- அரசியல் குழப்பங்கள்
- பொருளாதார வீழ்ச்சிகள்
- கடும் வரட்சி
- அதிக போக்குவரத்து விபத்துக்கள்
- போதைபொருள் கடத்தல்கள்
- கொலைகள்
- கொள்ளைகள்
- மோசடிகளும், ஊழல்களும்
- கொடூரமான குண்டுவெடிப்புக்கள்
மனித நேயத்தை வளர்ப்போம், வரும்முன் காப்போம்...
பார்க்கும் கோணங்கள் வேறு… பறக்கும் திசைகள் வேறு…!!! - அமலதாஸ் எல்றோய்
இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் முக்கிய நிர்வகைகள் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான இந்தியர்கள் 5 பேரில் இருவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்தவர்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மஜக நிர்வாகிகள் 5 பேர் இலங்கை சென்றதாகவும், அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்த நிலையில் தற்போது இந்த செய்தி வெளியாகியுள்ளது.
நேற்று கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை இன்று மதிய நிலவரப்படி 300 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பில் காயமடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் நேற்று ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயத்தில் மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் இந்தியர்கள் மூன்று பேர் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பலியாகினார். மேலும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீவிரவாத தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக 8 முறை குண்டுகள் வெடித்தது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா , அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கண்டணத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் பெண் கல்விக்கு ஆதரவாக போராடி , தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து மீண்டு, தற்போது லண்டனில் வசித்து வரும் மலாலா உலக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார். இவர் இலங்கை தீவிரவாத தாக்குதல் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். இதில் அவர் கூறுகையில் ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் இவ்வேளையில் இலங்கையில் தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் , "தீவிரவாதிகள் ஒருவரையொருவர் நேசிக்க மாட்டார்கள் " .
இதனால் தான் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளதாக மலாலா அவர்கள் தனது டிவிட்டர் வாயிலாக தெரிவித்தார். உலகம் முழுவதும் தீவிரவாதத்தை அடியோடு ஒழித்து அமைதி என்னும் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பது அனைத்து மக்களின் கருத்தாக உள்ளது.
800 வருட பழமையான பாரிஸ் தேவாலயம் எரிந்து இலங்கைக்கு சொன்ன செய்தி. '900' வருட பகைக்கு சம்பந்தமில்லாமல் நீ இலக்காவாய் என்று...
எல்லை தாண்டும் சிலுவை யுத்தம். அவற்றுக்கான வயது 900+.
விரைவில் அலுவல அறிக்கைகளை சர்வதேச தீவிரவாதிகளே வெளியிடுவார்கள். காரணங்களாய் 'நியுசிலாந்து' ஆன்மாக்களுக்காக பரிந்துரைப்பார்கள்.
அதிக சுற்றுலா பயணிகள் வரும் சிறு தேசத்தில் பிற சக்திகளின் அழிவுக்கான களமாக ஏன் தெரிவு செய்யப்பட்டது. 2002 இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் நடந்த குண்டுவெடிப்பை ஆராயுங்கள்.
பல்லின மக்கள் வாழும் தேசம், முரண்பாடுகளை கடந்து ஜக்கியப்படும் சந்தர்ப்பங்களை விதைத்த சர்வதேச தீவிரவாதம், இது அரசியலல்ல. மனிதர்களுக்காக பிராத்திப்போம்!
www.amalathaselroy.blogspot.com
'10,917 km' க்கான எதிர்வினைகளா?
'5,697 km' க்கான
10ம், 12ம் நூற்றாண்டு இடைவெளிகளின் களமாற்றங்களா?
Srilanka...!
91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் சிறந்த படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்ற விழாவை தொகுப்பாளர் இல்லாமல் பிரபலங்கள் தொகுத்து வழங்கினர்.
சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது, Roma திரைப்படத்தை இயக்கிய Alfanzo Cuaron-க்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பொஹிமியான் ரப்சோடி படத்தில் நடித்த ரமி மாலிக்குக்கு வழங்கப்பட்டது. இதேபோன்று, சிறந்த நடிகைக்கான விருது ”தி ஃபேவரைட்” படத்தில் நடித்த ஒலிவியா கால்மேனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த கேமரா ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருது "ரோமா" திரைப்பட ஒளிப்பதிவாளர் அல்ஃபோன்சோ குவாரானுக்கு வழங்கப்பட்டது. இந்த திரைப்படம் 10 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
சிறந்த படத்தொகுப்பான விருது போகிமியான் ரப்சோடி திரைப்படத்தில் பணியாற்றிய ஜான் ஓட்மேன் என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த SOUND EDITING-க்கான ஆஸ்கர் விருதையும் “போகிமியான் ரப்சோடி” படம் தட்டிச் சென்றது. இதேபோன்று, சிறந்த SOUND MIXING-க்கான விருதையும் “போகிமியான் ரப்சோடி” வென்றது.
சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை மெக்சிகோ திரைப்படமான ரோமா தட்டிச் சென்றது. வெனிஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் லயன்' பரிசு பெற்ற ரோமா, ஆஸ்கர் விழாவில் வெளிநாட்டு திரைப்படத்தை வெல்லும் ஏன ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை VICE திரைப்படம் படம் தட்டிச் சென்றது. சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது "Black Panther" படத்திற்காக ரூத் கார்ட்டருக்கு வழங்கப்பட்டது. விருதை ரூத் கார்ட்டர் ஆனந்த கண்ணீருடன் பெற்றுக் கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் Black Panther தட்டிச் சென்றது.
சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது, IF BEALE STREET COULD TALK படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ரெஜினா கிங் என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருதை GREEN BOOK திரைப்படத்தில் நடித்த மகெர்ஷலா அலி வென்றார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது கடந்தாண்டு வெளியான SPIDER-MAN INTO THE SPIDER VERSE திரைப்படத்துக்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருது போ (bao) திரைப்படத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த லைவ் ஆக்சன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது SKIN படத்திற்கு வழங்கப்பட்டது.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருது "ஃபர்ஸ்ட் மேன்" படத்திற்காக பால் லாம்பெர்ட், இயான் ஹண்டர், டிரிஸ்டன் மைல்ஸ், ஜே.டி.ஸ்ச்வாம் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.
உண்மை கதையை மையமாக கொண்டு உருவான க்ரீன் புக் திரைப்படத்துக்கு சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதும், பிளாக் க்ளான்ஸ்மேன் திரைப்படத்துக்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதும் வழங்கப்பட்டது.
#Oscars2019: India-based film '#Period. End of Sentence' wins Documentary Short Subject
தமிழர் 'அருணாச்சலம் முருகானந்தம்' பற்றிய குறும்படம் ஆஸ்கரை வென்றது.🏆
மாதவிடாய் காலங்களில் இந்திய பெண்கள் படும் அவதி மற்றும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் குறைந்த விலை நாப்கின் குறித்து பேசும் Period. End of Sentence என்ற சிறந்த ஆவண குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
வட மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் சார்ந்த பிரச்னை பற்றி Period. End of Sentence ஆவணப்படம் பேசுகிறது. இந்தியாவின் ரியல் பேட்மேன் என அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் கண்டுபிடித்த மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் முக்கிய அம்சமாக இந்த ஆவணப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மலிவு விலை நாப்கின் இந்திய கிராமங்களில் உள்ள பெண்களுக்கு எந்த அளவிற்கு உதவியாக உள்ளது என இந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது.
அருணாசலம் முருகானந்தமும் தனது பங்களிப்பு குறித்து இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற இந்த ஆவணப் படத்தின் இரு நிர்வாக தயாரிப்பாளர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த Guneet Monga உள்ளார். ஈரான்-அமெரிக்க பெண் இயக்குநர் Rayka Zehtabchi இதனை இயக்கியுள்ளார்.