூற்றை நிரூபிக்க முடியவில்லை.
நாம் மனதில் நினைக்கும் எண்ணங்களை நாம் மறந்தாலும், ஆழ்மனதில் தங்கியுள்ள அது கனவுகளாக வருவதாகவும், சுயநினைவுகளில் இருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து செயல்பட்டு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் வழியாக வெளிப்படும் எனவும் ஃப்ராய்ட் கூறினார். செயற்கையாக அந்த எண்ணங்களை வெளிக்கொண்டுவர மனோவசியம் (hypnosis) பயன்படுகிறது. இதை குறித்து ஃப்ராய்ட் "The Interpretation of Dreams" மற்றும் "Jokes and their Relation to the Unconscious" என்னும் நூலில் விளக்கமாக கூறியுள்ளார்.
பாலுணர்வு தொடர்பான அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் இடிபஸ் மனப்பான்மை அடித்தளமாக அமைந்துள்ளது. “Eros"என்னும் உணர்வு வாழ்வதற்கான உத்வேகத்தை தருவதாகவும் "Thanatos" என்னும் உணர்வு நம் பிரச்சினையை முழுமையாக குறைக்க வேண்டும் என்னும் எண்ணத்தையும் தருவதாக கூறுகிறார்.
1917ஆம் ஆண்டு "Mourning and Melancholia" என்னும் கட்டுரையில் கவலைப்படுவதின் வகைகளைக் குறித்து கூறியுள்ளார். இவர் கூறிய சில கருத்துக்கள் ஆணாதிக்கம் மிகுந்ததாக கூறி பெண்ணியவாதிகள் எதிர்த்தனர். மனிதர்கள் கடவுளை பின்பற்றுவது, அவர் மீது உள்ள நம்பிக்கையினால் என கூறுவதை விட தன்னை சுற்றியுள்ள உலகத்தின் மீதான பயத்தினால் தான் என்பதே கடவுள் மீதான ஃப்ராய்டின் கருத்து.
1938ஆம் ஆண்டு நாசிப்படைகளிடம் இருந்து தப்பிக்க ஆஸ்திரியாவை விட்டு வெளியேறிய அவர், 1939ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். உளவியல் துறையில் தான் ஏற்படுத்திய மாபெரும் தாக்கத்திற்காக இன்றளவும் சிக்மண்ட் ஃபிராய்ட் நினைவுக் கூறப்படுகிறார்
புதன், 11 மார்ச், 2020
பேச்சுவார்த்தைக்காக ரஷியா வந்த துருக்கி அதிபரை அவமதித்தாரா புதின்?
கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் எதிரொலி: உலக பொருளாதாரத்துக்கு ரூ.148 லட்சம் கோடி இழப்பு - ஐ.நா. கணிப்பு
புதன், 29 ஜனவரி, 2020
விண்வெளித்துறை சாதனையில் உயர... உயர... பறக்கும் இந்தியா
திங்கள், 27 ஜனவரி, 2020
ரஜினி... ஓர் இளைஞர், “யாரு நீங்க?” என்று கேட்கிறார்.
வைரஸ் என்றால் என்ன?
- லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.
- 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இபோலா தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேரை கொன்றது.
- 2002ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறிப்பட்டது.
- சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர்.
- 2015ல் பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
- ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.
- இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர். முக்கியமாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இது பரவியது.
பாம்புக் கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவலால் சைவத்துக்கு மாறும் சீனர்கள்!
வியாழன், 19 டிசம்பர், 2019
கடலும் கடல் சார்ந்த உயிரினங்களும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்
கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பேராபத்துகள் விலைக்கு வாங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களால் கடலும் கடல் சார்ந்த உயிரினங்களும் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
2050ம் ஆண்டில் உலக கடற்பரப்பில் மீன்களை விட பிளாஸ்டிக் பொருட்களே அதிகமாக காணப்படும் என்றால் நம்ப முடியுமா..?? ஆம்.. உலகம் அதை நோக்கி தான் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச பொளாதார மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எண்ணற்ற கடல் வளங்களை தன்னுள் கொண்டு இயற்கையின் அவதாரமாக திகழும் கடல் தான் உலகின் 71 சதவீத பரப்பளவை நிரப்பியுள்ளது. வெறும் 29 சதவீத நிலப்பரப்பில் வாழும் மனிதர்கள் 71 சதவீத கடற்பரப்பை பிளாஸ்டிக்கை கொண்டு நிரப்பினால் உலகம் என்னவாகும்..? தென் ஆப்பிரிக்காவின் டர்பன் கடற்கரையில் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் அலையில் அடித்து வரப்படும் காட்சியே அதற்கு சாட்சி..!
ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது, நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு லாரி பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொட்டுவதற்குச் சமம். அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள் ஆறுகள் ஊடாகவே கடலில் கலக்கின்றன. எந்த வித சிந்தனையுமின்றி நாம் தூக்கி வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல்வாழ் உயிரினங்களை காவு வாங்குவதோடு, கடல் மீன்களை உட்கொள்ளும் நமக்கே மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் அப்படியே கடலில் மிதப்பது அல்ல. ஒருசில பிளாஸ்டிக்குகள் நுண் துகள்களாக (MICRO, NANO PLASTICS)மாறிவிடுகின்றன. இதனை உட்கொள்வதால் 800 வகையான கடல் வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கலிஃபோர்னியா - ஹவாய் இடையேயான கடற்பரப்பில் உள்ள பிளாஸ்டிக் நுண் கழிவுகள் மட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ், மியாமி, நியூயார்க் நகரங்களை விட ஏழு மடங்கு அதிகம்.
ஆமைகள், திமிங்கலங்கள் முதல் கடற்பரப்பு மேல் பறக்கும் பறவைகள் வரை பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்ளுவதால் தொண்டைகள் மற்றும் வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக்குகள் சிக்கி உயிரிழக்கின்றன. அண்மையில் ஸ்காட்லாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது அதன் வயிற்றில் இருந்து 100 கிலோ எடைக்கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. திமிங்கலத்தின் உயிரிழப்புக்கு வயிற்றுப் பகுதியில் அடைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தின.
உலக வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஒருப்பக்கம் இருந்தாலும் கடலும் கடல் சார்ந்த வளங்களும் பிளாஸ்டிக் எனும் குண்டுகளால் நாள்தோறும் துளைக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு அரசும் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றன. இருப்பினும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கண்ணுக்குத் தெரியாத பல உயிர்கள் ஆபத்தில் மூழ்குகின்றன.
என்ன தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு முடிந்தளவு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வளங்களை பாதுகாப்பதே மனிதர்களின் தார்மீக பொறுப்பு!



