புதன், 31 அக்டோபர், 2018

கப்பல் படையும் தமிழர்களும்




கப்பல் கட்டுமானத்தில் சிறந்து விளங்கியவன் தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர்.
கடலில் பயணம் செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்?

காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. உலகின் முதல் கப்பலையும், கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும், அவன் மகன் ராசேந்திர சோழனும் ஆவான்.
கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்கு வருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசா வரும்.
ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும். ஆனால் இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம் கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது.
இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்த போது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன. ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும், மக்களின் பண்பாடும், மொழியும் ஏதாவதொரு வகையில் தமிழின் தாகத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர்.
உதாரணம்:
தமிழா் - மியான்மர்.
சபா சந்தகன் - மலேசியா
ஊழன்,சோழவன்,வான்கர ை,ஒட்டன்கரை, ஊரு - ஆஸ்திரேலியா
கடாலன் - ஸ்பெயின்
நான்மாடல் குமரி - பசிபிக் கடல்
சோழா,தமிழி - மெக்ஸிகோ
திங்வெளிர் - ஐஸ்லாந்து
கோமுட்டி - ஆப்பிரிக்கா.
இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர்.

இதேபோல் தென்பசிபிக்மாகடல், ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கப்பலை ஆராய்ந்துபார்த்தால் அது 2500 வருடங்களுக்கும் மேல் பழமையானது என்றும், இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர்.
நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் உலகில் உள்ள கப்பல் மற்றும், கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன.